செய்திகள் :

ஒரு குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த உயிரைப் பணயம் வைத்து சென்ற செவிலியர் - குவியும் பாராட்டுகள்!

post image

ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக காட்டாற்று வெள்ளத்தில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யும் செவிலியரின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

காதைக் கிழிலும் இரைசலோடு பாய்ந்தோடும் ஆற்றுக்கு இடையில் தனது செருப்பை ஒரு கையில் பிடித்துக்கொண்டு பாறை பாறையாக தாவிச் செல்கிறார் கமலா தேவி என்ற அந்த 40 வயது செவிலியர்.

Himachal Pradesh (File Image)
Himachal Pradesh (File Image)

மண்டி மாவட்டத்தில் உள்ள ஸ்வாட் என்ற நீர்நிலையில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்துக்குப் பேட்டியளித்த கமலா தேவி, "நான் அந்த குழந்தையைப் பற்றி கவலைகொண்டேன். வானிலை காரணமாக அம்மாவால் தடுப்பு மருந்து பெற்றுக்கொள்ள வரமுடியவில்லை. அதனால் நான் அங்கு செல்ல வேண்டும் என்று நினைத்தேன்." எனக் கூறியுள்ளார்.

பதார் தாலுகாவின் சுதாரில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் பணிபுரிகிறார் கமலா தேவி. இவருக்கு ஸ்வார் துணை சுகாதார நிலையத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் அந்த பகுதியில் இருந்த குழந்தைக்கு தடுப்பூசி வழங்குவது தனது பொறுப்பாகிவிட்டது எனக் கூறியுள்ளார்.

"குழந்தையின் நோய்தடுப்பு அட்டவணையைத் தவிர வேறெதுவும் என் கவனத்தில் இல்லை. எனக்கு யார் வீடியோ எடுத்தது எனத் தெரியவில்லை. அது வைரலானது முதல் நான் ஃபோன் கால்களுக்கு பதிலளித்துக்கொண்டே இருக்கிறேம். சிலர் வாழ்த்துகிறார்கள், சிலர் பாராட்டுகிறார்கள்" என்றும் பேசியிருக்கிறார்.

தலைமை மருத்துவ அதிகாரி தீபாலி சர்மா, கமலா தேவியின் துணிச்சலைப் பாராட்டினாலும், மறுத்து ஊழியர்கள் இதுபோன்ற ரிஸ்க்குகளை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். "யாரையாவது சென்றடைய முடியாத சூழல் இருந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம். அவர்களை அடைவதற்கான வசதிகளை எற்பாடு செய்ய முடியும்" எனப் பேசியுள்ளார் தீபாலி.

அம்மா உடன் முதல் விமானப் பயணம்: "நீங்கள் இல்லாமல் நான் இல்லை" - நெகிழ்ந்த விமானி!

ஆந்திராவைச் சேர்ந்த விமானி ஒருவர், பயணிகள் முன்னிலையில் பைலட் ஆக வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற ஆதரவு அளித்ததற்காக தனது தாய்க்கு நன்றி தெரிவித்து பெருமைப்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகியிருக்கிறது. ... மேலும் பார்க்க

விநாயகர் விசர்ஜனம்: ``மண்சிலைக்கு திரும்பினாதான் எங்க வாழ்க்கையும், பூமியும் நல்லா இருக்கும்''

மூக்கு செஞ்ச மண்ணு அது மூணாறு, பட்டு கண்ணம் செஞ்ச மண்ணு அது பொன்னூறு, காது செஞ்ச மண்ணு அது மேலூறு…அடடா இப்பெல்லாம் எங்க மண்ணில் சிலை செய்வாங்க?, இந்த காலத்துல போய் மண்ணை மிதிச்சு ரெடி பண்ணி நாள் கணக்க... மேலும் பார்க்க

Viral Video: ''அவரின் புன்னகை ஒரு மந்திரம்'' - Instagram-ல் வைரலாகும் பாட்டி வீடியோ; பின்னணி என்ன?

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு வீடியோ, கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை உருக்கியது. அதைப் பகிர்ந்தவர் கான்டென்ட் கிரியேட்டர் சஞ்சிதா அகர்வால். அந்த வீடியோவில், சஞ்சிதா தனது காரை ஓட்டி கொண்டி... மேலும் பார்க்க

``ஹனுமான் வழிபாடு கிடையாது; ராவணன் எங்கள் முன்னோர்'' - மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தின் கதை

இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு கிராமமும் தனித்துவமான வரலாற்றையும் கலாச்சாரத்தையும் கொண்டிருக்கும். அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிஸ்ரக் என்ற கிராமத்தில் உள்ள மக்கள் ராவணனை தங்கள் முன்னோராக கரு... மேலும் பார்க்க

``சாப்பாட்டில் ஈ, பூச்சி, முடி இருக்கத்தான் செய்யும்'' -ஷாருக்கான் மனைவி நடத்தும் ஹோட்டலில் விளக்கம்

தூரி ரெஸ்டாரண்ட்பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஐ.பி.எல் கிரிக்கெட் அணியை சொந்தமாக நடத்தி வருகிறார். இது தவிர ரெட்சில்லீஸ் என்ற படத்தயாரிப்பு கம்பெனியையும் நடத்தி வருகிறார். ஷாருக்கான் மனைவி கெளரி கான், தூ... மேலும் பார்க்க

Sachin: ``ஊட்டச்சத்தும் இயக்கமும் முக்கியம்'' - உடற்பயிற்சி நிலையம் தொடங்கிய மகளை வாழ்த்திய சச்சின்

பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் புதிதாக உடற்பயிற்சி நிலையம் தொடங்கியுள்ளார். துபாய்யை மையமாகக் கொண்ட பைலேட்ஸ் அகாடமியின் கிளையை மும்பையில் அந்தேரி பகுதியில் தொடங... மேலும் பார்க்க