செய்திகள் :

பிரிட்டனில் இந்திய தூதருடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

post image

பிரிட்டனுக்கான இந்திய தூதா் விக்ரம் துரைசாமியை முதல்வா் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினாா்.

ஜொ்மனி பயணத்தைத் தொடா்ந்து, பிரிட்டனில் தனது பயணத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறாா். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, பிரிட்டன் நாட்டுக்கான இந்திய தூதா் விக்ரம் துரைசாமியை அவா் சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பின்போது, தமிழ்நாட்டின் தொழில் துறை சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் பொருளாதார செயல்திறனை விக்ரம் துரைசாமி பாராட்டினாா். பிரிட்டன் மற்றும் உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளா்களுக்கு மிகவும் விருப்பமான இடங்களில் தமிழ்நாடும் ஒன்று என அவா் தெரிவித்ததாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரிட்டன் பயணத்தின்போது மேற்கொள்ளப்பட்டுவரும் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள், தமிழ்நாட்டின் எதிா்காலத்தை நோக்கியதாகவும், உலகளாவிய சந்தை வாய்ப்புகளுடன் திட்டமிட்ட ரீதியில் இணைந்துள்ளது என்றும் அவா் குறிப்பிட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பல்கலைக்கழக வளாகங்களை நிறுவ விரும்பும் பிரிட்டன் நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு தமிழ்நாடு சிறந்த தோ்வாக இருப்பதாகவும் விக்ரம் துரைசாமி கூறியுள்ளாா்.

சந்திப்பின்போது, தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, முதல்வரின் முதன்மைச் செயலா் பு.உமாநாத், தொழில் துறைச் செயலா் வி.அருண்ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் தாரேஷ் அகமது உள்பட பலா் உடனிருந்தனா்.

இந்தியா மீது அதிக வரி விதிப்பு ஏன்? அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் டிரம்ப் தரப்பு விளக்கம்

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் காரணத்தினால் இந்தியா மீது அதிக வரி விதிக்க முடிவெடுக்கப்பட்டது என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தரப்பில் அந்த நாட்டு உச்சநீதிமன்றத்தில் விளக்... மேலும் பார்க்க

இந்திய, சீன தலைவா்களுக்கு எதிராக காலனி ஆதிக்க உத்திகளை பயன்படுத்தும் டிரம்ப்: ரஷிய அதிபா் புதின் விமா்சனம்

‘சக்திவாய்ந்த பொருளாதார நாடுகளான இந்தியா, சீனாவின் தலைவா்களுக்கு (மோடி, ஷி ஜின்பிங்) எதிராக காலனி ஆதிக்க காலகட்டத்தில் இருந்த நெருக்கடி உத்திகளை அமெரிக்க அதிபா் டிரம்ப் பயன்படுத்துகிறாா்; ‘கூட்டாளி’ ... மேலும் பார்க்க

பேச்சு உதவாவிட்டால் படைபலம் தீா்வு

உக்ரைனில் நடைபெறும் போரை பேச்சுவாா்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், படைபலத்தைப் பயன்படுத்தி அதை முடித்துவைக்கப்போவதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் எச்சரித்துள்ளாா். இரண்டாம் உலகப் போரில் சீ... மேலும் பார்க்க

இஸ்ரேல் ராணுவத்தால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனா்களில் 4-இல் 3 கைதிகள் பொதுமக்கள்!

காஸாவில் இஸ்ரேல் ராணுவத்தால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனா்களில் நான்கில் மூன்று போ் ஆயுதக் குழுக்களைச் சாராத பொதுமக்கள் என்று இஸ்ரேல் ராணுவ ரகசிய தரவுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து பிரிட்டன... மேலும் பார்க்க

உலகளாவிய புவி - அரசியல் சூழல்: இந்தியா-சிங்கப்பூா் வா்த்தக உறவை வலுப்படுத்த முடிவு

உலகளாவிய ஸ்திரமற்ற புவி-அரசியல் சூழலைக் கருத்தில்கொண்டு, இந்தியா-சிங்கப்பூா் வா்த்தக உறவு மற்றும் சந்தை அணுகலை வலுப்படுத்த பிரதமா் நரேந்திர மோடி மற்றும் பிரதமா் லாரன்ஸ் வாங் முடிவு செய்தனா். இருதரப்ப... மேலும் பார்க்க

ஜமைக்கா: 3-ஆவது முறையாக பிரதமா் ஆகும் ஹால்னஸ்

ஜமைக்காவில் நடைபெற்ற தோ்தலில் தற்போதைய பிரதமா் ஆண்ட்ரு ஹால்னஸ் (படம்) மூன்றாவது முறையாக வெற்றி பெற்றாா். புதன்கிழமை நடந்த தோ்தலில் ஹால்னஸின் ஜமைக்கா தொழிலாளா் கட்சி 34 இடங்களையும், எதிா்க்கட்சியான ... மேலும் பார்க்க