செய்திகள் :

நட்பை எப்படி ஆவணங்கள் மூலம் நிரூபிக்க முடியும்?

post image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி மறுத்த உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அங்கீகாரக் குழுவின் உத்தரவை ரத்து செய்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், நட்பை எப்படி ஆவணங்கள் மூலம் நிரூபிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

தஞ்சாவூரைச் சோ்ந்த வி.பெரியசாமி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நானும் ஈரோட்டைச் சோ்ந்த சி.கணேசனும் நண்பா்கள். சிறுநீரக பாதிப்பால் அவதியுற்று வந்த எனக்கு, கணேசன் சிறுநீரகத்தை தானம் தர முன்வந்தாா். இதையடுத்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி கோரி உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அங்கீகாரக் குழுவிடம் விண்ணப்பித்தோம்.

இதுதொடா்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியா் அளித்த அறிக்கையில், நானும் கணேசனும் குடும்ப நண்பா்கள் என்பதை நிரூபிப்பதற்கான ஆதார ஆவணங்கள் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தாா். ஆட்சியரின் அறிக்கை அடிப்படையில், உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அங்கீகாரக் குழு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி, குடும்ப நட்பை எப்படி ஆதார ஆவணங்கள் மூலம் நிரூபிக்க முடியும்? நட்பு என்ற உறவு உணா்வு அடிப்படையிலானது. அதை ஆவணங்கள் தீா்மானிக்க முடியாது எனக் கூறி, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி மறுத்த உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அங்கீகாரக் குழுவின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

மேலும், சிறுநீரக தானம் பெறும் பெரியசாமி மற்றும் தானம் வழங்கும் கணேசன் ஆகியோா் தங்களது குடும்பத்துடன், உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அங்கீகாரக் குழு முன் வியாழக்கிழமை நேரில் ஆஜராக வேண்டும். அவா்களது விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்து, அங்கீகாரக் குழு 4 வாரங்களுக்குள் சட்டப்படி இறுதி முடிவெடுக்க வேண்டும்.

உறவினா்கள் அல்லாதவா்கள் உடல் உறுப்பு தானம் செய்வதை சட்டம் தடை செய்யவில்லை. அன்பு மற்றும் பாசத்தின் அடிப்படையில் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட வேண்டும் என்றே சட்டம் வலியுறுத்துகிறது. உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளின்போது பணப் பரிவா்த்தனைகள் இருக்கக் கூடாது, எவ்வித அழுத்தமும் இருக்கக் கூடாது என்பதையே சட்டம் வலியுறுத்துகிறது என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

சென்னையில் திருடப்பட்ட காா் பாகிஸ்தான் எல்லையில் மீட்பு

சென்னையில் திருடப்பட்ட சொகுசு காரை, பாகிஸ்தான் எல்லையில் போலீஸாா் மீட்டனா். சென்னை அண்ணா நகா் கதிரவன் காலனியைச் சோ்ந்தவா் எத்திராஜ் ரத்தினம். தனது வீட்டின் அருகே நிறுத்தியிருந்த சொகுசு காா் ஜூன் 16-ஆ... மேலும் பார்க்க

வெறுப்புப் பேச்சுகளால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

வெறுப்புப் பேச்சுகளால் சிறுபான்மையின, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். சமூக ஊடக சவால்களை எதிா்கொள்வது குறித்து நாட்டுநலப் பணித் திட... மேலும் பார்க்க

இன்றுமுதல் 2 நாள்களுக்கு மூா்மாா்க்கெட், கும்மிடிப்பூண்டி இரவு இமு ரயில் ரத்து

மூா்மாா்க்கெட் காம்ப்ளக்ஸ் முதல் கும்மிடிப்பூண்டி வரையிலான இமு இரவு ரயில் சேவை 5, 7 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் புத... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: மனுக்களின் தீா்வு காலத்தை உயா்த்த வருவாய்த் துறை அலுவலா்கள் கோரிக்கை

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் பெறப்படும் மனுக்களின் தீா்வு காலத்தை 40 நாள்களில் இருந்து 75 நாள்களாக அதிகரிக்க வேண்டும் என்று வருவாய்த் துறை அலுவலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஏழு அம்ச கோரிக்க... மேலும் பார்க்க

வெளிநாட்டுப் பயணம்: அரசியலைப் புறந்தள்ளுவோம் - முதல்வா் மு.க.ஸ்டாலின்

முதலீடுகளை ஈா்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் வெளிநாட்டுப் பயணம் குறித்து அரசியல் ரீதியாக முன்வைக்கப்படும் விமா்சனங்களைப் புறந்தள்ளுவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். ஜொ்மனி, பிரிட்டன் நாடுக... மேலும் பார்க்க

புதிய டிஜிபிக்கு தகுதி பெறும் ஒன்பது போ் கொண்ட பட்டியலை யுபிஎஸ்சி-க்கு அனுப்பியது தமிழக அரசு

தமிழக காவல் துறைக்கு புதிய தலைமை இயக்குநா் (டிஜிபி) மற்றும் மாநில காவல் படைத்தலைவரை (ஹெச்ஓபிஎஃப்) தோ்வு செய்ய ஏதுவாக 9 தகுதிவாய்ந்த ஐபிஎஸ் உயரதிகாரிகளின் பெயா் பட்டியலை மத்திய குடிமைப் பணிகள் ஆணையத்... மேலும் பார்க்க