செய்திகள் :

Dogs: `நாய்களின் உடலில் மைக்ரோ சிப்' - சென்னை மாநகராட்சியின் திட்டம் என்ன? - முழு விவரம்!

post image

தெரு நாய்கள்:

தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக தெரு நாய்கள் தொல்லை, ரேபிஸ் நோய் தாக்குதல் போன்றவை கவனம் பெறத் தொடங்கியிருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே இந்த விவகாரம் விவாதக்களத்துக்குள் இருக்கிறது.

இந்த நிலையில், வீட்டு நாய்கள் உள்ளிட்ட செல்ல பிராணிகளுக்கு உரிமம் பெற உடலில் சிப் பொருத்துவதை கட்டாயமாக்கும் வகையில் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கடந்த ஜனவரி 30-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து, சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு அதன் உரிமையாளர்கள் மைக்ரோ சிப் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது.

DOG
தெருநாய்

சிப் கட்டாயம்:

இதற்கிடையில், சென்னையில் உள்ள 1.8 லட்சம் தெரு நாய்களின் உடலில் சிப் பொருத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. சென்னையில் முதல் கட்டமாக 4000 தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, வளர்ப்பு நாய்களுக்கும் மைக்ரோ சிப் பொருத்துவது கட்டாயம் என உத்தரவு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த உத்தரவு அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தாவிட்டால் ரூ.3,000 அபராதம் விதிக்கவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சிப் எதற்கு?

அந்த சிப் மூலம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதா? இனப்பெருக்க கட்டுப்பாடு சிகிச்சை செய்யப்பட்டுள்ளதா? என்பனவற்றைக் கண்காணிக்கவும், வீட்டு நாய்கள் தெருவில் கைவிடப்படுவதைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை உதவும் என சென்னை மாநகராட்சி நம்புகிறது.

நாய்களின் உடலில் மைக்ரோ சிப்கள் தோலுக்கு அடியில், பொதுவாக தோள்பட்டைப் பகுதியில் ஊசி மூலமாகச் செலுத்தப்படும். இந்த சிப் ஒரு அரிசிப் பருக்கையின் அளவில் மட்டுமே இருக்கும்.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவா உள்ளிட்ட ஓரிரு இடங்களில் செயல்படுத்தப்படுகிறது.

மைக்ரோ சிப்
மைக்ரோ சிப்

இந்த மைக்ரோ சிப்பில் நாயின் பெயர், இனம், நிறம், பாலினம், வயது, தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரங்கள், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) வழங்கிய சிப் எண் ஆகிய விவரங்கள் பதிவேற்றப்பட்டு இருக்கும்.

அந்த நாய்கள், எந்தப் பகுதியில் காணப்படுபவை என்ற ஜியோ கோ-ஆர்டினேட்ஸ் (புவி குறியீடு) விவரமும், வீட்டு நாய்களில் அவற்றின் உரிமையாளர் விவரங்களும் இருக்கும்.

உடலில் அந்த சிப் இருக்கும் இடத்திற்கு அருகில் ஸ்கேனர் கருவியைக் கொண்டு செல்லும்போது அதிலுள்ள விவரங்களைப் படிக்க முடியும்.

RFID தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்த சிப்களில் நாயின் விபரங்கள் சேமிக்கப்பட்டிருக்கும். இந்தத் தரவுகள் பிரத்யேக மென்பொருள் செயலியின் மூலம் பராமரிக்கப்படும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Stray Dogs Issue: `தெரு நாய்களை ஒழித்தால் நோய் வரும்...' - சீமான்

இந்தியாவில் தெரு நாய்கள் அதிகரித்து வருவது, தெரு நாய் கடி உயிரிழப்புகள் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் தெரு நாய்களுக்கு ஆதரவானவர்களும், அவற்றை எதிர்க்கும் தரப்பினரும் தங்களது வா... மேலும் பார்க்க

GST: "வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு...!" - மோடி, நிர்மலா சீதாராமனைப் பாராட்டும் இபிஎஸ்

2017 ஜூலை மாதத்தில் இந்தியாவில் ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்ட போது, 5%, 12%, 18%, 28% என நான்கு வரி ஸ்லாப்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.இப்போது இந்த ஸ்லாப்கள் 5% மற்றும் 18% என இரண்டு ஸ்லாப்களாக மட்டும்... மேலும் பார்க்க

``இன்பநிதி அரசியலுக்கு வருவது திமுக-வின் உட்கட்சி விவகாரம்!" - சொல்கிறார் ஆர்.எஸ் பாரதி

"தி.மு.க ஆட்சியில் தனியார்மயம் தலைவிரித்தாடுகிறதே!" “அரசியலமைப்பின் வழிநின்று ஆட்சி நடத்த வேண்டிய ஒன்றிய பா.ஜ.க அரசு, அரசியல் எதிரிகளை பழிவாங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியை ஒன்றி... மேலும் பார்க்க

GST 2.0-ல் பாப்கார்ன், கிரீம் பனுக்கு எத்தனை சதவீத வரி? குட் நியூஸ் தான்!

2017-ம் ஆண்டு ஜி.எஸ்.டியை அறிமுகப்படுத்தியதிலிருந்தே, அதைக் குறித்து சர்ச்சைகள் எழுந்துகொண்டே இருந்தது.ஆனால், சமீபத்தில் ஜி.எஸ்.டி வரியில் அதிகம் கவனிக்கப்பட்ட இரண்டு சர்ச்சைகள்:ஒன்று, பாப்கார்ன்.இன்ன... மேலும் பார்க்க

Udhayanidhi: "என் தலையைச் சீவிக்கொண்டு வந்தால் 10 லட்சம் தருகிறேன் என்றார்கள்"- உதயநிதி ஸ்டாலின்

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் நாட்டு நலப் பணித்திட்ட அமைப்பு சார்பில் 'சமூக ஊடகச் சவால்களை எதிர்கொள்வது' க... மேலும் பார்க்க

GST: ``வரலாறு காணாத வரிக் குறைப்பு; தீபாவளி பரிசு'' - நயினார் நாகேந்திரன், எல்.முருகன் பாராட்டு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (புதன்கிழமை) இரவு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி விகி... மேலும் பார்க்க