செய்திகள் :

தீவிர அரசியலில் களமிறங்கும் விஜய்! சுற்றுப்பயணம் எப்போது? எங்கு தொடங்கிறார்?

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தேர்தலையொட்டிய தனது சுற்றுப்பயணத்தை வரும் செப். 13 ஆம் தேதி திருச்சியில் தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்வைத்து அரசியல் தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் தன்னுடைய சுற்றுப்பயணத்தை செப். 13 ஆம் தேதி திருச்சியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் அமைப்பு ரீதியாக ஒரு நாளைக்கு இரண்டு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, மதுரை பாரபத்தியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் விஜய் பேசியது பேசுபொருளானது.

மேலும், சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்துக்கு தூய்மைப் பணியாளர்களை அழைத்து, விஜய் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தீவிர அரசியல் களத்தில் இறங்கினார்.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்யின் அரசியலில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: செப்.7-ல் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்!

tvk leader Vijay will begin his election tour in Trichy on September 13, according to reports.

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: நவ. 30-க்குள் அமல்படுத்த உத்தரவு!

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை நவ. 30-க்குள் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மது அருந்துபவா்கள் மதுபாட்டில்க... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரிகளில் சேர விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு!

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு வசதி செப். 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அம... மேலும் பார்க்க

அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்: அமல்படுத்த உத்தரவு!

தமிழக அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான பிடிவாரண்ட்டை அமல்படுத்த சென்னை சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.கடந்த 2007 முதல் 2009 வரை அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1... மேலும் பார்க்க

பாஜகவின் குரலாக மாறிவிட்டார் இபிஎஸ்: தங்கம் தென்னரசு

பாஜகவின் குரலாக மாறிவிட்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். நாட்டில் ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மாற்றம் செய்து மத்திய அரசு நேற்று(செப். 3) அறிவிப்பு வெள... மேலும் பார்க்க

அறிவியல் பூர்வமான ஆய்வுகளே சமூக மாற்றத்திற்கான வழி: விஞ்ஞானி அசோக்குமார்

திருப்பூர்: அறிவியல் பூர்வமான ஆய்வுகளே சமூக மாற்றத்திற்கான வழி என்று விஞ்ஞானி அசோக்குமார் தெரிவித்தார்.திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை, வானவில் மன்றம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் காங்கேய... மேலும் பார்க்க

தொடர் விடுமுறை: அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்து பறிமுதல்!

மிலாடி நபி மற்றும் தொடர் விடுமுறையையொட்டி, தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்து பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக போக்குவரத்து... மேலும் பார்க்க