செய்திகள் :

Bihar: `நள்ளிரவில் நடுரோட்டில் ஆட்டம்' - தேஜஸ்வி யாதவ் ரீல்ஸ்; கடுமையாக சாடிய பாஜக

post image

இன்னும் சில மாதங்களில் பீகார் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் விரைவு திருத்தம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதைத் தொடர்ந்து கர்நாடகா, பீகார் போன்ற மாநிலங்களில் நடந்த வாக்குத் திருட்டு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மேலும், மக்களின் வாக்குரிமையை மீட்கும் வகையில் வாக்காளர் அதிகார யாத்திரை என்ற யாத்திரையையும் மேற்கொண்டார்.

இந்த நிலையில், பீகார் எதிர்க்கட்சித் தலைவரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைவருமான தேஜஸ்வி யாதவ், பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் உள்ள மரைன் டிரைவ் சாலையில் சில இளைஞர்களுடன் சேர்ந்து நடனமாடி ரீல்ஸ் எடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ராகுல் காந்தி நடைப்பயணம்
ராகுல் காந்தி நடைப்பயணம்

எப்போது எடுக்கப்பட்டது?

16 நாள்களாக நடைபெற்ற 'வாக்காளர் அதிகார யாத்திரை' (Voter Adhikar Yatra) நிறைவடைந்த பிறகு எடுக்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரையில், தேஜஸ்வி யாதவ் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்தித்து உரையாடினார்.

நீண்ட பயணம் மற்றும் அரசியல் பரபரப்புக்கு பிறகே இந்த இளைஞர்களை சந்தித்து வீடியோ எடுத்துள்ளார். நடனத்தைத் தொடர்ந்து அந்த இளைஞர்களுடன் டீ குடிப்பது, பேசிக் கொண்டிருப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

சாடும் பாஜக:

இந்த வீடியோ வைரலான நிலையில், பா.ஜ.க-வின் தேசிய செய்தித் தொடர்பாளர் அஜய் அலோக், “தேஜஸ்வி யாதவ் நடுநிசி நேரத்தில் சாலையில் நடனமாடி ரீல்ஸ் உருவாக்குவது ஒரு பொறுப்பற்ற செயல்.

இது சட்டவிரோத செயல்களை ஊக்குவிப்பதாக இருக்கிறது. சாலையில் ரீல்ஸ் எடுப்பதால் பல விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இது போன்ற செயல்களுக்கு எதிராக பீகார் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

பாட்னாவின் மரைன் டிரைவ் "பிக்னிக் ஸ்பாட்" அல்ல. அங்கு இது போன்ற செயல்கள் அனுமதிக்கப்படக்கூடாது” எனச் சாடினார்.

மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி, “தேஜஸ்வி யாதவ் போன்றோர் நள்ளிரவில் சாலையில் நடனமாடி மகிழ்வது, நிதீஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ ஆட்சியில் பீகார் ஒரு நல்ல நிர்வாகத்தைக் கொண்ட மாநிலமாக இருப்பதைக் காட்டுகிறது.

லாலு குடும்பம் ஆட்சியில் இருந்திருந்தால், இந்த இளைஞர்கள் துப்பாக்கியுடன் டிஸ்கோ நடனமாடியிருப்பார்கள். அது போன்ற "ஜங்கிள் ராஜ்" (காட்டு ஆட்சி) மீண்டும் வராமல் இருக்க, என்.டி.ஏ கூட்டணி அவசியம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

பீகார்: காதலி பேசாததால் கிராமத்துக்கே மின்சாரத்தை துண்டித்த இளைஞர்? - viral video-வின் பின்னணி என்ன?

காதலில் நாடகத்தன்மையான விஷயங்கள் நடப்பது சாதாரணமானதுதான். ஆனால் பீகாரில் காதலி தன்னிடம் பேசாததால் ஆத்திரமடைந்த இளைஞரின் செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. viral videoமின்சார கம்பத்தின் மேலேறிய இள... மேலும் பார்க்க

School Fees: "1-ம் வகுப்புக்கு ரூ. 8 லட்சம்" - வைரலான பள்ளிக் கட்டணம்; நிதி ஆலோசகர் சொல்வது என்ன?

பெங்களூருவில் உள்ள ஒரு பிரபலமான தனியார்ப் பள்ளியின் கல்விக் கட்டணம் (fee structure) அடங்கிய ஸ்க்ரீன்ஷாட் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது. 'எக்ஸ்' தளத்தில் பகிரப்பட்ட பதிவில், வெறும் பள்ளிக்கான ... மேலும் பார்க்க

`We are engaged’ - புகைப்படத்தைப் பகிர்ந்து நிச்சயதார்தத்த்தை அறிவித்த பிக்பாஸ் செலிபிரட்டிஸ்

சின்னத்திரையில் வில்லி கதாப்பாத்திரத்தில் களமிறங்கி பிக்பாஸ் சீசன் 7-ன் டைட்டிலை வென்றவர் அர்ச்சனா ரவிச்சந்திரன். பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகர் அருண் பிரசாந்த் பிக்பாஸ் சீசன்-8 ல் கல... மேலும் பார்க்க

பைக் பெட்டியை திறந்து ரூ.80,000 பணத்தை எடுத்த குரங்கு; மரத்தில் ஏறி செய்த வேலை!

பொதுவாக குரங்குகள் வீட்டில் உள்ள பொருட்கள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகத்திற்கு வந்த ஒருவரிடமிருந்து பணத்தை எடுத்த... மேலும் பார்க்க

Japan: பூஜி எரிமலை வெடித்தால் என்ன நடக்கும்? - அரசாங்கமே வெளியிட்ட AI வீடியோ - குழப்பத்தில் மக்கள்!

ஜப்பான் அரசாங்கம் அங்குள்ள மிக உயரமான மலையான பூஜி, எரிமலை வெடித்தால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதைக் காட்டும் AI-ஆல் உருவாக்கப்பட்ட வீடியோவைப் பகிர்ந்துள்ளது. "எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாமல் இது... மேலும் பார்க்க

``மாதத்தில் 15 நாள் கணவன், 15 நாள் காதலன்'' - பெண் போட்ட நிபந்தனை; பஞ்சாயத்தில் அதிர்ச்சி

உத்தரப்பிரதேசத்தில் ஏற்கெனவே கணவனை தனது காதலனுடன் சேர்ந்து கொலை செய்து, ஊதா நிற டிரம்மில் அடைத்த மனைவியின் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு பிறகு ஆண்கள் உஷாரடைந்துள்ளனர். மனைவி ... மேலும் பார்க்க