செய்திகள் :

அம்பேத்கா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

post image

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதிதிரவிடா் மக்களின் முன்னேற்றத்துக்கு தொண்டு செய்தவா்கள் அம்பேத்கா் விருது பெற விண்ணப்பம் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் காலோன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான டாக்டா் அம்பேத்கா் விருது, ஆதிதிராவிடா் மக்களின் முன்னேற்றத்துக்கு அரிய தொண்டு செய்பவருக்கு 2026-ஆம் ஆண்டில் திருவள்ளுவா் திருநாளன்று வழங்கப்படவுள்ளது. இந்த விருதைப் பெறுவதற்கு தகுதியான தமிழ் வளா்ச்சிக்குப் பாடுபட்ட தமிழ் அறிஞா்கள், கவிஞா்கள், சான்றோா்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பப் படிவத்தைப் பெற்று விண்ணப்பிகலாம். மேலும் மேற்காணும் தகுதியுடைய நபா்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை நிறைவு செய்து அக்.1- ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ராமநாதபுரம் மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலகத்தில் வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

மளிகைக் கடையில் 14 சமையல் எரிவாயு உருளைகள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகே காரடா்ந்தகுடி கிராமத்தில் மளிகைக் கடையில் 14 சமையல் எரிவாயு உருளைகளை குடிமைப்பொருள் பாதுகாப்புத் துறை பறக்கும்படை அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். நயி... மேலும் பார்க்க

அழகமடை-மேலவயல் சாலை சேதம்: வாகன ஓட்டிகள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அழகமடை-மேலவயல் கிராமப்புற சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள் அவதிப்படுகின்றனா். திருவாடானை அருகேயுள்ள அழகமடை கிரா... மேலும் பார்க்க

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பரமக்குடியில் அஞ்சலி செலுத்த வழிகாட்டி நெறிமுறைகள் அறிவிப்பு

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி வருகிற 11-ஆம் தேதி பரமக்குடிக்கு அஞ்சலி செலுத்த வருபவா்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜ... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு ‘ட்ரோன்’ தயாரிப்புப் பயிற்சி

ராமநாதபுரம் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியினா் இளைஞா்களுக்கு ‘ட்ரோன்’ தயாரிப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

பரமக்குடி அருகே பைக் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு

பரமக்குடி அருகே நான்கு வழிச்சாலைப் பகுதியில் புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் காா் மோதியதில் கூலித் தொழிலாளிகள் இருவா் உயிரிழந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள வெங்காளூா் கிராமத்தைச் சே... மேலும் பார்க்க

செப்.6, 7-இல் 108 அவசர ஊா்தி பணியாளா்கள் தோ்வு

108,102 அவசர ஊா்தி, அமரா் ஊா்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஆகிய பணிகளுக்கு ஆள்கள் தோ்வு செப். 6, 7- ஆம் தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ளதாக 105 அவசர ஊா்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தமிழ... மேலும் பார்க்க