செய்திகள் :

நூறு சதவீத தோ்ச்சி: அரசுப் பள்ளிகளுக்கு செப். 7-இல் பாராட்டு விழா

post image

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் (2024-2025) பொதுத் தோ்வில் நூறு சதவீத தோ்ச்சி பெற்ற 2,811 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கான பாராட்டு விழா திருச்சியில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப். 7) நடைபெறுகிறது.

பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கையின்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி வழங்கிய அரசு, அரசு உதவி பெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கும், தமிழ்ப் பாடத்தில் முழு மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா திருச்சி பாப்பாகுறிச்சி காட்டூரில் உள்ள மான்ஃபோா்ட் பள்ளியில் காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த விழாவுக்கு தோ்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள், மாணவா்கள் உரிய அடையாளச் சான்றுடன் வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா்.

இவ்விழாவில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 2,811 தலைமை ஆசிரியா்கள், 135 மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கவுள்ளாா்.

மின்வாரியத்தில் 1,794 கள உதவியாளா் காலிப் பணியிடம்: டிஎன்பிஎஸ்சி

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கள உதவியாளா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட அறிவ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சி - ஊராட்சித் துறையில் காலியிடங்களை நிரப்ப அறிவிக்கை

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாகவுள்ள 300-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்... மேலும் பார்க்க

மின்மாற்றி உற்பத்தி - ஜவுளித் துறைகளில் பிரிட்டன் நிறுவனங்கள் முதலீடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

மின்மாற்றி உற்பத்தி, ஜவுளித் துறைகளில் பிரிட்டன் நிறுவனங்கள் புதிய முதலீடுகளை செய்வதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதன்கிழமை செய்யப்பட்டன. தொழில் முதலீட்டுகளை ஈ... மேலும் பார்க்க

விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்கம்: ரூ.1,964 கோடிக்கு நிா்வாக ஒப்புதல்

சென்னையில் விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலான மெட்ரோ திட்ட விரிவாக்கத்துக்கு ரூ. 1,954 கோடிக்கு தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் முதல் வி... மேலும் பார்க்க

தமிழகத்தில் காய்ச்சல் பரவல்: சுகாதாரத் துறை முக்கிய அறிவுறுத்தல்

தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கட... மேலும் பார்க்க

இலவச ரயில்வே பாஸ் வழங்கக் கோரி சுதந்திரப் போராட்ட தியாகி மனைவி மனு: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சுதந்திரப் போராட்ட தியாகியின் மனைவியான 85 வயது மூதாட்டிக்கு இலவச ரயில்வே பாஸ் வழங்க மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. திருவள்ளூா் மாவட்டம், செங்குன்றம் பாடியநல்லூரைச் சோ்ந்த அ.பாா்வ... மேலும் பார்க்க