செய்திகள் :

மோடி வெட்கித் தலைகுனிய வேண்டும்: ராகுல்

post image

மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூர் அரசு மருத்துவமனையில் எலிகள் கடித்து இரண்டு பச்சிளம் குழந்தைகள் பலியான சம்பவத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

மத்திய பிரதேசத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையில் எலிகள் கடித்து இரண்டு குழந்தைகள் பலியாகியுள்ளனர். இது விபத்து அல்ல; அப்பட்டமான கொலையே. இந்த சம்பவம் கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்றது. இதனைக் கேட்டதும் உடலெல்லாம் நடுங்குகிறது.

தனது அடிப்படைப் பொறுப்பை நிறைவேற்றத் தவறிய அரசாங்கத்தால், ஒரு தாயின் மடியில் இருந்து குழந்தை பறிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை, வேண்டுமென்றே தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், இனி ஏழைகளின் உயிர்காக்கும் மருத்துவமனைகளாக இல்லை; அது பணக்காரர்களுக்கு மட்டுமே. அரசு மருத்துவமனைகள் மரணத்தின் குகைகளாக மாறிவிட்டன.

எப்போதும்போல, விசாரணை நடத்தப்படும் என்றுதான் நிர்வாகம் கூறுகிறது. ஆனால் கேள்வி என்னவென்றால் - புதிதாய் பிறந்த குழந்தைகளின் பாதுகாப்பைக்கூட நீங்கள் உறுதிசெய்ய முடியாதபோது, அரசாங்கத்தை எப்படி நடத்துவீர்கள்? என்ன உரிமை இருக்கிறது?

பிரதமர் மோடியும், மத்திய பிரதேச முதல்வரும் வெட்கித் தலைகுனிய வேண்டும். நாட்டிலுள்ள லட்சக்கணக்கான ஏழைகளின் சுகாதார உரிமையை உங்கள் அரசு பறித்துள்ள நிலையில், தற்போது தாய்மார்களின் மடியில் இருந்து குழந்தைகளும் பறிக்கப்படுகிறார்கள்.

பிரதமர் மோடி அவர்களே, இன்று அரசின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான பெற்றோர்களின் சார்பாக இந்தக் குரல் எழுப்பப்படுகிறது. உங்கள் பதில் என்ன?

இந்தப் போராட்டமானது, ஒவ்வொரு ஏழைக்கும் ஒவ்வொரு குடும்பம் மற்றும் ஒவ்வொரு குழந்தையின் உரிமைகளுக்கானது என்று தெரிவித்துள்ளார்.

இந்தூரில் உள்ள மஹாராஜா யஷ்வந்த் ராவ் அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டிருந்த 2 பச்சிளம் குழந்தைகளை ஆக.31 மற்றும் செப்.1 ஆகிய இருநாள்களின் நள்ளிரவில் ஒன்றன் பின் ஒன்றாக எலி கடித்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இரு குழந்தைகளும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், அடுத்தடுத்த நாள்களில் இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குஜராத்தில் தொடரும் கனமழை! உயர் எச்சரிக்கையில் 113 அணைகள் !

குஜராத் மாநிலத்தில், சுமார் 92.64 சதவிகிதம் பருவமழை பொழிவானது பதிவாகியுள்ள நிலையில், 113 அணைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பருவமழையி... மேலும் பார்க்க

மணிப்பூரில் அமைதி திரும்புகிறதா? மத்திய அரசுடன் புதிய ஒப்பந்தம்!

மணிப்பூரில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் வன்முறையில் முடிவு எட்டப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்ல வாய்ப்புகள் உள்ளதாகக்... மேலும் பார்க்க

கலவர வழக்கில் இம்ரான்கானின் மருமகன் ஷெர்ஷா கானுக்கு ஜாமீன்!

மே 9 கலவர வழக்குத் தொடர்பாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் மற்றொரு மருமகன் ஷெர்ஷா கானுக்கு பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது ஊழ... மேலும் பார்க்க

மமதா பேச்சுக்கு எதிர்ப்பு! மேற்கு வங்க பேரவை அமளியில் பாஜக கொறடா காயம்!

மேற்கு வங்க சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்ட பாஜக கொறடா சங்கர் கோஷ், அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டபோது காயம் அடைந்ததாக பாஜகவினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.வெளி மாநிலங்களில்... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் ஒரு பாஜக எம்எல்ஏகூட இருக்க மாட்டார்கள்: மமதா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர்கூட இல்லாத சூழலை பாஜக எதிர்கொள்ளும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் வங்க மொழி பேசும் மக்களுக்க... மேலும் பார்க்க

பறவை மோதல்! விஜயவாடாவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரத்து!

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விஜயவாடா விமான நிலையத்தில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் மீது கழுகு மோதியதால், அதன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.விஜயவாடாவில் இருந்து பெங்களூரு நோக்கி, இன்று (செப்.4)... மேலும் பார்க்க