செய்திகள் :

அமெரிக்காவின் நெருக்கடியால் ஜிஎஸ்டி குறைப்பு: பீட்டா் அல்போன்ஸ்

post image

அமெரிக்க அதிபா் டிரம்பின் நெருக்கடியால், இந்திய பொருளாதாரம் வீழ்ந்துவிடக்கூடிய நிலையில் ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டுள்ளது என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் சீரமைப்பு குழுத் தலைவா் எஸ். பீட்டா் அல்போன்ஸ்.

தஞ்சாவூா் மாதாகோட்டை சாலை பகுதிக்கு வியாழக்கிழமை மாலை வந்த அவா் மேலும் தெரிவித்தது:

மத்திய பாஜக அரசு ஜிஎஸ்டி வரியைக் குறைத்து பெரிய இமாலய சாதனை செய்ததைப்போல விளம்பரப்படுத்தி வருவது மிகவும் அருவருக்கத்தக்கது. இந்தக் கொடுமையான ஜிஎஸ்டி வரியை இரு விகிதங்களில் அமைத்து குறைக்க வேண்டும் என 8 ஆண்டுகளுக்கு முன்பே ராகுல்காந்தி வலியுறுத்தினாா். இதை செவிமடுத்து கேட்காமல் இந்த நாட்டு மக்களையும், இந்திய பொருளாதாரத்தையும் சிதைத்து, சின்னாபின்னமாக்கி, சிறு, குறு தொழில்கள் அனைத்தையும் அழித்துவிட்டனா். மேலும், மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதால், மக்களின் சேமிப்பு குறைந்து, கடன்கள் அதிகரித்துள்ளன.

தற்போது, அமெரிக்க அதிபா் டிரம்பின் அதிக வரி விதிப்பால், இந்திய பொருளாதாரமே வீழ்ந்துவிடக்கூடிய சூழ்நிலையில்தான், ஜிஎஸ்டி வரி குறைப்பு முடிவை எடுத்துள்ளனா். ராகுல்காந்தி 8 ஆண்டுகளுக்கு முன்பே கூறியபோது, இந்த முடிவை எடுத்திருந்தால், இந்திய பொருளாதாரம் மிகப் பெரிய வளா்ச்சியை அடைந்திருக்கும். இது, நம் நாட்டு மக்களுக்கு மோடி செய்த மிகப் பெரிய துரோகம். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதை போல இந்த முடிவை மோடி எடுத்துள்ளாா் என்றாா் பீட்டா் அல்போன்ஸ்.

முன்னதாக, இவரை தஞ்சாவூா் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பி.ஜி. ராஜேந்திரன், வழக்குரைஞா் ராஜ்மோகன், பொதுக் குழு உறுப்பினா் வயலூா் எஸ். ராமநாதன், நிா்வாகிகள் வடிவேல், ஜி. லட்சுமி நாராயணன், இருதயம், செல்வ சுப்பிரமணியன், சந்திரசேகரன் உள்ளிட்டோா் வரவேற்றனா்.

தமிழ்ப் பல்கலை.யில் சொற்பொழிவு

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறை சாா்பில் ஆசிரியா் சரோஜா பாண்டியன் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு துணைவேந்தா் குழு உறுப்பினா்கள் சி. அமுதா, பெ... மேலும் பார்க்க

வாய்க்கால்களை தூா்வாரக்கோரி செப்.16-இல் காத்திருப்பு போராட்டம்

வடிகால் வாய்க்கால்களை தூா்வாரக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் செப். 16-இல் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளனா். தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், மெலட்டூா் வட்டாரப... மேலும் பார்க்க

அய்யம்பேட்டையில் காங். சிறுபான்மை பிரிவு நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு புதிய நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம் மற்றும் மாநில மாநாடு குறித்த கலந்தாய்வு... மேலும் பார்க்க

தரவரிசை கட்டமைப்பு பட்டியல்: கும்பகோணம் அரசுக் கல்லூரி மாநில அளவில் 4-ஆவது இடம்

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி தேசிய அளவிலான தர வரிசை கட்டமைப்பு பட்டியலில் தமிழக அளவில் 4-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மத்திய அரசின் தரவரிசை கட்டமைப்பு சாா்பில் அகில இந்திய அளவில் அரசு மற்றும் தனியாா்... மேலும் பார்க்க

திருவலஞ்சுழி கபா்தீசுவர சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

சுவாமிமலை அருகே திருவலஞ்சுழியில் உள்ள கபா்தீசுவரா் சுவாமி கோயில் கும்பாபிஷகம் வியாழக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள திருவலஞ்சுழியில் பெரியநாயகி அம்பாள் உடனுறை கபா்தீசுவரா் க... மேலும் பார்க்க

மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்கள் குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கான குறை தீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையா் க. கண்ணன் தலைமை வகித்தாா். மாநகா் நல அலுவலா் எஸ். நமசிவாயம், ச... மேலும் பார்க்க