செய்திகள் :

விநாயகா் சதுா்த்தி: விநாயகர் கோயில்களில் திரளமான பக்தர்கள் தரிசனம்

post image

சென்னை: விநாயகர் சதுர்த்தியாயொட்டி, தமிழகம் முழுவதும் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் கோயில்களில் புதன்கிழமை காலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றன.

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்ச்சி விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

விநாயகா் சதுா்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் விநாயகர் கோயில்களில் அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமமும், சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.

கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் காலை முதல் உற்சாகத்துடன் வந்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

வீடுகளிலும் நகரின் பல்வேறு முக்கிய பகுதிகளிலும் களிமண் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு அவற்றை அலங்கரித்து வைத்து பூஜைகள் செய்தும், விநாயருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, சுண்டல், இனிப்பு வகைகளை படைத்து அளவில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ கற்பக விநாயகர் கோயில் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள விநாயகர் கோயில்கள் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்று வருகின்றன.

தடைகளை நீக்குபவர் மற்றும் அறிவை வழங்குபவர் என்று நம்பப்படும் விநாயகருக்கு வெல்லம் மற்றும் தேங்காயால் செய்யப்பட்ட 'கொழுக்கட்டை', சுண்டல் மற்றும் இனிப்புப் பண்டத்தை பக்தர்கள் காணிக்கையாக படைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

திருச்சியில் மலையின் உச்சியில் அமைந்துள்ள புகழ்பெற்ற உச்சிப்பிள்ளையார் கோயிலில் புதன்கிழமை காலை 9 மணி முதல் 10. 30 மணிக்குள் உச்சிப்பிள்ளையாா் மூலவா், மாணிக்க விநாயகா் மூலவா் சந்நிதிகளில், முறையே 75 கிலோ வீதம் மொத்தம் 150 கிலோ எடையில் பிரம்மாண்ட கொழுக்கட்டை படைக்கப்பட்டது. அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நகரின் பல பகுதிகளில், குடியிருப்போர் சங்கங்கள் மற்றும் இந்து அமைப்புகளால் பிரமாண்டமான அளவிலான மற்றும் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் அமைதியான முறையில் வழிபாடு செய்யும் வகையில் காவல்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Temples of Lord Ganesha located in various parts of the State, including the famous Sri Karpaga Vinayaka Temple in Pillayarpatti, Sivaganga district, wore a festive look marking the occasion.

15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர்!

காஞ்சிபுரம்: விநாயகர் சதுர்த்தி திருநாளையொட்டி, காஞ்சிபுரம் காமட்சி அம்மன் கோயில் சந்நிதி தெருவில் அமைந்துள்ள ஏலேல சிங்க விநாயகர் புதன்கிழமை ரூ.15 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட... மேலும் பார்க்க

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக... மேலும் பார்க்க

நெல்லை கவின் ஆணவக் கொலை: மேலும் 15 நாள்கள் காவல் நீட்டிப்பு!

நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித் உள்பட மூவருக்கு மேலும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டத்தையே உலுக்கிய ஐ.டி. ஊழியர் கவின் ஆணவப் படுகொலை வழக்கில் கைதான சுர்ஜித்,... மேலும் பார்க்க

புதுச்சேரி உள்பட 5 இடங்களில் அபுல் கலாம் ஆசாத் ஆசியன் ஆராய்ச்சி மையம்!

நாட்டில் புதுச்சேரி உள்ளிட்ட 5 இடங்களில் மெளலானா அபுல் கலாம் ஆசாத் ஆசியன் ஆராய்ச்சி மையம் அமைய உள்ளது.இப்போது மத்திய அரசின் கலாசாரத் துறையின் கீழ் இந்த மையம் மேற்கு வங்கத்தில் செயல்பட்டு வருகிறது. இதே... மேலும் பார்க்க

நல்லகண்ணு உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா். நல்லகண்ணு உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என சென்னை நந்தனம் வெங்கடேஸ்வரா மருத்துவமன... மேலும் பார்க்க

சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்

சென்னை: இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கக் கூடிய வலிமை உள்ள சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும் என விசிக தலைவர் தொல்.திருமாவளன் தெரிவித்தார். குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் இந்தியா கூட்டண... மேலும் பார்க்க