செய்திகள் :

"அடுத்தநாள் கூப்பிடுங்கள் என்றேன்; 5 மணிநேரத்தில்..." - மோடியுடன் பேசியதைப் பகிர்ந்த ட்ரம்ப்

post image

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் முடிவுக்கு வந்தபோது அதனை முதலில் அறிவித்தவர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அதைத்தொடர்ந்து, "இந்தியா பாகிஸ்தான் மோதலை வர்த்தகத்தை முன்வைத்து முடித்துவைத்தது நான்தான்" என ட்ரம்ப் தொடர்ச்சியாகக் கூறிவருகிறார்.

இந்த நிலையில், மோதல் எப்படி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது, மோடியிடம் என்ன கூறப்பட்டது என்பது குறித்து ட்ரம்ப் முதல்முறையாக வெளிப்டையாகப் பேசியிருக்கிறார்.

இந்தியா, பாகிஸ்தான்
இந்தியா, பாகிஸ்தான்

செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "இந்திய பிரதமர் மோடியிடம் பேசினேன், `உங்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே என்ன நடக்கிறது என்று கேட்டேன்'.

அது மிகப்பெரிய வெறுப்பு. நீண்ட காலமாக இது நடந்து வருகிறது. 100 ஆண்டுகளாக வெவ்வேறு பெயர்களில்...

பிறகு நான் கூறினேன், `உங்களுடன் நான் வர்த்தகம் செய்ய விரும்பவில்லை. இந்த மோதலை நீங்கள் அணு ஆயுதப் போரில் முடிப்பீர்கள். நாளைக்கு எனக்கு போன் செய்யுங்கள்.

நாங்கள் உங்களுடன் எந்த ஒப்பந்தங்களையும் செய்யப் போவதில்லை அல்லது உங்கள் மீது அதிக வரி விதிப்போம். உங்கள் தலையே சுற்றப் போகிறது' என்றேன்.

அடுத்த 5 மணிநேரங்களில் அது முடிவுக்கு வந்தது. ஒருவேளை அது மீண்டும் தொடங்கலாம். எனக்குத் தெரியவில்லை, அது முடிந்தால்தான் நான் இதை நிறுத்துவேன். இவை நடக்க அனுமதிக்க முடியாது" என்று கூறினார்.

PM MODI-யின் கல்வி தகுதியை இனி யாரும் கேட்கக்கூடாதா? Imperfect Show | 26.08.2025 Stalin

மும்பை: விநாயகர் சதுர்த்திக்கு இலவச பஸ், ரயில், உணவு; தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் போட்டி. * தமிழகத்தில் 35,000 விநாயர்கள் சிலைகள் நாளை அமைப்பு? * பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் பேச்சுக்கு தமிழி... மேலும் பார்க்க

மாதச் சம்பளத்திலிருந்து பாதுகாப்பு வரை... குடியரசு துணைத் தலைவருக்கான சிறப்பு சலுகைகள் என்னென்ன?!

இந்திய அரசியலமைப்பின் படி, குடியரசுத் தலைவருக்கு அடுத்தபடியாக உயர்ந்த பதவி வகிப்பவர் துணை குடியரசுத் தலைவர் ஆவார். அதே சமயம் ராஜ்ய சபாவின் தலைவராகவும் துணை குடியரசு தலைவர் பதவில் இருப்பவர்கள் செயல்படு... மேலும் பார்க்க

25% + 25%... இந்தியா மீதான ட்ரம்பின் வரி இன்று முதல் அமல்; பாதிப்புகள் என்னென்ன?

ரஷ்யாவுடனான கச்சா எண்ணெய் வர்த்தக விவகாரத்தில் இந்தியா ஈடுபடக் கூடாது என்று கூறிவரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கடந்த ஜூலையில் இந்திய பொருள்கள் மீது 25 சதவிகித வரி விதித்தார்.அதைத்தொடர்ந்து, இந்தியா மீ... மேலும் பார்க்க

``காலை உணவில் புழு, பல்லி கிடக்கிறதே, இதுதான் திராவிட மாடலின் சாதனையா?'' - நயினார் நாகேந்திரன்

நகர்புற அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு காலை உணவு திட்ட விரிவாக்கத்தை இன்று (ஆகஸ்ட் 26) முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை விமர்சித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில... மேலும் பார்க்க

காஸா மருத்துவமனை மீது தாக்குதல்; 5 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் பலி - நெதன்யாகு சொல்வதென்ன?

இஸ்ரேல் - காஸா போர் இஸ்ரேல் - காஸாவுக்கு இடையே தொடர்ந்துவரும் போரில் நாளுக்கு நாள் நிலமை கொடூரமாகிக்கொண்டே இருக்கிறது. தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸின் முக்கிய சுகாதார மையமான நாசர் மருத்துவமனை மீது ... மேலும் பார்க்க