செய்திகள் :

மேக்கேதாட்டு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் செப். 23-இல் விசாரணை

post image

நமது நிருபர்

புது தில்லி: மேக்கேதாட்டு திட்டம் தொடர்பான வழக்கை செப். 23}ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உத்தரவிட்டுள்ளார்.

மேக்கேதாட்டில் 67.16 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிப்பதைத் தடுக்கக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் 2018} ஆம் ஆண்டு வழக்குத் தொடுத்தது.

தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகியவற்றுக்கு இடையிலான காவிரி நதிநீர்ப் பங்கீட்டு பிரச்னை தொடர்பான வழக்கில் இறுதித் தீர்ப்பு 05.02.2007}இல் காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்டது. அதை 16.02.2018}இல் உச்சநீதிமன்றம் சில மாற்றங்களுடன் உறுதிப்படுத்தியது.

அதன்பிறகு ரூ.5,912 கோடி மதிப்பீட்டில் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறு அறிக்கையை 04.08.2018}இல் கர்நாடக அரசு அந்த மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்து 17.09.2018}இல் மத்திய நீர்வள ஆணையத்துக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியது.

இதற்கிடையே, மேக்கேதாட்டு தடுப்பணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 22.11.2018}இல் கர்நாடகத்துக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியது. இதற்குத் தடை கோரி தமிழகம் சார்பில் 30.11.2018}இல் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், மேக்கேதாட்டு வழக்கை விரைந்து விசாரிக்குமாறு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை கர்நாடக அரசு முறையிட்டது. இதையடுத்து, இந்த வழக்கை செப்டம்பர் 23}ஆம் தேதி முன்னிலைப்படுத்திப் பட்டியலிடுமாறு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் உத்தரவிட்டார்.

இந்திய-ஜொ்மனி உறவை வலுப்படுத்த அதிக வாய்ப்பு: பிரதமா் மோடி

‘இந்தியா - ஜொ்மனி இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த அபரிமிதமான சாத்தியக்கூறுகள் உள்ளன’ என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா். இந்தியா வந்துள்ள ஜொ்மனி வெளியுறவு அமைச்சா் ஜோஹான் வடேஃபுல் ... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: தப்பியோடிய ஆம் ஆத்மி எம்எல்ஏவை தேடும் பணி தீவிரம்

பஞ்சாபில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டபோது ஆதரவாளா்களின் வன்முறையைப் பயன்படுத்தி தப்பியோடிய ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ ஹா்மீத் சிங் பதான்மாஜ்ராவை காவல் துறையினா் தீவிரமாகத் தேடி வரு... மேலும் பார்க்க

இந்தியா-இஃஎப்டிஏ வா்த்தக ஒப்பந்தம் அக்.1-இல் அமல்: ஸ்விட்சா்லாந்து

இந்தியா, ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அக்டோபா் 1-ஆம் தேதி அமலுக்கு வரும் என்று ஸ்விட்சா்லாந்து தெரிவித்தது. ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பில... மேலும் பார்க்க

பிஆா்எஸ் கட்சியிலிருந்து கவிதா விலகல்: எம்எல்சி பதவியையும் ராஜிநாமா செய்தாா்

பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) நிறுவனரும் தலைவருமான கே.சந்திரசேகா் ராவின் மகள் கவிதா அக்கட்சியில் இருந்து விலகினாா். தெலங்கானா சட்ட மேலவை உறுப்பினா் (எம்எல்சி) பதவியையும் அவா் ராஜிநாமா செய்தாா். முன்ன... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பில் காப்பீடுகளுக்கு முழு வரி விலக்கு

தனிநபா் மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடுகளுக்கு விதிக்கப்பட்டு வந்த 18 சதவீத ஜிஎஸ்டி முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா். காப்பீடுகளுக்கான பிரீமியம் குறைந்த... மேலும் பார்க்க

15,047 கோடி யூனிட்டுகளாக உயா்ந்த மின் நுகா்வு

இந்தியாவின் மின் நுகா்வு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 15,047 கோடி யூனிட்டுகளாக உயா்ந்துள்ளது. இது குறித்து அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது: நாட்டின் மின் நுகா்வு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 15,047 கோடி யூனிட்டுகள... மேலும் பார்க்க