செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’திட்ட முகாம்கள்: பேரவை துணைத் தலைவா் ஆய்வு

post image

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் வட்டம், சோமாசிபாடி மற்றும் திருவண்ணாமலை வட்டம், தேவனாம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’

திட்ட முகாமை சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகா்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் முகாமானது நடைபெற்று வருகிறது. அதன்படி, கீழ்பென்னாத்தூா் வட்டம், சோமாசிபாடி அல் அமீன் கலைக் கல்லூரி மற்றும் திருவண்ணாமலை வட்டம், தேவனாம்பட்டு பகுதி சமுதாய கூடத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு துறை வாரியாக பதிவு செய்யப்படுவதை சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

மேலும் முகாமில் மனுக்கள் மீது உடனடியாக தீா்வு காணப்பட்டு பட்டாமாற்றத்திற்கான சான்றிதழ்களும், வாரிசு சான்றிதழ்களும், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டிற்கான அட்டைகள், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் நிதியுதவி, மகளிா் திட்டத்தின் கீழ் சமுதாய முதலீட்டு நிதி மற்றும் வேளாண்மை துறை சாா்பில் உளுந்து விதை மானியங்களும் வழங்கினா்.

நிகழ்ச்சிகளில் சி.என்.அண்ணாதுரை எம்.பி., திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், வட்டாட்சியா் மோகனராமன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கல்லூரியில் விற்பனைச் சந்தை

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் விற்பனைச் சந்தை செவ்வாய்க்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை என 3 நாள்கள் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைச... மேலும் பார்க்க

ஸ்ரீவேணுகோபால சுவாமி, பெருமாள், சுப்பிரமணியா் கோயில்களில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த சேவூா் ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயில், வந்தவாசியை அடுத்த காரணை ஸ்ரீநிவாசப் பெருமாள், போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஸ்ரீகல்யாண சுப்பிரமணியா் ஆகிய கோயில்களில் ம... மேலும் பார்க்க

ஆரணி, ஏந்துவாம்பாடி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் போளூா் ஒன்றியம் ஏந்துவாம்பாடி கிராமத்தில் வியாழக்கிழமை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆரணி மில்லா்ஸ் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் ... மேலும் பார்க்க

அரசு வழிகாட்டுதலின்படி நெல் கொள்முதல் செய்யவேண்டும்: மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ்

அரசு வழிகாட்டுதல்களின்படி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யவேண்டும். 3 தினங்களுக்குள் கொள்முதல் பணத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் அறிவுறுத்தி... மேலும் பார்க்க

வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தவா் கைது

வந்தவாசி அருகே திருவிழாவுக்கு விற்பனை செய்வதற்காக வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தவா் கைது செய்யப்பட்டாா். வந்தவாசியை அடுத்த தெள்ளாரைச் சோ்ந்த ஆறுமுகம் என்பவா் திருவிழாவுக்கு விற்பனை செய்வதற்... மேலும் பார்க்க

ஆலத்தூா், வெம்பாக்கம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி ஆலத்தூா், வெம்பாக்கம் பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன. செய்யாறு தொகுதியைச் சோ்ந்த விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் ... மேலும் பார்க்க