செய்திகள் :

Japan: பூஜி எரிமலை வெடித்தால் என்ன நடக்கும்? - அரசாங்கமே வெளியிட்ட AI வீடியோ - குழப்பத்தில் மக்கள்!

post image

ஜப்பான் அரசாங்கம் அங்குள்ள மிக உயரமான மலையான பூஜி, எரிமலை வெடித்தால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதைக் காட்டும் AI-ஆல் உருவாக்கப்பட்ட வீடியோவைப் பகிர்ந்துள்ளது. "எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாமல் இது நடக்கலாம்" என அந்த வீடியோவில் கூறியுள்ளனர்.

டோக்கியோ பெருநகர நிர்வாகம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தை உணர்த்தவும் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

Mount Fuji in Japan
Mount Fuji in Japan

வீடியோவில் கூறப்பட்டுள்ளதன்படி, அதீத மக்கள் நெருக்கடிக் கொண்ட டோக்கியோ நகருக்கு 1-2 மணி நேரத்திலேயே எரிமலை சாம்பல் வந்தடையும்.

நகரின் மேற்கு பக்கத்தில் 30 செ.மீ வரை சாம்பல் சேரும் என்றும் மற்ற பகுதிகளில் 10 செ.மீ சாம்பல் சேரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தண்டவாளங்களிலும், ஓடுபாதைகளிலும் சாம்பல் சேருவதனால் ரயில், விமானப் போக்குவரத்து பாதிக்கப்படும். புகை கண்ணை மறைப்பதாலும் சாலைகள் சேதமடைவதாலும் வாகனங்களை ஓட்டுவது ஆபத்தானதாகும். ஈரமான சாம்பலால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு மின்சாரம் தடைபடும். தொலைபேசி மற்றும் இணையதள சேவைகள் பாதிக்கப்படும்.

எரிமலை வெடிப்பு மக்களுக்கு எரிச்சல் மற்றும் சுவாச பிரச்னைகளை ஏற்படுத்தும். முன்னதாக ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்படுவர்.

எரிமலை வெடிப்பு ஏற்படும்பட்சத்தில் மக்கள் 3 நாட்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிவைக்க அதிகாரிகள் அறிவுறுத்துவர். அதனால் கடைகளில் உணவும் பொருட்களும் முற்றிலுமாக தீரும்.

30 செ.மீட்டருக்கும் அதிகமான சாம்பல் வரும் பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்படுவர். முக்கியமாக மர வீடுகள் உள்ள இடங்களில் மக்கள் வெளியேறும் சூழல் ஏற்படலாம் என வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

அரசாங்கமே வீடியோ வெளியிட்டதால் மக்கள் பூஜி மலை வெடிக்கக் கூடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

ஆனால் இந்த வீடியோ எரிமலை வெடிப்பால் ஏற்படக் கூடிய மிக மோசமான சாத்தியத்தைக் காட்டுவதாகவும், பூஜி மலை இன்னும் சில வருடங்களில் வெடிக்கும் அபாயம் இல்லை எனவும் வல்லுநர்கள் விளக்கமளித்துள்ளனர்.

``மாதத்தில் 15 நாள் கணவன், 15 நாள் காதலன்'' - பெண் போட்ட நிபந்தனை; பஞ்சாயத்தில் அதிர்ச்சி

உத்தரப்பிரதேசத்தில் ஏற்கெனவே கணவனை தனது காதலனுடன் சேர்ந்து கொலை செய்து, ஊதா நிற டிரம்மில் அடைத்த மனைவியின் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு பிறகு ஆண்கள் உஷாரடைந்துள்ளனர். மனைவி ... மேலும் பார்க்க

Diamond Hunting: ஆந்திராவில் `வைர வேட்டை' - மழைக்காலங்களில் கிடைக்கும் வைரம்? -படையெடுக்கும் மக்கள்

ஆந்திராவின் வைரம் விளையும் மண்ணாக ராயலசீமா கருதப்படுகிறது. ராயலசீமா பகுதியில் பெய்து வரும் மழை, கர்னூல், அனந்தபூர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் கிராமவாசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடும் பருவமாக மாறி... மேலும் பார்க்க

`குருவாயூர் கோயில் குளத்தில் கால் கழுவி ரீல்ஸ் எடுத்த பிக்பாஸ் ஜாஸ்மீன் ' - புனிதப்படுத்த சடங்கு

பியூட்டி & லைஃப் ஸ்டைல் வீடியோக்களின் மூலம் புகழ்பெற்றவர் ஜாஸ்மீன் ஜாபர். மலையாள பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்துகொண்டு மூன்றாமிடம் பிடித்து செய்திகளிலும், ஊடகங்களிலும் வைரலானவர். தொடர்ந்து சமூக ஊடகங்கள... மேலும் பார்க்க

மும்பை: விநாயகர் சதுர்த்திக்கு இலவச பஸ், ரயில், உணவு; தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் போட்டி

மும்பை கொங்கன் பகுதிமகாராஷ்டிராவில் வரும் புதன் கிழமை விநாயகர் சதுர்த்தி விழா தொடங்குகிறது. இவ்விழாவிற்காக மும்பையில் இருந்து மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதிக்கு லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊருக்... மேலும் பார்க்க

ஒரு குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த உயிரைப் பணயம் வைத்து சென்ற செவிலியர் - குவியும் பாராட்டுகள்!

ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக காட்டாற்று வெள்ளத்தில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யும் செவிலியரின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. காதைக் கிழிலும் இரைசல... மேலும் பார்க்க

அம்மா உடன் முதல் விமானப் பயணம்: "நீங்கள் இல்லாமல் நான் இல்லை" - நெகிழ்ந்த விமானி!

ஆந்திராவைச் சேர்ந்த விமானி ஒருவர், பயணிகள் முன்னிலையில் பைலட் ஆக வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற ஆதரவு அளித்ததற்காக தனது தாய்க்கு நன்றி தெரிவித்து பெருமைப்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகியிருக்கிறது. ... மேலும் பார்க்க