செய்திகள் :

15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர்!

post image

காஞ்சிபுரம்: விநாயகர் சதுர்த்தி திருநாளையொட்டி, காஞ்சிபுரம் காமட்சி அம்மன் கோயில் சந்நிதி தெருவில் அமைந்துள்ள ஏலேல சிங்க விநாயகர் புதன்கிழமை ரூ.15 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஆண்டுதோறும் வரும் விநாயகா் சதுா்த்தி நாளன்று காஞ்சிபுரம் ஏலேல சிங்க விநாயகா் கோயிலில் உள்ள மூலவருக்கு ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்படுவது வழக்கம். நிகழாண்டு விநாயகா் சதுா்த்தியையொட்டி ஆலயத்தில் கணபதி ஹோமமும், அதனையடுத்து சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றன. பின்னர் ரூ.15 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

ஏற்பாடுளை ஆலய நிர்வாகக்குழுவின் தலைவர் சி.குப்புச்சாமி, செயலாளர் டி.ஜெகன்னாதன், பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.

இது குறித்து ஆலய நிர்வாகக்குழுவின் தலைவர் குப்புச்சாமி கூறுகையில், ஆண்டு தோறும் பக்தர்களிடம் மடிப்பு கலையாத புது ரூபாய் நோட்டுகளான 5,10, 20, 50,100, 500 ஆகியவற்றை லட்சக் கணக்கில் பெற்று அதனை விநாயகருக்கு அலங்கரித்து தீபாராதனைகள் நடத்துவோம். யார், யாரிடம் எவ்வளவு பெறப்பட்டது என்பதை கணக்கு வைத்துக் கொண்டு அத்தொகையை விநாயகர் சதுர்த்தி விழா முடிந்தவுடன் அவர்களிடமே திருப்பிக் கொடுத்து விடுகிறோம். இந்த ஆண்டு அலங்காரத்துக்காக பக்தர்கள் வழங்கிய மொத்தம் ரூ.15 லட்சம் மதிப்பில் விநாயகர் அலங்கரிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

விநாயகா் சதுா்த்தி: விநாயகர் கோயில்களில் திரளமான பக்தர்கள் தரிசனம்

Elela Sinha Vinayagar was adorned with Rs. 15 lakh worth of rupee notes and bestowed blessings on devotees on Wednesday.

விநாயகா் சதுா்த்தி: விநாயகர் கோயில்களில் திரளமான பக்தர்கள் தரிசனம்

சென்னை: விநாயகர் சதுர்த்தியாயொட்டி, தமிழகம் முழுவதும் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் கோயில்களில் புதன்கிழமை காலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றன. தமிழகம்... மேலும் பார்க்க

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக... மேலும் பார்க்க

நெல்லை கவின் ஆணவக் கொலை: மேலும் 15 நாள்கள் காவல் நீட்டிப்பு!

நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித் உள்பட மூவருக்கு மேலும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டத்தையே உலுக்கிய ஐ.டி. ஊழியர் கவின் ஆணவப் படுகொலை வழக்கில் கைதான சுர்ஜித்,... மேலும் பார்க்க

புதுச்சேரி உள்பட 5 இடங்களில் அபுல் கலாம் ஆசாத் ஆசியன் ஆராய்ச்சி மையம்!

நாட்டில் புதுச்சேரி உள்ளிட்ட 5 இடங்களில் மெளலானா அபுல் கலாம் ஆசாத் ஆசியன் ஆராய்ச்சி மையம் அமைய உள்ளது.இப்போது மத்திய அரசின் கலாசாரத் துறையின் கீழ் இந்த மையம் மேற்கு வங்கத்தில் செயல்பட்டு வருகிறது. இதே... மேலும் பார்க்க

நல்லகண்ணு உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா். நல்லகண்ணு உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என சென்னை நந்தனம் வெங்கடேஸ்வரா மருத்துவமன... மேலும் பார்க்க

சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்

சென்னை: இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கக் கூடிய வலிமை உள்ள சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும் என விசிக தலைவர் தொல்.திருமாவளன் தெரிவித்தார். குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் இந்தியா கூட்டண... மேலும் பார்க்க