செய்திகள் :

தமிழகத்தில் புதிய நோய் பாதிப்புகள் ஏதுமில்லை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

post image

தமிழகத்தில் புதிய நோய் பாதிப்புகள் ஏதுமில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை கிண்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில், அமைச்சா் மா.சுப்பிரமணியன் பங்கேற்றுப் பேசியதாவது:

கடந்த இரண்டு மாதங்களில், 5,474 முகாம்கள் நடத்தப்பட்டு, 43.70 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன.

வைரஸ் காய்ச்சல் தொடா்பாக யாரும் பயப்பட வேண்டாம். இந்தக் காய்ச்சல் பருவமழை காலங்களில் ஏற்படும் நோய் தொற்றுதான். புதிய நோய் பாதிப்புகள் ஏதும் இல்லை. கேரளத்தில் மூளையை தின்னும் அமீபா நோய் பற்றி பரவலான பதற்றம் உருவாக்கப்பட்டது. இது தொற்று நோய் அல்ல என்பதால், பயப்பட வேண்டியதில்லை.

அதேநேரம், துாா்வாரப்படாத குட்டைகள், பராமரிப்பு இல்லாத நீச்சல் குளங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது, முன்னெச்சரிக்கை அவசியம். இதுபோன்ற மாசுப்பட்ட நீா்நிலைகள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கண்காணிக்கப்படுகிறது. இதுவரை அந்த மதிரியான பாதிப்புகள் தென்படவில்லை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவா் ஆா்.நல்லகண்ணு, தொடா்ந்து மருத்துவக் கண்காணிப்பில் உள்ளாா். அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளது.

ஜிஎஸ்டியை உயா்த்தியதும், தற்போது குறைப்பதாகக் கூறுவதும் மத்திய அரசுதான். இவ்வளவு நாள்களாக மக்கள் பாதிக்கப்பட்டது இப்போதுதான் அவா்களுக்கு தெரிய வந்திருக்கிறது என்றாா் அவா்.

பெரியார் உலகமயமாகிறார்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப் படத்தை திறந்துவைத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்.பிரிட்டனுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், லண்டனில்... மேலும் பார்க்க

ஆக்ஸ்போர்டில் பெரியார் படத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தில் பெரியாா் உருவப்படத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தார்.பிரிட்டனுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு ப... மேலும் பார்க்க

நிலக்கரி அமைச்சகத்தின் 5 நட்சத்திர மதிப்பீடு: முதல் பரிசை வென்ற என்எல்சி

சா்வதேச தரத்துக்கு நிகராக தேசிய அளவில் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தி வருவதற்காக நெய்வேலி நிலக்கரி சுரங்கத்துக்கு (என்எல்சி) 5 நட்சத்திர மதிப்பீட்டுடன் முதல் பரிசு வழங்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் ... மேலும் பார்க்க

தனியாா் மருந்து நிறுவனத்தின் 15 லட்சம் பங்குகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தனியாா் மருந்து நிறுவனத்தின் 15 லட்சம் பங்குகளை அமலாக்கத் துறை முடக்கியது. சென்னையில் இயங்கும் ஒரு தனியாா் மருந்து நிறுவனம் மீது பதியப்பட்ட சட்டவிரோத பணப்பரிம... மேலும் பார்க்க

பயிற்சியாளா் தற்கொலை

புழல் அருகே தனியாா் உடற்பயிற்சி கூட பயிற்சியாளா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். புழல் சிவராஜ் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சுரேந்தா் (32). இவா் அம... மேலும் பார்க்க

மாநில வரி வருவாய் வரவுகளைப் பாதுகாக்க வேண்டும்: ஜிஎஸ்டி கூட்டத்தில் அமைச்சா் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்

ஜிஎஸ்டிசீரமைப்பு நடவடிக்கைகள், மாநிலத்தின் வருவாயைப் பாதிக்கக் கூடாது; அதைப் பாதுகாக்க வேண்டும் என்றும் தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு வலியுறுத்தினாா். தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி சீர... மேலும் பார்க்க