செய்திகள் :

துபாயில் ரூ.35 கோடி லாட்டரி வென்ற இந்திய தொழிலாளி - என்ன செய்யப் போகிறார் தெரியுமா?

post image

துபாயில் வசிக்கும் இந்தியர் ஒருவர், 1 மில்லியன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் லாட்டரியில் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி அபுதாபி பிக் டிக்கெட் சீரிஸ் 278 டிரா நடைபெற்றது. இதில் சந்தீப் குமார் என்ற 30 வயது இளைஞர், 35 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசை பெற்றுள்ளார்.

sandeep kumar

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சந்தீப், கடந்த 3 ஆண்டுகளாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசித்து வருகிறார். துபாய் டிரைடாக்ஸ் என்ற நிறுவனத்தில் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார்.

கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து லாட்டரி வாங்கும் பழக்கம் கொண்டிருந்த சந்தீப், ஆகஸ்ட் 19ம் தேதி 20 நபர்களுடன் சேர்ந்து லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். அவருக்கு 200669 என்ற எண் கொண்ட லாட்டரி கிடைத்துள்ளது.

பிக் டிக்கெட் லாட்டரி நிறுவனம் அழைத்து வெற்றியை அறிவித்ததும், முதலில் நம்ப மறுத்தார் சந்தீப்.

Big Ticket

இந்தப் பணம் தன்னுடைய குடும்பத்தைக் காக்க உதவும் என்றும், குறிப்பாக உடல் நலமில்லாத தந்தையின் மருத்துவச் செலவுக்கு பயனளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா திரும்பியதும் சொந்த தொழிலில் ஈடுபடுவேன் என்றும் கூறியுள்ளார்.

திருமணம் ஆன சந்தீப் குமாருக்கு, இரண்டு சகோதரர்களும், ஒரு சகோதரியும் உள்ளனர். இந்த லாட்டரி, தனது குடும்பத்தை இன்னும் சிறப்பாக கவனிக்க நம்பிக்கையும் வலிமையும் அளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

`என்னுடைய வாழ்க்கையில் இதுபோன்ற மகிழ்ச்சியை அனுபவித்தது இல்லை' என்று கல்ஃப் நியூஸ் தளத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Fahadh Faasil: நடிகர் பஹத் பாசில் வாங்கியிருக்கும் `Ferrari Purosangue' - மதிப்பு என்ன தெரியுமா?

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பழக்கம் இருப்பது போல சிலருக்கு கார் கலெக்‌ஷன் பழக்கம் இருக்கும். இந்தியாவில் கார் கலெக்‌ஷன் செய்பவர்களின் பட்டியலை எடுத்தால் அதில் மலையாள நடிகர் ஃபஹத் பாசிலை தவிர்க்கவே முடியா... மேலும் பார்க்க

Bihar: `நள்ளிரவில் நடுரோட்டில் ஆட்டம்' - தேஜஸ்வி யாதவ் ரீல்ஸ்; கடுமையாக சாடிய பாஜக

இன்னும் சில மாதங்களில் பீகார் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் விரைவு திருத்தம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அதைத்... மேலும் பார்க்க

பீகார்: காதலி பேசாததால் கிராமத்துக்கே மின்சாரத்தை துண்டித்த இளைஞர்? - viral video-வின் பின்னணி என்ன?

காதலில் நாடகத்தன்மையான விஷயங்கள் நடப்பது சாதாரணமானதுதான். ஆனால் பீகாரில் காதலி தன்னிடம் பேசாததால் ஆத்திரமடைந்த இளைஞரின் செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. viral videoமின்சார கம்பத்தின் மேலேறிய இள... மேலும் பார்க்க

School Fees: "1-ம் வகுப்புக்கு ரூ. 8 லட்சம்" - வைரலான பள்ளிக் கட்டணம்; நிதி ஆலோசகர் சொல்வது என்ன?

பெங்களூருவில் உள்ள ஒரு பிரபலமான தனியார்ப் பள்ளியின் கல்விக் கட்டணம் (fee structure) அடங்கிய ஸ்க்ரீன்ஷாட் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது. 'எக்ஸ்' தளத்தில் பகிரப்பட்ட பதிவில், வெறும் பள்ளிக்கான ... மேலும் பார்க்க

`We are engaged’ - புகைப்படத்தைப் பகிர்ந்து நிச்சயதார்தத்த்தை அறிவித்த பிக்பாஸ் செலிபிரட்டிஸ்

சின்னத்திரையில் வில்லி கதாப்பாத்திரத்தில் களமிறங்கி பிக்பாஸ் சீசன் 7-ன் டைட்டிலை வென்றவர் அர்ச்சனா ரவிச்சந்திரன். பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகர் அருண் பிரசாந்த் பிக்பாஸ் சீசன்-8 ல் கல... மேலும் பார்க்க

பைக் பெட்டியை திறந்து ரூ.80,000 பணத்தை எடுத்த குரங்கு; மரத்தில் ஏறி செய்த வேலை!

பொதுவாக குரங்குகள் வீட்டில் உள்ள பொருட்கள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகத்திற்கு வந்த ஒருவரிடமிருந்து பணத்தை எடுத்த... மேலும் பார்க்க