செய்திகள் :

குஜராத்தில் தொடரும் கனமழை! உயர் எச்சரிக்கையில் 113 அணைகள் !

post image

குஜராத் மாநிலத்தில், சுமார் 92.64 சதவிகிதம் பருவமழை பொழிவானது பதிவாகியுள்ள நிலையில், 113 அணைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பருவமழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, வட மாநிலங்களின் முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் பருவமழை தொடங்கியது முதல், இன்று (செப்.4) வரை 92.64 சதவிகிதம் மழை பெய்துள்ளது பதிவாகியிருப்பதாக, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதில், அதிகப்படியாக வடக்கு குஜராத்தில் 96.94 சதவிகிதம் பதிவாகியுள்ளது. தொடர்ந்து, தெற்கு குஜராத்தில் 96.91 சதவிகிதம், கிழக்கு - மத்திய குஜராத்தில் 93.79 சதவிகிதம், கட்ச் மாவட்டத்தில் 85.14 சதவிகிதம் மற்றும் சௌராஷ்டிராவில் 84.74 சதவிகிதம் மழை பொழிவு பதிவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் உள்ள மொத்தம் 206 அணைகளில், 113 அணைகளுக்கு உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில், 82 அணைகள் 100 சதவிகிதமும், 68 அணைகள் 70 - 100 சதவிகிதமும் நிரம்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், குஜராத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் சர்தார் சரோவார் அணையானது அதன் முழுக் கொள்ளளவில் 89 சதவிகிதத்துக்கும் அதிகமாக நிரம்பியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த சில நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், வரும் செப்.4 முதல் செப்.7 ஆம் தேதி வரை குஜராத் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கலவர வழக்கில் இம்ரான்கானின் மருமகன் ஷெர்ஷா கானுக்கு ஜாமீன்!

It has been reported that 113 dams are being actively monitored in the state of Gujarat, with about 92.64 percent of the monsoon rainfall recorded.

சுதேசி பொருள்களைப் பயன்படுத்த மாணவர்களுக்கு ஊக்கம்- பிரதமர் மோடி வலியுறுத்தல்

சுதேசி தயாரிப்புகளை ஊக்குவிக்க மாணவர்களை ஆசிரியர்கள் தலைமை தாங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுடன் பிரதமர் நர... மேலும் பார்க்க

காங்கிரஸை போல் நான் செய்திருந்தால் என் தலை முடியைப் பிடிங்கியிருப்பார்கள்! மோடி

காங்கிரஸை போல் வரி விதித்திருந்தால் என் தலை முடியைப் பிடிங்கியிருப்பார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.தில்லியில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர... மேலும் பார்க்க

உக்ரைன் போரை தடுக்கவே இந்தியாவுக்கு வரி - டிரம்ப் பதில்!

உக்ரைனில் போரை அமைதிக்குக் கொண்டுவரவே இந்தியாவுக்கு வரி விதித்ததாக டொனால்ட் டிரம்ப் அரசு தெரிவித்துள்ளது.டிரம்ப் அரசின் வரிவிதிப்புக்கு எதிரான அந்நாட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்ட... மேலும் பார்க்க

மேற்கு வங்க சட்டப்பேரவையில் அமளி: 5 பாஜக எம்எல்ஏ-க்கள் இடைநீக்கம்!

மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவையில் நடைபெற்ற அமளியைத் தொடர்ந்து 5 பாஜக உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தொடர், கடந்த செவ்... மேலும் பார்க்க

மணிப்பூரில் அமைதி திரும்புகிறதா? மத்திய அரசுடன் புதிய ஒப்பந்தம்!

மணிப்பூரில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் வன்முறையில் முடிவு எட்டப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்ல வாய்ப்புகள் உள்ளதாகக்... மேலும் பார்க்க

கலவர வழக்கில் இம்ரான்கானின் மருமகன் ஷெர்ஷா கானுக்கு ஜாமீன்!

மே 9 கலவர வழக்குத் தொடர்பாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் மற்றொரு மருமகன் ஷெர்ஷா கானுக்கு பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது ஊழ... மேலும் பார்க்க