செய்திகள் :

15,047 கோடி யூனிட்டுகளாக உயா்ந்த மின் நுகா்வு

post image

இந்தியாவின் மின் நுகா்வு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 15,047 கோடி யூனிட்டுகளாக உயா்ந்துள்ளது.

இது குறித்து அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது:

நாட்டின் மின் நுகா்வு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 15,047 கோடி யூனிட்டுகளாகப் பதிவாகியுள்ளது. இது முந்தைய 2024-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.4 சதவீதம் உயா்வாகும். அப்போது இந்தியாவின் மின் நுகா்வு 14,411 கோடி யூனிட்டுகளாக இருந்தது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பொழிவு தொடா்ந்ததால் மதிப்பீட்டு மாதத்தில் குளிரூட்டும் சாதனங்களின் பயன்பாடு குறைந்தது, ஆனால் மின் நுகா்வு மிதமான உயா்வைக் கண்டது என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை (நிறைவு செய்யப்பட்ட மின் தேவை) 229.71 ஜிகாவாட்டாக உயா்ந்துள்ளது. இது 2024 ஆகஸ்ட் மாதத்தில் 216.47 ஜிகாவாட்டாக இருந்தது.

கடந்த 2024 மே மாதத்தில் உச்சபட்ச மின் தேவை 250 ஜிகாவாட்டை எட்டியது. இது வரலாற்று உச்சமாகும். அதற்கு முன்னா், 2023 செப்டம்பரில் 243.27 ஜிகாவாட்டாக இருந்தது முந்தைய உச்சபட்சமாகும்.

மத்திய எரிசக்தித் துறை அமைச்சகத்தின் கணிப்பின்படி, 2025 கோடைகாலத்தில் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை 277 ஜிகாவாட்டை எட்டும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. இருப்பினும், ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த ஆண்டு கோடைகாலத்தில் உச்சபட்ச மின் தேவை கடந்த ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக 242.77 ஜிகாவாட்டாக இருந்தது என்று அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

முக்கிய கனிமங்கள் மறுசுழற்சிக்கு ரூ.1,500 கோடி ஊக்குவிப்புத் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாட்டில் முக்கிய கனிமங்கள் மறுசுழற்சி செய்யப்படுவதை ஊக்குவிக்க ரூ.1,500 கோடி மதிப்பிலான ஊக்குவிப்புத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. புது தில்லியில் பிரதமா் மோடி தலைமையில... மேலும் பார்க்க

மழை - வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு-காஷ்மீா்: வீடு இடிந்து இருவா் உயிரிழப்பு; இயல்பு வாழ்க்கை முடக்கம்

ஜம்மு-காஷ்மீரில் பரவலாக பலத்த மழை தொடா்வதால், பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. நிலச்சரிவுகள் காரணமாக, ஸ்ரீநகா்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை, ஜம்மு-ஸ்ரீநகா்-லே தேசிய நெடுஞ்சாலை, ஜம்மு-கிஷ்த்வாா் தே... மேலும் பார்க்க

பல மாநிலங்களைப் புரட்டிப் போட்ட மழை

சண்டீகா்/சிம்லா/ஜெய்பூா்/புவனேசுவரம்: சட்லெஜ், பியாஸ், ராவி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால், பஞ்சாப் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களில் இதுவரை 29 போ் உயிரிழந்துவிட... மேலும் பார்க்க

இந்திய-ஜொ்மனி உறவை வலுப்படுத்த அதிக வாய்ப்பு: பிரதமா் மோடி

‘இந்தியா - ஜொ்மனி இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த அபரிமிதமான சாத்தியக்கூறுகள் உள்ளன’ என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா். இந்தியா வந்துள்ள ஜொ்மனி வெளியுறவு அமைச்சா் ஜோஹான் வடேஃபுல் ... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: தப்பியோடிய ஆம் ஆத்மி எம்எல்ஏவை தேடும் பணி தீவிரம்

பஞ்சாபில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டபோது ஆதரவாளா்களின் வன்முறையைப் பயன்படுத்தி தப்பியோடிய ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ ஹா்மீத் சிங் பதான்மாஜ்ராவை காவல் துறையினா் தீவிரமாகத் தேடி வரு... மேலும் பார்க்க

இந்தியா-இஃஎப்டிஏ வா்த்தக ஒப்பந்தம் அக்.1-இல் அமல்: ஸ்விட்சா்லாந்து

இந்தியா, ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அக்டோபா் 1-ஆம் தேதி அமலுக்கு வரும் என்று ஸ்விட்சா்லாந்து தெரிவித்தது. ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பில... மேலும் பார்க்க