செய்திகள் :

இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.8 லட்சம் கோடி சூதாட்டம்..! ஷிகர் தவானிடம் அமலாக்கத்துறை விசாரணை!

post image

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானிடம் அமலாக்கத்துறை விசாரணை விசாரித்து வருகிறது.

1எக்ஸ் பெட்டிங் எனும் சட்ட விரோதமான சூதாட்ட செயலியில் தொடர்பு இருப்பதாக இந்த விசாரணை நடைபெறுகிறது.

அமலாக்கத்துறை முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு ஆஜர் ஆகும்படி சம்மன் அனுப்பி இருந்தது.

இதனைத் தொடர்ந்து தில்லியுள்ள இந்த அலுவலகத்திற்கு ஷிகர் தவான் காலையில் சென்றார்.

1எக்ஸ் பெட்டிங் செயலியை விளம்பரம் செய்தல், அதற்கான ஆதரவு தெரிவித்தல் தொடர்பாக அமலாக்கத்துறை அவரிடம் விசாரித்து வருகிறது.

ஏற்கெனவே, இது தொடர்பாக பல்வேறு பிரபலங்களை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. சமீபத்தில் ரெய்னாவிடமும் இது குறித்து விசாரிக்கப்பட்டது.

1,524 சூதாட்ட செயலிகள் முடக்கம்

இந்தத் தடைச் செய்யப்பட்ட சூதாட்ட செயலியில் பலரும் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்வதாலும் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சுமத்துகிறது.

22 கோடி இந்தியர்கள் விதவிதமான சூதாட்ட செயலில் ஈடுபடுகிறார்கள். அதில் பாதி (11 கோடி) பேர் தொடர்ச்சியாக ஈடுபடுவதாகவும் சமீபத்திய ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக இந்தியாவில் இருந்து 100 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 8 லட்சம் கோடி) அளவுக்கு சூதாட்டம் நடைபெறுகிறதெனவும் இதன் வளர்ச்சி ஆண்டுக்கு 30 சதவிகிதம் அதிகரிப்பதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்திய அரசு கடந்த 2022 முதல் 2025 ஜூன் வரையில் 1,524 சூதாட்ட செயலிகளை முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The Enforcement Directorate (ED) on Thursday morning started questioning Indian cricketer Shikhar Dhawan in its ongoing money laundering probe connected to the alleged illegal 1xBet betting platform.

2-வது ஒருநாள்: இருவர் அரைசதம்; இங்கிலாந்துக்கு 331 ரன்கள் இலக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் எடுத்துள்ளது.இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவ... மேலும் பார்க்க

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தென்னாப்பிரிக்க வீரர் விலகல்!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தென்னாப்பிரிக்க வீரர் டோனி டி ஸார்ஸி காயம் காரணமாக விலகியுள்ளார்.தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில்... மேலும் பார்க்க

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம்!

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இங்கிலாந்து அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகள... மேலும் பார்க்க

துலீப் கோப்பை: அரையிறுதியில் 184 ரன்கள் குவித்த ருதுராஜ்!

துலீப் கோப்பையின் அரையிறுதியில் ருதுராஜ் கெய்க்வாட் 184 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். முதல்நாள் முடிவில் அவரது வெஸ்ட் ஜோன் (மேற்கு மண்டல) அணி 363 ரன்கள் குவித்தது. பெங்களூரில் நடைபெற்றுவரும் துலீப் கோ... மேலும் பார்க்க

பொருளாதார ரீதியில் ஐபிஎல் பெரிதும் உதவியது: அமித் மிஸ்ரா

ஐபிஎல் தொடர் தனக்கு பொருளாதார ரீதியில் தனக்கு பெரிதும் உதவியதாக அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான அமித் மிஸ்ரா அனைத்து விதமான கிரிக்கெட் போட... மேலும் பார்க்க

அக்கறை காட்ட ஒன்று கூடுங்கள்: தினேஷ் கார்த்திக்

பெங்களூரில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பலி குறித்து தினேஷ் கார்த்திக் விடியோ வெளியிட்டுள்ளார். அந்த விடியோவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக இருங்கள் எனக் கூறியுள்ளார். ... மேலும் பார்க்க