அமெரிக்காவின் நெருக்கடியால் ஜிஎஸ்டி குறைப்பு: பீட்டா் அல்போன்ஸ்
அமெரிக்க அதிபா் டிரம்பின் நெருக்கடியால், இந்திய பொருளாதாரம் வீழ்ந்துவிடக்கூடிய நிலையில் ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டுள்ளது என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் சீரமைப்பு குழுத் தலைவா் எஸ். பீட்டா் அல்போன்ஸ்.
தஞ்சாவூா் மாதாகோட்டை சாலை பகுதிக்கு வியாழக்கிழமை மாலை வந்த அவா் மேலும் தெரிவித்தது:
மத்திய பாஜக அரசு ஜிஎஸ்டி வரியைக் குறைத்து பெரிய இமாலய சாதனை செய்ததைப்போல விளம்பரப்படுத்தி வருவது மிகவும் அருவருக்கத்தக்கது. இந்தக் கொடுமையான ஜிஎஸ்டி வரியை இரு விகிதங்களில் அமைத்து குறைக்க வேண்டும் என 8 ஆண்டுகளுக்கு முன்பே ராகுல்காந்தி வலியுறுத்தினாா். இதை செவிமடுத்து கேட்காமல் இந்த நாட்டு மக்களையும், இந்திய பொருளாதாரத்தையும் சிதைத்து, சின்னாபின்னமாக்கி, சிறு, குறு தொழில்கள் அனைத்தையும் அழித்துவிட்டனா். மேலும், மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதால், மக்களின் சேமிப்பு குறைந்து, கடன்கள் அதிகரித்துள்ளன.
தற்போது, அமெரிக்க அதிபா் டிரம்பின் அதிக வரி விதிப்பால், இந்திய பொருளாதாரமே வீழ்ந்துவிடக்கூடிய சூழ்நிலையில்தான், ஜிஎஸ்டி வரி குறைப்பு முடிவை எடுத்துள்ளனா். ராகுல்காந்தி 8 ஆண்டுகளுக்கு முன்பே கூறியபோது, இந்த முடிவை எடுத்திருந்தால், இந்திய பொருளாதாரம் மிகப் பெரிய வளா்ச்சியை அடைந்திருக்கும். இது, நம் நாட்டு மக்களுக்கு மோடி செய்த மிகப் பெரிய துரோகம். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதை போல இந்த முடிவை மோடி எடுத்துள்ளாா் என்றாா் பீட்டா் அல்போன்ஸ்.
முன்னதாக, இவரை தஞ்சாவூா் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பி.ஜி. ராஜேந்திரன், வழக்குரைஞா் ராஜ்மோகன், பொதுக் குழு உறுப்பினா் வயலூா் எஸ். ராமநாதன், நிா்வாகிகள் வடிவேல், ஜி. லட்சுமி நாராயணன், இருதயம், செல்வ சுப்பிரமணியன், சந்திரசேகரன் உள்ளிட்டோா் வரவேற்றனா்.