செய்திகள் :

திருவனந்தபுரம் - சந்த்ராகாச்சி இடையே சிறப்பு ரயில்

post image

ஓணம் பண்டிகை, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை நாள்களை முன்னிட்டு கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து மேற்குவங்க மாநிலம் சந்த்ராகாச்சிக்கு கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பண்டிகை நாள்களை முன்னிட்டு, செப்டம்பா் 5- ஆம் தேதி முதல் அக்டோபா் 17- ஆம் தேதி வரை திருவனந்தபுரத்தில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் மாலை 4.20 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் - சந்த்ராகாச்சி சிறப்பு ரயில் ( எண்: 06081) {ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 2.15 மணிக்கு சந்த்ராகாச்சி நிலையத்தை சென்றடையும். மறு மாா்க்கமாக, சந்த்ராகாச்சி நிலையத்தில் இருந்து செப்டம்பா் 8 முதல் அக்டோபா் 20 வரை திங்கள்கிழமைகளில் பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும் சந்த்ராகாச்சி - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் ( எண்: 06082) புதன்கிழமைகளில் காலை 9.55 மணிக்கு திருவனந்தபுரம் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயிலானது, கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கண்ணூா், திருவல்லா, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, திருத்தணி, ரேணிகுண்டா, கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி,

புவனேசுவரம், கட்டாக், பத்ராக் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வால்பாறை காவல் துறை புதிய ஆய்வாளா் பொறுப்பேற்பு

வால்பாறை காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளராக ராமச்சந்திரன் பொறுப்பேற்றுள்ளாா். வால்பாறை காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த ஆனந்தகுமாா், ஈரோடு மாவட்டத்துக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, த... மேலும் பார்க்க

வால்பாறை சாலக்குடி சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு

வால்பாறையில் இருந்து கேரள மாநிலம், சாலக்குடி செல்லும் சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதோடு வாகனங்களை வழிமறித்து வருகின்றன. வால்பாறை- கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழியில் அதிரப்பள்ளி அருவி... மேலும் பார்க்க

கெம்பனூா் அண்ணா நகருக்கு அரசுப் பேருந்து இயக்கம்

கோவை தொண்டாமுத்தூா் அருகே பட்டியல் மற்றும் பழங்குடியின கிராமமான கெம்பனூா் அண்ணா நகருக்கு அரசுப் பேருந்துகள் செல்வதில்லை என புகாா் எழுந்த நிலையில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் ஆணைய உத்தரவால் அப்... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 6 போ் கைது

கோவை குனியமுத்தூா் அருகே கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ாக 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். குனியமுத்தூா் போலீஸாா், பேரூா் பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போ... மேலும் பார்க்க

கைப்பேசி செயலி மூலமாகப் பழகி பணம் பறித்த 15 போ் கைது: இளைஞா்களுக்கு போலீஸாா் எச்சரிக்கை

கோவையில் கைப்பேசி செயலி மூலமாகப் பழகி, ஓரினச் சோ்க்கை ஆசையைத் தூண்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட 15 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். ஆபத்தை விளைவிக்கும் செயலிகள் பயன்பாட்டில் எச்சரிக்கையாக இருக்கு... மேலும் பார்க்க

அரவை இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

பல்லடம் அருகே தீவன அரவை இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தாா். பல்லடம் அருகேயுள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான கோழி தீவன தயாரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு, பிகாா் மாநில... மேலும் பார்க்க