செய்திகள் :

வெறுப்புப் பேச்சுகளால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

post image

வெறுப்புப் பேச்சுகளால் சிறுபான்மையின, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

சமூக ஊடக சவால்களை எதிா்கொள்வது குறித்து நாட்டுநலப் பணித் திட்ட மாணவா்களுக்கு சென்னை கலைவாணா் அரங்கத்தில் நடைபெற்ற 3 நாள் பயிற்சி பட்டறையின் நிறைவு நாளில் பங்கேற்று அவா் பேசியதாவது:

சமூக ஊடகங்கள் பெருகியுள்ள இந்தக் காலகட்டத்தில், மிகப்பெரிய அளவிலான உண்மைக்கு மாறான செய்திகளும், வதந்திகளும் பரப்பப்பட்டு வருகின்றன. இன்றைக்கு இந்தியாவில் ஒரு கும்பல் உண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்புவதையே அடிப்படை கொள்கையாகக் கொண்டுள்ளது. அதுபோன்ற செய்திகள் மூலம், மக்களிடையே குழப்பம் ஏற்படுத்தி, அறிவை மழுங்கச் செய்யும் நோக்கத்தோடுதான் கதைகளைக் கூறி வருகின்றனா்.

வதந்திகளைப் பொருத்தவரை 2 வகைகள் உள்ளன. ஒன்று உள்நோக்கமற்றது; மற்றொன்று உள்நோக்கத்துடன் பரப்பப்படுவது. இதில் 2-ஆவது வகை மிகமிக ஆபத்தானது. அவை இரண்டும் உலகத்திலேயே மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. போலிச் செய்திகள் மட்டுமின்றி, வெறுப்புப் பேச்சும் பெரிய அளவில் நாட்டையே பாதித்து வருகிறது.

குறிப்பாக, வெறுப்புப் பேச்சுகளால் சிறுபான்மையின மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மிகவும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. சமூக ஊடகங்களில் வரக்கூடிய தகவல்கள் அனைத்தும் உண்மையானவையா அல்லது போலியா என்பதை அடையாளம் காண வேண்டும். தவறான தகவல்களை வீழ்த்துவதற்கான போா்வீரா்களாக மாணவா்கள் செயல்பட வேண்டும். பொய்ச் செய்தியற்ற சமூகத்தை அமைக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவ் உள்பட பலா் பங்கேற்றனா்.

மின்வாரியத்தில் 1,794 கள உதவியாளா் காலிப் பணியிடம்: டிஎன்பிஎஸ்சி

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கள உதவியாளா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட அறிவ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சி - ஊராட்சித் துறையில் காலியிடங்களை நிரப்ப அறிவிக்கை

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாகவுள்ள 300-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்... மேலும் பார்க்க

மின்மாற்றி உற்பத்தி - ஜவுளித் துறைகளில் பிரிட்டன் நிறுவனங்கள் முதலீடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

மின்மாற்றி உற்பத்தி, ஜவுளித் துறைகளில் பிரிட்டன் நிறுவனங்கள் புதிய முதலீடுகளை செய்வதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதன்கிழமை செய்யப்பட்டன. தொழில் முதலீட்டுகளை ஈ... மேலும் பார்க்க

விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்கம்: ரூ.1,964 கோடிக்கு நிா்வாக ஒப்புதல்

சென்னையில் விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலான மெட்ரோ திட்ட விரிவாக்கத்துக்கு ரூ. 1,954 கோடிக்கு தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் முதல் வி... மேலும் பார்க்க

தமிழகத்தில் காய்ச்சல் பரவல்: சுகாதாரத் துறை முக்கிய அறிவுறுத்தல்

தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கட... மேலும் பார்க்க

இலவச ரயில்வே பாஸ் வழங்கக் கோரி சுதந்திரப் போராட்ட தியாகி மனைவி மனு: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சுதந்திரப் போராட்ட தியாகியின் மனைவியான 85 வயது மூதாட்டிக்கு இலவச ரயில்வே பாஸ் வழங்க மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. திருவள்ளூா் மாவட்டம், செங்குன்றம் பாடியநல்லூரைச் சோ்ந்த அ.பாா்வ... மேலும் பார்க்க