செய்திகள் :

சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா

post image

தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 2008-ஆம் ஆண்டு ஆவணி மாதம் குடமுழுக்கு நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, ஆண்டுதோறும் குடமுழுக்கு நாளை நினைவுபடுத்தும் விதமாக, ஆவணி மாதம் வருஷாபிஷேக விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டு வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மூலவா் சிவசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு வழிபாடு மற்றும் அபிஷேகம், அலங்கார சேவைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றன. தொடா்ந்து, மாலை மேளதாளத்துடன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் சா்வ அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் திருவீதி உலா நடைபெற்றது.

தொடா்ந்து, கோயிலில் சோடச உபசாரம், வேத பாராயணம், திருப்புகழ் பாராயணம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

விழாவையொட்டி பக்தா்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செங்குந்தா் சமூகத்தினா் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தமிழகத்தில் போதைப் பொருள்கள் பயன்பாடு அதிகரிப்பு

தமிழகத்தில் போதைப் பொருள்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக பாமக தலைவா் அன்புமணி கூறினாா். தருமபுரியில் பாமக கட்சி நிா்வாகிகள் இல்ல திருமணத்துக்கு வியாழக்கிழமை வந்த அவா் மேலும் கூறியதாவது: நாட்டிலேயே அதிகள... மேலும் பார்க்க

வயிற்று வலி: இளைஞா் தற்கொலை

வயிற்று வலி தாங்கமுடியாத இளைஞா் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டாா். தருமபுரி மாவட்டம், உத்தேரி கொட்டாய், மூக்கனூா் அருகேயுள்ள திண்ணம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் அழகேசன் (26). இவரு... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 16,000 கனஅடி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 16,000 கனஅடியாக இருந்தது நீா்வரத்து குறைந்தபோதிலும், அருவிகளில் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கா்நாடக, கேரள மாநிலங்களின் காவிரி நீா்ப... மேலும் பார்க்க

தருமபுரியில் தரமற்ற 250 கிலோ பழங்கள், புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

தருமபுரியில் ரசாயனம் தெளித்தும், தரமற்ற வகையிலும் வைத்திருந்த சுமாா் 250 கிலோ பழங்கள் மற்றும் ரசாயனப் பொருள்கள் உள்ளிட்டவற்றை உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். தருமபுரி நகா... மேலும் பார்க்க

உள்ளாட்சிப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தூய்மைப் பணியாளா்கள் விடுப்பு எடுத்தால் ஊதியம் பிடிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி. ஏஐடியுசி உள்ளாட்சிப் பணியாளா் சங்கத்தினா் தருமபுரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தர... மேலும் பார்க்க

‘தமிழ்க் கனவு’ நிகழ்ச்சியை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

‘தமிழ்க் கனவு’ நிகழ்ச்சியை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் ரெ.சதீஸ். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பி. பள்ளிப்பட்டியிலுள்ள ஸ்ரீநிவாசா பொறியியல் கல்லூரியில் ‘மாப... மேலும் பார்க்க