செய்திகள் :

சூரத்-துபை இண்டிகோ விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்

post image

அகமதாபாத்: சூரத்தில் இருந்து துபை சென்று கொண்டிருந்த விமானம் இயந்திரக்கோளாறு காரணமாக, அகமதாபாத் விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

சூரத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 150-க்கும் மேற்பட்டோருடன் இண்டிகோ விமானம் துபைக்கு வியாழக்கிழமை புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் ஒரு இயந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டறிந்தாா். உடனடியாக இதுகுறித்து விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னா், விமானநிலைய அதிகாரிகள் அனுமதியுடன், விமானம் , அருகிலுள்ள அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இயந்திரக் கோளாறு குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து பயணிகள் பதற்றம் அடைந்தனர், ஆனால் விமான ஊழியர்கள் நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருந்தனர். மேலும் அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக அகமதாபாத்தில் தரையிறக்கப்பட்டனர்.

இதையடுத்து அங்கு காத்திருந்த இண்டிகோ விமானப் பொறியாளா்கள், விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திரக்கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விமானியின் துரித நடவடிக்கையால் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது, அனைத்து பயணிகளும் மாற்று விமானத்தில் துபை புறப்பட்டு சென்றனர்.

2021 ராஜஸ்தான் போலீஸ் எஸ்ஐ தேர்வு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

A major scare was reported mid-air on Thursday when an IndiGo Surat–Dubai flight (6E-1507) carrying over 150 passengers was forced to make an emergency landing at Ahmedabad after its engine developed a technical fault.

அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்க வேண்டும்: கேஜரிவால்

புது தில்லி: அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு இந்தியா அதிக வரிகளை விதிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை வலியுறுத்த... மேலும் பார்க்க

2021 ராஜஸ்தான் போலீஸ் எஸ்ஐ தேர்வு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜோத்பூர்: 2021 ராஜஸ்தான் போலீஸ் எஸ்ஐ தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கூட்டுச் சதி குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, தேர்வை ரத்து செய்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. 2021 ராஜஸ்த... மேலும் பார்க்க

நல்லகண்ணு உடல்நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விசாரிப்பு

உடல்நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகைசால் தமிழர் நல்லகண்ணு உடல்நலன் குறித்து முத்தரசனிடமும், தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் தொடர்ந்து நலன் விசாரித்து வருகிறேன். ... மேலும் பார்க்க

அமெரிக்கா வரி விதிப்பு: மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்-துரை.வைகோ

தஞ்சாவூர்: அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி மக்களை தொகுதி உறுப்பினருமான துரை.வைகோ தெரிவித்துள்ளார். ... மேலும் பார்க்க

பசியின் கோரம்! காஸாவில் குழந்தைகள் அழுவதற்குக்கூட முடிவதில்லை!

காஸாவில் உணவின்றி பசியால் வாடும் குழந்தைகள் பேசுவதற்கு, அழுவதற்குக்கூட வலிமையில்லை என 'சேவ் தி சில்ட்ரன்' என்ற சர்வதேச தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஐ.நா.வில் பேசியுள்ளார். கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல... மேலும் பார்க்க

விஜய் அரசியல் ரீதியாக பேச வேண்டும் : முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கருத்து

சேலம்: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக இருக்கக் கூடிய விஜய் அரசியல் ரீதியாக பேச வேண்டும் என்றும் நான் அதிமுகவுக்குதான் வாக்கு கேட்பேன் என சேலத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். உற... மேலும் பார்க்க