செய்திகள் :

அக்கறை காட்ட ஒன்று கூடுங்கள்: தினேஷ் கார்த்திக்

post image

பெங்களூரில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பலி குறித்து தினேஷ் கார்த்திக் விடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த விடியோவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக இருங்கள் எனக் கூறியுள்ளார்.

ஜுன் 4-இல் நடந்த சோகம்...

ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி முதல்முறையாக கடந்த 2025 சீசனில் கோப்பையை வென்றது. அதன் வெற்றிக் கொண்டாட்டத்தில் சின்னசாமி திடலுக்கு அருகில் 11 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.

சமீபத்தில் ஆர்சிபி அணி ஆர்சிபி கேர்ஸ் என்ற அமைப்பினை உருவாக்கி அதில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவியை அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஆர்சிபி அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் தினேஷ் கார்த்திக் இருக்கிறார். அவர் பேசிய விடியோவை ஆர்சிபி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அக்கறை காட்ட ஒன்று கூடுங்கள்

அதில் அவர் பேசியிருப்பதாவது:

கடந்த ஜூன் 4-இல் உயிரிழந்த குடும்பத்திற்கு எனது மனப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் என்னவெல்லாம் கடந்து வந்திருப்பீர்கள் என்பதை என்னால் யோசிக்கக் கூட முடியவில்லை. இதிலிருந்து வெளிவர கடவுள் உங்களுக்கு பலத்தைத் தர வேண்டிக்கொள்கிறேன்.

இந்தக் கடினமான நேரத்தில், நமது ஆர்சிபி ரசிகர்கள் அனைவரும் நம்முடன் இணைந்து, அவர்களுக்குத் துணையாகவும் ஆறுதலாகவும் இருக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

Royal Challengers Bengaluru (RCB) mentor and batting coach Dinesh Karthik on Thursday expressed his condolences and support for the victims who tragically lost their lives in the stampede outside the M Chinnaswamy Stadium during the team's victory celebrations on June 4.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தென்னாப்பிரிக்க வீரர் விலகல்!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தென்னாப்பிரிக்க வீரர் டோனி டி ஸார்ஸி காயம் காரணமாக விலகியுள்ளார்.தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில்... மேலும் பார்க்க

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம்!

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இங்கிலாந்து அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகள... மேலும் பார்க்க

துலீப் கோப்பை: அரையிறுதியில் 184 ரன்கள் குவித்த ருதுராஜ்!

துலீப் கோப்பையின் அரையிறுதியில் ருதுராஜ் கெய்க்வாட் 184 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். முதல்நாள் முடிவில் அவரது வெஸ்ட் ஜோன் (மேற்கு மண்டல) அணி 363 ரன்கள் குவித்தது. பெங்களூரில் நடைபெற்றுவரும் துலீப் கோ... மேலும் பார்க்க

பொருளாதார ரீதியில் ஐபிஎல் பெரிதும் உதவியது: அமித் மிஸ்ரா

ஐபிஎல் தொடர் தனக்கு பொருளாதார ரீதியில் தனக்கு பெரிதும் உதவியதாக அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான அமித் மிஸ்ரா அனைத்து விதமான கிரிக்கெட் போட... மேலும் பார்க்க

ஆசியக் கோப்பை: ஐக்கிய அரபு அமீரக அணி அறிவிப்பு!

ஆசிய கோப்பை தொடருக்கான ஐக்கிய அரபு அமீரக அணி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் வருகிற செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீர... மேலும் பார்க்க

இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.8 லட்சம் கோடி சூதாட்டம்..! ஷிகர் தவானிடம் அமலாக்கத்துறை விசாரணை!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானிடம் அமலாக்கத்துறை விசாரணை விசாரித்து வருகிறது. 1எக்ஸ் பெட்டிங் எனும் சட்ட விரோதமான சூதாட்ட செயலியில் தொடர்பு இருப்பதாக இந்த விசாரணை நடைபெறுகிறது. அமலாக்கத்த... மேலும் பார்க்க