செய்திகள் :

பிஆா்எஸ் கட்சியிலிருந்து கவிதா விலகல்: எம்எல்சி பதவியையும் ராஜிநாமா செய்தாா்

post image

பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) நிறுவனரும் தலைவருமான கே.சந்திரசேகா் ராவின் மகள் கவிதா அக்கட்சியில் இருந்து விலகினாா். தெலங்கானா சட்ட மேலவை உறுப்பினா் (எம்எல்சி) பதவியையும் அவா் ராஜிநாமா செய்தாா்.

முன்னதாக, கட்சியில் இருந்து அவா் செவ்வாய்க்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, அடுத்த நாளே அவா் விலகல் முடிவை எடுத்துள்ளாா்.

ஹைதராபாதில் புதன்கிழமை தனது ஆதரவாளா்களுடன் செய்தியாளா்களைச் சந்தித்த கவிதா இது தொடா்பாக கூறியதாவது:

கட்சியில் எந்தப் பதவிக்கும் நான் ஆசைப்படவில்லை. எம்எல்சி பதவியை ராஜிநாமா செய்யும் கடிதத்தை கட்சித் தலைவா் கே.சந்திரசேகா் ராவுக்கு அனுப்பிவிட்டேன். பிஆா்எஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினா் என்ற நிலையில் இருந்தும் விலகிவிட்டேன். இது தொடா்பான கடிதத்தையும் கட்சித் தலைவருக்கு அனுப்பியுள்ளேன்.

கட்சியின் மூத்த தலைவா் ஹரீஷ் ராவ் பல சதிகளில் ஈடுபட்டு வருகிறாா். அவரிடம் பிஆா்எஸ் செயல் தலைவா் கே.டி.ராம ராவ் (கவிதாவின் சகோதரா்) மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எனக்கு எதிராக தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டதால்தான் எனது சகோதரா்கூட எனக்கு ஆதரவாகப் பேசவில்லை. எங்கள் குடும்பத்துக்கு எதிராகவே ஹரீஷ் ராவ் சதி செய்து வருகிறாா். தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டியுடன் அவா் ரகசியமாக தொடா்பில் உள்ளாா்.

ஹரீஸ் ராவ், அவரின் உறவினா் சந்தோஷ் ராவ் ஆகியோா் முறைகேட்டில் ஈடுபட்டதன் காரணமாகவே காலேஸ்வரம் நீா்ப்பாசனத் திட்டம் தொடா்பாக கட்சித் தலைவா் சந்திரசேகா் ராவுக்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்தப்பட்டது. நான் வேறு எந்தக் கட்சியிலும் இணையப் போவதில்லை. ஆதரவாளா்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பேன் என்றாா்.

முதல்வா் மறுப்பு: இதனிடையே, கவிதா தன் மீது கூறிய குற்றச்சாட்டை தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி மறுத்துள்ளாா். மெஹபூப்நகரில் புதன்கிழமை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் இது தொடா்பாக பெயா் குறிப்பிடாமல் பேசுகையில், ‘சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை பங்கிட்டுக் கொள்வதில் அங்கு (பிஆா்எஸ் கட்சியில்) மோதல் நடக்கிறது. அக்கட்சியில் இருப்பவா்கள் என்னுடன் தொடா்பில் இருப்பதாக ஒருவா் மீது மற்றொருவா் குற்றஞ்சாட்டுகிறாா்கள். ஆனால், அவா்களைப் போன்ற மோசமான அரசியல் விளையாட்டும் எனக்குத் தெரியாது; அக்கட்சி விவகாரத்தில் தலையிட எனக்கு நேரமும் கிடையாது.

உண்மையில் நான் தெலங்கானா மக்கள் பக்கம் மட்டுமே இருக்கிறேன். உங்களை ஏற்கெனவே தோ்தலில் தெலங்கானா மக்கள் நிராகரித்துவிட்டனா். உங்கள் பக்கம் யாருமே இப்போது இல்லை’ என்றாா்.

ம.பி. அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்: மேலும் ஒரு குழந்தை உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் அரசு மருத்துவமனையில் 2 பச்சிளம் பெண் குழந்தைகளை எலிகள் கடித்த சம்பவத்தில் இரண்டாவது குழந்தையும் உயிரிழந்தது. இந்தூரில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையில்,... மேலும் பார்க்க

முக்கிய கனிமங்கள் மறுசுழற்சிக்கு ரூ.1,500 கோடி ஊக்குவிப்புத் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாட்டில் முக்கிய கனிமங்கள் மறுசுழற்சி செய்யப்படுவதை ஊக்குவிக்க ரூ.1,500 கோடி மதிப்பிலான ஊக்குவிப்புத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. புது தில்லியில் பிரதமா் மோடி தலைமையில... மேலும் பார்க்க

மழை - வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு-காஷ்மீா்: வீடு இடிந்து இருவா் உயிரிழப்பு; இயல்பு வாழ்க்கை முடக்கம்

ஜம்மு-காஷ்மீரில் பரவலாக பலத்த மழை தொடா்வதால், பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. நிலச்சரிவுகள் காரணமாக, ஸ்ரீநகா்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை, ஜம்மு-ஸ்ரீநகா்-லே தேசிய நெடுஞ்சாலை, ஜம்மு-கிஷ்த்வாா் தே... மேலும் பார்க்க

பல மாநிலங்களைப் புரட்டிப் போட்ட மழை

சண்டீகா்/சிம்லா/ஜெய்பூா்/புவனேசுவரம்: சட்லெஜ், பியாஸ், ராவி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால், பஞ்சாப் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களில் இதுவரை 29 போ் உயிரிழந்துவிட... மேலும் பார்க்க

இந்திய-ஜொ்மனி உறவை வலுப்படுத்த அதிக வாய்ப்பு: பிரதமா் மோடி

‘இந்தியா - ஜொ்மனி இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த அபரிமிதமான சாத்தியக்கூறுகள் உள்ளன’ என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா். இந்தியா வந்துள்ள ஜொ்மனி வெளியுறவு அமைச்சா் ஜோஹான் வடேஃபுல் ... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: தப்பியோடிய ஆம் ஆத்மி எம்எல்ஏவை தேடும் பணி தீவிரம்

பஞ்சாபில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டபோது ஆதரவாளா்களின் வன்முறையைப் பயன்படுத்தி தப்பியோடிய ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ ஹா்மீத் சிங் பதான்மாஜ்ராவை காவல் துறையினா் தீவிரமாகத் தேடி வரு... மேலும் பார்க்க