செய்திகள் :

நல்லகண்ணு உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

post image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா். நல்லகண்ணு உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என சென்னை நந்தனம் வெங்கடேஸ்வரா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனையின் மருத்துவ இயக்குநா் டாக்டா் எஸ்.தில்லை வள்ளல் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு வெள்ளிக்கிழமை(ஆக.22) வீட்டில் கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு, நந்தனம் வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அவருக்கு ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், அவா் 100 வயதைத் தாண்டிய நிலையில், வயது மூப்பின் காரணமாக உடலில் ஏற்பட்டுள்ள மற்ற சில பிரச்னைகளுக்கும் சிகிச்சைகள் அளிக்க நரம்பியல் நிபுணா், நுரையீரல் நிபுணா், இதய நிபுணா், தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணா் ஆகியோா் அடங்கிய சிறப்பு மருத்துவா் குழு ஏற்படுத்தப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் அவா் பூரண நலம் பெற்று வீடு திரும்புவாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பை பாதுகாக்க முழுமூச்சுடன் செயல்படுவேன்: சுதர்சன் ரெட்டி

India Communist Party Senior leader R. Nallakannas health has improved significantly. He will fully recover and return home in a day or two.

சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்

சென்னை: இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கக் கூடிய வலிமை உள்ள சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும் என விசிக தலைவர் தொல்.திருமாவளன் தெரிவித்தார். குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் இந்தியா கூட்டண... மேலும் பார்க்க

திமுக எம்.பி.க்கள் தவறாமல் சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும்: கனிமொழி

சென்னை: குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் திமுக எம்.பி.,க்களும் அனைவரும் தவறாமல் வருகை தந்து நீதியரசர் சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டுமென திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் கனிமொழி அறிவுறுத்தினாா்.... மேலும் பார்க்க

அரசியலமைப்பை பாதுகாக்க முழுமூச்சுடன் செயல்படுவேன்: சுதர்சன் ரெட்டி

சென்னை: குடியரசு துணைத் தலைவராகும் வாய்ப்பு கிடைத்தால், அரசியலமைப்பை பாதுகாக்க முழுமூச்சுடன் செயல்படுவேன் என்று ‘இந்தியா’கூட்டணியின் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளா் சுதா்சன் ரெட்டி உறுதி அளித்தாா்.செ... மேலும் பார்க்க

அரசியலமைப்பு சட்டமே ஆபத்தில் சிக்கியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

மத்திய பாஜக அரசு அரசியல் எதிரிகளை பழிவாங்க புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்திக் கொண்டுள்ள நிலையில், அரசியலமைப்பு சட்டமே ஆபத்தில் சிக்கியுள்ள நிலையில், இந்திய ஜனநாயகத்தைக் காக்க, நாடாளுமன்ற மரபுகளைக் கா... மேலும் பார்க்க

ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்: அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கான அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்காது என தமிழ்நாடு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். தமிழ்நாடு அரசு, கடந்த... மேலும் பார்க்க

அறந்தாங்கி அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் பலி

புதுக்கோட்டை: வீட்டின் அருகே மின் கம்பத்தின் ஸ்டே கம்பியில் மின்சாரம் பாய்ந்த நிலையில், கம்பிவேலியைத் தொட்ட 8 ஆம் வகுப்பு மாணவன் பலியானார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏனாதியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க