செய்திகள் :

பொருளாதார ரீதியில் ஐபிஎல் பெரிதும் உதவியது: அமித் மிஸ்ரா

post image

ஐபிஎல் தொடர் தனக்கு பொருளாதார ரீதியில் தனக்கு பெரிதும் உதவியதாக அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான அமித் மிஸ்ரா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். இதன் மூலம் அவரது 25 ஆண்டுகால கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

பொருளாதார ரீதியில் உதவிய ஐபிஎல்

ஐபிஎல் தொடர் பொருளாதார ரீதியில் பெரிதும் உதவியதாகவும், மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஐபிஎல் உதவியதாகவும் அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பொருளாதார ரீதியில் ஐபிஎல் தொடர் எனக்கு மிகவும் அதிகமாக உதவியது. மேலும், நான் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதற்கு ஐபிஎல் தொடர் எனக்கு பெரிதும் உதவியது. சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமான 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடருக்குத் தேர்வானேன். அப்போது டி20 போட்டிகளுக்கு லெக் ஸ்பின்னர்களை பெரிதாக யாரும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், நான் டி20 போட்டிகளில் நன்றாக விளையாடுவதாகக் கூறி வீரேந்திர சேவாக் என்னை அவரது அணியில் விளையாட வேண்டும் எனக் கூறினார்.

நான் ஹாட்ரிக் விக்கெட் மற்றும் 5 விக்கெட்டுகள் எடுத்தேன். இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்து டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்படத் தொடங்கினேன். அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் லெக் ஸ்பின்னர்கள் என்பதை மக்கள் தாமதமாக அங்கீகரிப்பது வருத்தமளிக்கிறது. உதாரணத்துக்கு ஷேன் வார்னே மற்றும் அனில் கும்ப்ளேவை கூறலாம் என்றார்.

இந்திய அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளையும் சேர்த்து 68 போட்டிகளில் விளையாடியுள்ள அமித் மிஸ்ரா 156 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Amit Mishra has said that the IPL series has helped him a lot financially.

இதையும் படிக்க: இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.880 கோடி சூதாட்டம்..! ஷிகர் தவானிடம் அமலாக்கத்துறை விசாரணை!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தென்னாப்பிரிக்க வீரர் விலகல்!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தென்னாப்பிரிக்க வீரர் டோனி டி ஸார்ஸி காயம் காரணமாக விலகியுள்ளார்.தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில்... மேலும் பார்க்க

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம்!

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இங்கிலாந்து அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகள... மேலும் பார்க்க

துலீப் கோப்பை: அரையிறுதியில் 184 ரன்கள் குவித்த ருதுராஜ்!

துலீப் கோப்பையின் அரையிறுதியில் ருதுராஜ் கெய்க்வாட் 184 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். முதல்நாள் முடிவில் அவரது வெஸ்ட் ஜோன் (மேற்கு மண்டல) அணி 363 ரன்கள் குவித்தது. பெங்களூரில் நடைபெற்றுவரும் துலீப் கோ... மேலும் பார்க்க

அக்கறை காட்ட ஒன்று கூடுங்கள்: தினேஷ் கார்த்திக்

பெங்களூரில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பலி குறித்து தினேஷ் கார்த்திக் விடியோ வெளியிட்டுள்ளார். அந்த விடியோவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக இருங்கள் எனக் கூறியுள்ளார். ... மேலும் பார்க்க

ஆசியக் கோப்பை: ஐக்கிய அரபு அமீரக அணி அறிவிப்பு!

ஆசிய கோப்பை தொடருக்கான ஐக்கிய அரபு அமீரக அணி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் வருகிற செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீர... மேலும் பார்க்க

இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.8 லட்சம் கோடி சூதாட்டம்..! ஷிகர் தவானிடம் அமலாக்கத்துறை விசாரணை!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானிடம் அமலாக்கத்துறை விசாரணை விசாரித்து வருகிறது. 1எக்ஸ் பெட்டிங் எனும் சட்ட விரோதமான சூதாட்ட செயலியில் தொடர்பு இருப்பதாக இந்த விசாரணை நடைபெறுகிறது. அமலாக்கத்த... மேலும் பார்க்க