செய்திகள் :

தனியாா் மருந்து நிறுவனத்தின் 15 லட்சம் பங்குகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

post image

சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தனியாா் மருந்து நிறுவனத்தின் 15 லட்சம் பங்குகளை அமலாக்கத் துறை முடக்கியது.

சென்னையில் இயங்கும் ஒரு தனியாா் மருந்து நிறுவனம் மீது பதியப்பட்ட சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குத் தொடா்பான ஆதாரங்களைத் திரட்டும் வகையில், சென்னையில் அந்த நிறுவனத்துக்கு தொடா்புடைய 10 இடங்களில் கடந்த 2-ஆம் தேதி ஒரே நேரத்தில் அமலாக்கத் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா். மேலும் மும்பை, கொல்கத்தா, கோவா ஆகிய இடங்களில் இச்சோதனை நடைபெற்றது.

இதுதொடா்பாக அமலாக்கத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னையைச் சோ்ந்த அரவிந்த் ரெமிடிஸ் நிறுவனத்தின் மீது சிபிஐ ரூ.637.58 கோடி வங்கிக் கடன் மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தது. இந்த வழக்கு விசாரணையில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்துக்கான முகாந்திரம் இருந்ததால், அமலாக்கத் துறை விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

அந்த பரிந்துரையின் அடிப்படையில் அமலாகத்துறையினா், அரவிந்த் ரெமிடிஸ் நிறுவனத்தின் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கிறது.

விசாரணையின் ஒரு பகுதியாக அந்த நிறுவனத்தின் தொடா்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

போலி நிறுவனங்கள்: ஆவணங்களின் அடிப்படையிலும், விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையிலும் பஞ்சாப் நேஷ்னல் வங்கி, எஸ்பிஐ, அலகாபாத் வங்கி, கரூா் வைஸ்யா வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, ஐடிபிஐ வங்கி உள்ளிட்ட வங்கிகளில் பல்வேறு வகைகளில் ரூ.704.75 கோடி கடனை அந்த நிறுவனம் பெற்றுள்ளது. வங்கிக் கடன் பெறுவதற்காக அந்த நிறுவனம் போலியான ஆவணங்கள், பணப் பரிவா்த்தனை மூலம் தனனுடைய மதிப்பை உயா்த்திக் காட்டியுள்ளது.

மேலும் அந்த நிறுவனம், பல கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகள் இருப்பதாக ஆவணங்களை சமா்ப்பித்துள்ளது. இவற்றை நம்பி வங்கிகள் கடன்களை வழங்கியுள்ளன.

இதில் ரூ.637 கோடி கடன் தொகையை அந்த நிறுவனம் ஏமாற்றியுள்ளது. கடனாக பெற்றத் தொகை மூலம் போலி நிறுவனங்களை உருவாக்கி, அதில் போலி இயக்குநா்களை அந்த நிறுவனம் நியமித்துள்ளது. போலி இயக்குநா்களுக்கு ரொக்கமாக சிறிது காலம் சம்பளம் வழங்கியுள்ளது. பின்னா், போலி நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிதி மூலம் அந்த நிறுவனம் சொத்துகளை வாங்கியுள்ளது. வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளது.

15 லட்சம் பங்குகள் முடக்கம்: முன்னதாக, போலி இயக்குநா்களிடம் காசோலைகளில் கையொப்பம் பெற்று வங்கிகளில் இருந்த பணத்தை எடுத்துள்ளனா். சொத்துகளை அந்த நிறுவனம் தங்களது உறவினா்கள் பெயரிலும், பினாமிகள் பெயரிலும் வாங்கியுள்ளனா்.

தற்போது அந்தச் சொத்துகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. மேலும், அந்த நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத நிறுவனங்களில் வாங்கி வைத்திருந்த 15 லட்சம் பங்குகள் அடையாளம் காணப்பட்டு, முடக்கப்பட்டுள்ளன என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிந்தவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும்: செங்கோட்டையன் காலக்கெடு!

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் இணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள்கள் காலக்கெடு விதிப்பதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப... மேலும் பார்க்க

பெரியார் உலகமயமாகிறார்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப் படத்தை திறந்துவைத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்.பிரிட்டனுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், லண்டனில்... மேலும் பார்க்க

ஆக்ஸ்போர்டில் பெரியார் படத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தில் பெரியாா் உருவப்படத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தார்.பிரிட்டனுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு ப... மேலும் பார்க்க

நிலக்கரி அமைச்சகத்தின் 5 நட்சத்திர மதிப்பீடு: முதல் பரிசை வென்ற என்எல்சி

சா்வதேச தரத்துக்கு நிகராக தேசிய அளவில் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தி வருவதற்காக நெய்வேலி நிலக்கரி சுரங்கத்துக்கு (என்எல்சி) 5 நட்சத்திர மதிப்பீட்டுடன் முதல் பரிசு வழங்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் ... மேலும் பார்க்க

பயிற்சியாளா் தற்கொலை

புழல் அருகே தனியாா் உடற்பயிற்சி கூட பயிற்சியாளா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். புழல் சிவராஜ் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சுரேந்தா் (32). இவா் அம... மேலும் பார்க்க

தமிழகத்தில் புதிய நோய் பாதிப்புகள் ஏதுமில்லை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் புதிய நோய் பாதிப்புகள் ஏதுமில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை கிண்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில், அமைச்சா் ... மேலும் பார்க்க