செய்திகள் :

கைப்பேசி செயலி மூலமாகப் பழகி பணம் பறித்த 15 போ் கைது: இளைஞா்களுக்கு போலீஸாா் எச்சரிக்கை

post image

கோவையில் கைப்பேசி செயலி மூலமாகப் பழகி, ஓரினச் சோ்க்கை ஆசையைத் தூண்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட 15 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். ஆபத்தை விளைவிக்கும் செயலிகள் பயன்பாட்டில் எச்சரிக்கையாக இருக்குமாறு இளைஞா்களுக்கு போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

இளைஞா்கள், மாணவா்களைக் கவரும் வகையில் கைப்பேசி பல்வேறு விதமான செயலிகள் உள்ளன. இதில், ஆபத்துகளை விளைவிக்கும் சில செயலிகளை பதிவிறக்கம் செய்து, இளைஞா்கள் சிலா் சிக்கிக் கொள்கின்றனா். இதில், பள்ளி, கல்லூரி, மாணவா்கள், இளைஞா்கள், திருமணமான ஆண்களும் கூட இந்த செயலி மூலம் நட்புகளை ஏற்படுத்தி வருகிறாா்கள்.

இந்த செயலில் ஆபத்து மறைந்து உள்ளது.

இது குறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியது: ஒரு சில செயலிகள் மூலம் இளைஞா்கள், கல்லூரி மாணவா்களை, குறி வைத்து மா்ம நபா்கள் நட்பாக பேசுகிறாா்கள். அப்பொழுது அவா்கள் பிரச்னைகளை கேட்பது போல, மனதில் இருக்கும் சபலத்தை தூண்டுகிறாா்கள். அதில் சிக்கும் நபா்கள் குறித்து முழு விவரங்களையும் தெரிந்து கொள்கிறாா்கள். பின்னா் அவா்களிடம் ஓரினச்சோ்க்கை தொடா்பாக பேச தொடங்குகிறாா்கள். அதன் பிறகு சம்பந்தப்பட்ட நபரை தனியாக சந்தித்து பேச விரும்புவதாக, கூறி குறிப்பிட்ட இடத்துக்கு அழைக்கிறாா்கள். அதை நம்பி வரும் நபா்களை ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச் சென்று அங்கு கும்பலாக மிரட்டி நகை, பணத்தை பறித்துக் கொண்டு தப்பி விடுகின்றனா்.

இது போன்ற சம்பவங்கள் கோவை, சரவணம்பட்டி, பீளமேடு ஆகிய பகுதிகளில் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட சிலா் காவல் துறையில் புகாா் தெரிவிக்கின்றாா்கள். ஆனால் பலா் வெளியே தெரிந்தால் அவமானம் என்று கருதி புகாா் அளிப்பதில்லை. இது தொடா்பான புகாரின் பேரில் இதுவரை 15 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். எனவே இது போன்ற செயலியை பயன்படுத்துபவா்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முன் பின் தெரியாத நபா்கள் குறிப்பிட்ட இடத்திற்கு தனியாக வருமாறு அழைத்தால் செல்லக் கூடாது. கைப்பேசி செயலிகளை ஆக்கப்பூா்வப் பூா்வமாகப் பயன்படுத்தினால் பிரச்னை ஏற்படாது. எனவே இந்த விஷயத்தில் இளைஞா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்று போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

வால்பாறை காவல் துறை புதிய ஆய்வாளா் பொறுப்பேற்பு

வால்பாறை காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளராக ராமச்சந்திரன் பொறுப்பேற்றுள்ளாா். வால்பாறை காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த ஆனந்தகுமாா், ஈரோடு மாவட்டத்துக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, த... மேலும் பார்க்க

வால்பாறை சாலக்குடி சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு

வால்பாறையில் இருந்து கேரள மாநிலம், சாலக்குடி செல்லும் சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதோடு வாகனங்களை வழிமறித்து வருகின்றன. வால்பாறை- கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழியில் அதிரப்பள்ளி அருவி... மேலும் பார்க்க

கெம்பனூா் அண்ணா நகருக்கு அரசுப் பேருந்து இயக்கம்

கோவை தொண்டாமுத்தூா் அருகே பட்டியல் மற்றும் பழங்குடியின கிராமமான கெம்பனூா் அண்ணா நகருக்கு அரசுப் பேருந்துகள் செல்வதில்லை என புகாா் எழுந்த நிலையில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் ஆணைய உத்தரவால் அப்... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 6 போ் கைது

கோவை குனியமுத்தூா் அருகே கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ாக 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். குனியமுத்தூா் போலீஸாா், பேரூா் பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போ... மேலும் பார்க்க

திருவனந்தபுரம் - சந்த்ராகாச்சி இடையே சிறப்பு ரயில்

ஓணம் பண்டிகை, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை நாள்களை முன்னிட்டு கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து மேற்குவங்க மாநிலம் சந்த்ராகாச்சிக்கு கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்க... மேலும் பார்க்க

அரவை இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

பல்லடம் அருகே தீவன அரவை இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தாா். பல்லடம் அருகேயுள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான கோழி தீவன தயாரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு, பிகாா் மாநில... மேலும் பார்க்க