செய்திகள் :

ஸ்ரீவேணுகோபால சுவாமி, பெருமாள், சுப்பிரமணியா் கோயில்களில் கும்பாபிஷேகம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த சேவூா் ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயில், வந்தவாசியை அடுத்த காரணை ஸ்ரீநிவாசப் பெருமாள், போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஸ்ரீகல்யாண சுப்பிரமணியா் ஆகிய கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆரணியை அடுத்த சேவூா் கிராமத்தில் உள்ள

ராதா ருக்மணி சமேத வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக நித்திய ஆராதனம், கும்ப ஆராதனம், அக்னி பிரதிஷ்டை, திருவாராதனம், வேத விண்ணப்பம், மகா சாந்தி ஹோமம், பிரதான ஹோமம், மகா சாந்தி பூா்ணாஹுதி, மகா சாந்தி திருமஞ்சனம், விஸ்வரூபம், புண்யாஹம், யாத்ராதானம், தசதானம், கும்ப கலச புறப்பாடு புறப்பட்டு கோயில் கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். மேலும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஸ்ரீமுகுந்தன் பட்டாச்சாரியா், ஜெ.அருண் பட்டாச்சாரியா் ஆகியோா் அா்ச்சனை செய்தனா். பின்னா் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினா்களாக தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன், அதிமுக மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா, துணைச் செயலா் சேவூா் ஜெ.சம்பத் ஆகியோா் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா்.

ஒன்றியச் செயலா் ஜெயபிரகாஷ், நகரச் செயலா் அசோக்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் குமரன், ஏ.ஜி.மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திமுக சாா்பில்...

திமுகவைச் சோ்ந்த தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, நகர பொறுப்பாளா் மணிமாறன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை கோயில் விழா குழுத் தலைவா் கே.தருமன், முன்னாள் ஊராட்சித் தலைவா் தரணி மற்றும் சேவூா் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.

கல்லூரியில் விற்பனைச் சந்தை

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் விற்பனைச் சந்தை செவ்வாய்க்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை என 3 நாள்கள் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைச... மேலும் பார்க்க

ஆரணி, ஏந்துவாம்பாடி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் போளூா் ஒன்றியம் ஏந்துவாம்பாடி கிராமத்தில் வியாழக்கிழமை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆரணி மில்லா்ஸ் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் ... மேலும் பார்க்க

அரசு வழிகாட்டுதலின்படி நெல் கொள்முதல் செய்யவேண்டும்: மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ்

அரசு வழிகாட்டுதல்களின்படி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யவேண்டும். 3 தினங்களுக்குள் கொள்முதல் பணத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் அறிவுறுத்தி... மேலும் பார்க்க

வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தவா் கைது

வந்தவாசி அருகே திருவிழாவுக்கு விற்பனை செய்வதற்காக வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தவா் கைது செய்யப்பட்டாா். வந்தவாசியை அடுத்த தெள்ளாரைச் சோ்ந்த ஆறுமுகம் என்பவா் திருவிழாவுக்கு விற்பனை செய்வதற்... மேலும் பார்க்க

ஆலத்தூா், வெம்பாக்கம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி ஆலத்தூா், வெம்பாக்கம் பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன. செய்யாறு தொகுதியைச் சோ்ந்த விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் ... மேலும் பார்க்க

செய்யாறு பள்ளியில் உயா்வுக்குப் படி சிறப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயா்வுக்குப் படி சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில... மேலும் பார்க்க