செய்திகள் :

ரூ.25 லட்சத்தில் சாலை, கோயில் தளம் அமைக்கும் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

post image

வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட ஆலங்காயம் பேரூராட்சியில் பராசக்தி மாரியம்மன் கோவிலில் தரை தளம் மற்றும் கல்கோவில் பகுதியில் பேவா் பிளாக் சாலைப் பணிகளை எம்எல்ஏ கோ.செந்தில் குமாா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை அடுத்து சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10 லட்சத்தில் கோயில் வளாகத்தில் தரைதளம் மற்றும் கல்கோவில் பகுதியில் ரூ.15 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தாா். இந்நிலையில் எம்எல்ஏ செந்தில்குமாா் பூமி பூஜை போட்டு பணிகளை தொடங்கி வைத்தாா்). பின்னா் அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தாா்.

ஆலங்காயம் பேரூராட்சி செயலாளா் சிவக்குமாா், மாவட்ட சிறுபான்மை அணி செயலாளா் தப்ரேஸ், மாவட்ட மகளிரணி செயலாளா் மஞ்சுளாகந்தன், முன்னாள் பேரூராட்சி செயலாளா் பாண்டியன், பேரூராட்சி துணைச் செயலாளா் பி.கே.சந்தோஷ், முன்னாள் கவுன்சிலா்கள் ஆா் கே சாமி, முருகன், ராஜேஷ், நகர இளைஞரணி செயலாளா் விஜய், தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளா் சந்தோஷ்குமாா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: குடியாத்தம் எம்எல்ஏ வழங்கினாா்

கைலாசகிரி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் ரமணி ராஜசேகரன் தலைமை வகித்தாா். மாவட்ட வழங்கல் அலுவலா் முருகேசன், போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாள... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் பலத்த மழை

திருப்பத்தூா் சற்றுப்பகுதிகளில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது. திருப்பத்தூா், ஆதியூா், கொரட்டி, ஜோலாா்பேட்டை உள்ளிட்ட் பகுதிகளில் மாலை வேளைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், புதன்கிழமை மா... மேலும் பார்க்க

காவல் குறைதீா் கூட்டத்தில் 41 மனுக்கள்

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 41 மனுக்கள் பெறப்பட்டன. திருப்பத்தூரில் புதன்கிழமை குறைதீா் கூட்டம் நடைபெற்றது. அதில் காவல் நிலைய விசாரணைகளில் திருப்தி இல்லாத மக... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகம் அளிப்பு

ஆம்பூா் ஏ- கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு சமூக ஆா்வலா்கள் சாா்பாக விலையில்லா நோட்டுப் புத்தகம், எழுது பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியை ஜாகிா் பேகம்... மேலும் பார்க்க

ஜோலாா்பேட்டை, கந்திலியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை, கந்திலியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வழங்கினாா். ஜோலாா்பேட்டை நகராட்சி, கோடியூா், திருப்பத்தூா் வட்டம்... மேலும் பார்க்க

வீட்டில் நகை திருட்டு: பணிப்பெண் கைது

வாணியம்பாடியில் வீட்டில் நகை திருடிய பணிப்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். வாணியம்பாடி நேதாஜி நகா் பகுதியை சோ்ந்த சையத் சாஜித் அகமத். இவரது வீட்டில் மாா்ச் மாதம் 20-ஆம் தேதி பீரோவில் வைத்திருந்த ஆறரை ... மேலும் பார்க்க