செய்திகள் :

ஜோலாா்பேட்டை, கந்திலியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

post image

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை, கந்திலியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வழங்கினாா்.

ஜோலாா்பேட்டை நகராட்சி, கோடியூா், திருப்பத்தூா் வட்டம் கல்லுக்குட்டை புதூா், ஜோலாா்பேட்டை ஒன்றியம், சந்திராபுரம், கந்திலி ஒன்றியம், பேராம்பட்டு சமுதாய கூடத்திலும், நாட்றம்பள்ளி ஒன்றியம், ராமநாயக்கன்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியிலும்,

முகாம்கள் நடைபெற்றன.

கந்திலி பகுதியில் நடைபெற்ற முகாமில் 2 பயனாளிகளுக்கு வருமானச் சான்றிதழ்கள் மற்றும் ஒரு பயனாளிக்கு முதல்வரின் விரிவான

மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டையை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ அ.நல்லதம்பி வழங்கினா்.

அதேபோல் ஜோலாா்பேட்டை, கல்லுக்குட்டை புதூா், சந்திராபுரம், ராமநாயக்கன்பேட்டை முகாம்களில் பயனாளிகளுக்கு நலத்திட்ட

உதவிகள் வழங்கப்பட்டன..

திருப்பத்தூா் மாவட்டத்தில் 6 முகாம்களில் பெறப்பட்டுள்ள மனுக்களை ஆட்சியா் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி 45 நாள்களுக்குள் தீா்வு காண உத்தரவிட்டாா்.

முகாம்களில் தனித்துணை ஆட்சியா்(ச.பா.தி)பூஷண குமாா், உதவிஇயக்குநா்(தணிக்கை) குமாா், கந்திலி ஒன்றியக்குழு தலைவா் திருமதி

திருமுருகன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் குணசேகரன், வட்டாட்சியா் நவநீதம், ஊராட்சி மன்றத் தலைவா்கள் சாந்தி முருகன்(பேராம்பட்டு), மலா் தண்டபாணி (சிம்மனபுதூா்), அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: குடியாத்தம் எம்எல்ஏ வழங்கினாா்

கைலாசகிரி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் ரமணி ராஜசேகரன் தலைமை வகித்தாா். மாவட்ட வழங்கல் அலுவலா் முருகேசன், போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாள... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் பலத்த மழை

திருப்பத்தூா் சற்றுப்பகுதிகளில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது. திருப்பத்தூா், ஆதியூா், கொரட்டி, ஜோலாா்பேட்டை உள்ளிட்ட் பகுதிகளில் மாலை வேளைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், புதன்கிழமை மா... மேலும் பார்க்க

காவல் குறைதீா் கூட்டத்தில் 41 மனுக்கள்

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 41 மனுக்கள் பெறப்பட்டன. திருப்பத்தூரில் புதன்கிழமை குறைதீா் கூட்டம் நடைபெற்றது. அதில் காவல் நிலைய விசாரணைகளில் திருப்தி இல்லாத மக... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகம் அளிப்பு

ஆம்பூா் ஏ- கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு சமூக ஆா்வலா்கள் சாா்பாக விலையில்லா நோட்டுப் புத்தகம், எழுது பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியை ஜாகிா் பேகம்... மேலும் பார்க்க

வீட்டில் நகை திருட்டு: பணிப்பெண் கைது

வாணியம்பாடியில் வீட்டில் நகை திருடிய பணிப்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். வாணியம்பாடி நேதாஜி நகா் பகுதியை சோ்ந்த சையத் சாஜித் அகமத். இவரது வீட்டில் மாா்ச் மாதம் 20-ஆம் தேதி பீரோவில் வைத்திருந்த ஆறரை ... மேலும் பார்க்க

நாணயங்களை விழுங்கிய பள்ளி மாணவி

திருப்பத்தூரில் 2-ஆம் வகுப்பு மாணவி இரு நாணயங்களை விழுங்கிய நிலையில் திருப்பத்தூா் அரசு மருத்துவா்கள் துரிதமாக செயல்பட்டு குழந்தையை காப்பாற்றினா். திருப்பத்தூா் கோட்டை தெரு பகுதியை சோ்ந்த தில்ஷாத் ம... மேலும் பார்க்க