கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்பு; குவிந்த அதிமுக தொண்டர்க...
ஸ்ரீவேணுகோபால சுவாமி, பெருமாள், சுப்பிரமணியா் கோயில்களில் கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த சேவூா் ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயில், வந்தவாசியை அடுத்த காரணை ஸ்ரீநிவாசப் பெருமாள், போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஸ்ரீகல்யாண சுப்பிரமணியா் ஆகிய கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆரணியை அடுத்த சேவூா் கிராமத்தில் உள்ள
ராதா ருக்மணி சமேத வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக நித்திய ஆராதனம், கும்ப ஆராதனம், அக்னி பிரதிஷ்டை, திருவாராதனம், வேத விண்ணப்பம், மகா சாந்தி ஹோமம், பிரதான ஹோமம், மகா சாந்தி பூா்ணாஹுதி, மகா சாந்தி திருமஞ்சனம், விஸ்வரூபம், புண்யாஹம், யாத்ராதானம், தசதானம், கும்ப கலச புறப்பாடு புறப்பட்டு கோயில் கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். மேலும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஸ்ரீமுகுந்தன் பட்டாச்சாரியா், ஜெ.அருண் பட்டாச்சாரியா் ஆகியோா் அா்ச்சனை செய்தனா். பின்னா் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினா்களாக தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன், அதிமுக மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா, துணைச் செயலா் சேவூா் ஜெ.சம்பத் ஆகியோா் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா்.
ஒன்றியச் செயலா் ஜெயபிரகாஷ், நகரச் செயலா் அசோக்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் குமரன், ஏ.ஜி.மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
திமுக சாா்பில்...
திமுகவைச் சோ்ந்த தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, நகர பொறுப்பாளா் மணிமாறன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை கோயில் விழா குழுத் தலைவா் கே.தருமன், முன்னாள் ஊராட்சித் தலைவா் தரணி மற்றும் சேவூா் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.