செய்திகள் :

விஜய் அரசியல் ரீதியாக பேச வேண்டும் : முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கருத்து

post image

சேலம்: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக இருக்கக் கூடிய விஜய் அரசியல் ரீதியாக பேச வேண்டும் என்றும் நான் அதிமுகவுக்குதான் வாக்கு கேட்பேன் என சேலத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

உறவினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சேலம் வந்திருந்த ஓபிஎஸ் செய்தியாளர்களுடன் பேசினார்.

அப்போது, அரசியலில் தனித்து விடப்பட்டுள்ளீர்களா என்ற கேள்விக்கு, தேவையான நேரத்தில் என்னுடைய கருத்தை தெரிவிப்பேன். என்னைப் பொறுத்தவரை பிரிந்துள்ள அதிமுகவினர் அனைவரும் ஒன்று சேர வேண்டும். அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தமிழகத்தில் வெற்றி பெறுகின்ற சூழ்நிலை உருவாகும். இதுதான் என்னுடைய நிலைப்பாடு, இதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா உருவாக்கிய இயக்கம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம் அதிமுகவை தொண்டர் இயக்கமாகத்தான் எம்ஜிஆர் உருவாக்கினார். மக்கள் இயக்கமாக அதிமுக என்றைக்கும் செயல்படும்.

இந்த இயக்கத்தை யாராவது பிளவு படுத்த நினைத்தால் அது யாராலும் முடியாது. அதிமுக இயக்கத்துக்கு எந்த பின்னடைவும் ஏற்படாது என்றார்.

மேலும், சட்டப்பேரவைத் தேர்தலில் யார் முதல்வராக வேண்டும் என்பது மக்கள் கையில்தான் உள்ளது. மக்கள் தீர்ப்பு தான் மகேசன் தீர்ப்பு.

கூட்டணி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, தேர்தலின் போதுதான் முடிவு தெரியும். அதற்கு இன்னும் ஒன்பது மாதங்கள் உள்ளன. புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா இருவரும் 50 ஆண்டுகாலமாக அதிமுகவை மக்கள் இயக்கமாக வழி நடத்தினார். அது சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் இயங்க வேண்டும்.

அதிமுகவில் தற்போது எம்ஜிஆர், ஜெயலலிதா வகுத்துக் கொடுத்த சட்ட விதிகள் கேள்விக்குறியாக உள்ளது. அதற்காகத்தான் நீதிமன்றத்தில் போராடி வருகிறோம்.

நான் கட்சியில் அம்மாவின் நம்பிக்கையாக இருந்தேன். 13 ஆண்டுகள் பொருளாளராக பதவி வகித்தேன். இன்றுவரை நான் அதிமுகவில் தொண்டராக தான் இருக்கிறேன் தலைவராக இல்லை என்றார்.

மேலும், திமுகவின் நான்கரை ஆண்டு ஆட்சி செயல்பாடுகள் குறித்து நான் நாள்தோறும் அறிக்கையாக வெளியிட்டு வருகிறேன். திமுகவின் குறைகள் குறித்தும் தெரிவித்து வருகிறேன்.

தமிழகத்தில் திமுக, தவெகவுக்கு இடையேதான் போட்டி என கூறப்படுவது குறித்த கேள்விக்கு, ஒவ்வொருவரும் கட்சியிலும் உள்ளவர்கள் நாங்கள் முதல்வராக வருவோம் என்று தான் ஆசைப்படுவார்கள். கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் அரசியல் நாகரிகம் கருதி பேச வேண்டும். பெருந்தன்மையோடு பேச வேண்டும். தவெக தலைவர் விஜய் கருத்துக்கள் அரசியல் ரீதியாக இல்லை. அவர் பேசியதில் சில பேச்சுக்கள் ஏற்புடையதாக இல்லை என்றார்.

தவெக மாநாட்டில் சிறப்பான ஏற்பாடுகள்; ஜன. 9 வரை காத்திருங்கள்: பிரேமலதா

Vijay, who could be the leader of Tamil Nadu Victory Party, should speak politically.

உத்தரகண்ட்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை அறிவிப்பு

டேராடூன் (உத்தரகண்ட்): உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டம், தாராலி நகரத்தில் திடீரென பெய்த கனமழை வெள்ளத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என உத்தரகண்ட் முதல்வ... மேலும் பார்க்க

பஞ்சாப் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 22 சிஆர்பிஎப் வீரர்களை மீட்டது இந்திய ராணுவம்!

மாதோபூர் (பஞ்சாப்): பஞ்சாபின் பதான்கோட் மாவட்டத்தில் உள்ள மாதோபூர் தலைமையகம் அருகே மழைவெள்ளத்தில் சிக்கித் தவித்த 22 சிஆர்பிஎப் வீரர்கள், பொதுமக்கள் 3 பேரை புதன்கிழமை காலை 6 மணிக்கு இந்திய ராணுவ விமா... மேலும் பார்க்க

15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர்!

காஞ்சிபுரம்: விநாயகர் சதுர்த்தி திருநாளையொட்டி, காஞ்சிபுரம் காமட்சி அம்மன் கோயில் சந்நிதி தெருவில் அமைந்துள்ள ஏலேல சிங்க விநாயகர் புதன்கிழமை ரூ.15 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: விநாயகர் கோயில்களில் திரளமான பக்தர்கள் தரிசனம்

சென்னை: விநாயகர் சதுர்த்தியாயொட்டி, தமிழகம் முழுவதும் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் கோயில்களில் புதன்கிழமை காலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றன. தமிழகம்... மேலும் பார்க்க

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக... மேலும் பார்க்க

நெல்லை கவின் ஆணவக் கொலை: மேலும் 15 நாள்கள் காவல் நீட்டிப்பு!

நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித் உள்பட மூவருக்கு மேலும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டத்தையே உலுக்கிய ஐ.டி. ஊழியர் கவின் ஆணவப் படுகொலை வழக்கில் கைதான சுர்ஜித்,... மேலும் பார்க்க