செய்திகள் :

திண்டிவனம்: "மன்னிப்பு கேட்பது போல என் இடுப்பில் கை வைத்தார்" - திமுக பெண் கவுன்சிலர் புகார்

post image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வருபவர் முனியப்பன்.

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவருக்கும், பிரபல சாராய வியாபாரியான மரூர் ராஜாவின் மனைவியும், 20-வது வார்டு கவுன்சிலருமான ரம்யாவுக்கும்இடையேயான வாக்குவாதத்தில், ரம்யாவின் காலில் முனியப்பன் விழ வைக்கப்பட்டதாக எழுந்திருக்கும் புகார் தமிழ்நாடு அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நகராட்சி ஆணையர் அறையிலிருந்த சிசிடிவியில் பதிவான அந்தக் காட்சி, சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

சாராய வியாபாரி மரூர் ராஜா, கவுன்சிலர் ரம்யா, முன்னாள் அமைச்சர் மஸ்தான்
சாராய வியாபாரி மரூர் ராஜா, கவுன்சிலர் ரம்யா, முன்னாள் அமைச்சர் மஸ்தான்

அதன் தொடர்ச்சியாக முனியப்பன் அளித்த புகாரின் அடிப்படையில் நகராட்சித் தலைவரின் கணவரும் கவுன்சிலருமான ரவிச்சந்திரன், நகராட்சி அதிகாரிகளான நெடுமாறன், பழனி, திலகவதி, செந்தில்குமார், ஆனந்தன், காமராஜ், பிர்லா செல்வம் உள்ளிட்ட 5 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் முனியப்பன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக டி.எஸ்.பி பிரகாஷிடம் புகாரளித்திருக்கிறார் ரம்யா, அந்தப் புகாரில், "ஆகஸ்ட் 29-ம் தேதி பணி தொடர்பாக திண்டிவனம் நகராட்சி அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.

அப்போது கோப்புகளைத் தேடிக் கொண்டிருந்த முனியப்பனிடம், மகா என்பவரை உதவிக்கு வைத்துத் தேடுமாறு கூறினேன். அதற்கு முனியப்பன் என்னைத் தகாத வார்த்தைகளால் திட்டினார். அப்போது, `ஏன் ஒருமையில் பேசுகிறீர்கள். மரியாதையாகப் பேசுங்கள்’ என்று முனியப்பனிடம் கூறினேன். அதையடுத்து முனியப்பன் நடந்து கொண்ட விதம் குறித்து எழுத்து மூலமாகப் புகாரளிக்க அன்று மாலை 5 மணிக்கு ஆணையரிடம் சென்றேன்.

அப்போது முனியப்பனையும் அங்கு அழைத்த அதிகாரிகள், முனியப்பன் மீது புகாரளித்தால் அவரது பதவி உயர்வில் பிரச்னை ஏற்படும். அதனால் புகாரளிக்காதீர்கள் என்றனர்.

காமராஜ், நகராட்சித் தலைவர் நிர்மலா, அவரது கனவர் கவுன்சிலர் ரவிச்சந்திரன்
காமராஜ், நகராட்சித் தலைவர் நிர்மலா, அவரது கனவர் கவுன்சிலர் ரவிச்சந்திரன்

அப்போது திடீரென முனியப்பன் தானாக என் காலில் விழுவது போல விழுந்தார். அப்போது அவரது இடது கையை என் மீது வைத்து அருவருக்கத்தக்க முறையில் தவறாக நடந்து கொண்டார். நானும், அங்கிருந்தவர்களும் அவரை எழுந்திருக்கும்படி வற்புறுத்தியும் அவர் எழுந்திருக்கவே இல்லை.

அதையடுத்து சுதாரித்துக் கொண்ட நான், நாற்காலியை நகர்த்திக் கொண்டு உட்கார்ந்தேன். என்னிடம் அருவருக்கத்தக்க விதத்தில் தவறாக நடந்து கொண்ட நகராட்சி இளநிலைப் பொறியாளர் முனியப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

சொத்துக் குவிப்பு வழக்கு; அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரன்ட்; செப்., 15-க்குள் அமல்படுத்த உத்தரவு!

திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன், 2006 - 2011 ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, 2007 - 2009 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 1.40 கோடி சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரின் ம... மேலும் பார்க்க

பிரதமர் தாய் அவமதிப்பு விவகாரம்: "வெளிநாட்டில் சிரிக்கிறார், இங்கு அழுகிறார்" - தேஜஸ்வி விமர்சனம்

ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், பிரதமர் மோடி அவரது தாய் காங்கிரஸ், ஆர்.ஜே.டி பேரணியில் அவமதிக்கப்படதாகப் பேசியது ஒரு நாடகம் எனப் பேசியுள்ளார்.மோடியை விமர்சித்துப் பேசிய தேஜஸ்வி, "நம் எல்லோரு... மேலும் பார்க்க

NIRF அறிக்கை: "நாட்டின் தலைசிறந்த 17 கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளது" - ஸ்டாலின் பெருமிதம்!

தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) வெளியிட்டுள்ள 2025ம் ஆண்டுக்கான தரவரிசையில் தமிழக கல்வி நிறுவனங்கள் முதலிடம் பிடித்திருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம். கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வ... மேலும் பார்க்க

அதிமுக-வின் சூப்பர் சீனியர்; எம்.ஜி.ஆர் - ஜெ காலத்து ரத்தத்தின் ரத்தம் - யார் இந்த செங்கோட்டையன்?!

முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன்அதிமுக-வுக்குள் மீண்டும் ஒரு வெடியை கொளுத்திப் போட்டிருக்கிறார். நாளை காலை 9 மணிக்கு மனம் விட்டுப் பேசப் போகிறேன் என தேதி நேரமெல்லாம் குறித்திருக்கிறார். எடப்பாடிக்கும்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: "வெளிய போங்க; அதான் உத்தரவு" - பத்திரிகையாளர்களை மிரட்டிய போலீஸ்

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடி நள்ளிரவில் கைதான தூய்மைப் பணியாளர்கள், சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் இன்று கூடியிருந்தனர். அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாகக் கைது செய்தனர். அப்போது... மேலும் பார்க்க