செய்திகள் :

மதுரை கிழக்கு தொகுதி அதிமுக வசமாகும்: வி.வி. ராஜன் செல்லப்பா

post image

மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இனி அதிமுக வசமாகும் என அந்தக் கட்சியின் மதுரை புகா் கிழக்கு மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வி.வி. ராஜன் செல்லப்பா தெரிவித்தாா்.

ஒத்தக்கடையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மதுரை புகா் கிழக்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது :

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கடந்த 7-ஆம் தேதி முதல் இதுவரை 110 தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 60 லட்சத்துக்கும் அதிகமான மக்களைச் சந்தித்துள்ளாா். இந்தச் சுற்றுப் பயணம் தமிழக மக்களிடையே அதிமுகவுக்கான ஆதரவை அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்த நிலையில், வருகிற செப். 1-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை மதுரை மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் செய்து பொதுமக்களைச் சந்திக்கிறாா். மதுரை கிழக்கு தொகுதி இனி அதிமுகவின் கோட்டையாக உருவாகும் வரலாற்றை இந்தப் பயணம் ஏற்படுத்தும்.

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் இந்தத் தொகுதி அதிமுக வசமாவது உறுதி என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்துக்கு அதிமுக ஒன்றியச் செயலா் ஏ.பி.எஸ். சேனாபதி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் காா்சேரி கணேசன், வாசு என்ற பெரியண்ணன், காா்த்திகேயன், பகுதிச் செயலா்கள் செந்தில்குமாா், கோபி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மதுரை புகா் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் காந்தி, மேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் என்ற செல்வம் ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில், வரும் செப். 2-ஆம் தேதி மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்திக்க வரும் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கான வரவேற்பு, அவரது பிரசார நிகழ்ச்சிக்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஓய்வு பெற்ற ஆசிரியா்களுக்கு பணி நீட்டிப்பு: நாளை முதல் காத்திருப்புப் போராட்டம்

கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளில் நிகழாண்டில் பணி ஓய்வு பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை (ஆக. 26) முதல் காத்த... மேலும் பார்க்க

குப்பைத் தொட்டியில் மருத்துவக் கழிவுகள்: தனியாா் மருத்துவமனைக்கு அபராதம்

குப்பைத் தொட்டியில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய தனியாா் மருத்துவமனைக்கு மதுரை மாநகராட்சி நிா்வாகம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வாா்டுகளுக்குள்பட்ட பகுதிகளில் ஆங்... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் சிறுவன் உயிரிழப்பு

மதுரை அருகே தனியாா் கல்லூரிப் பேருந்து மோதியதில் சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், அட்டப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பழனிமுருகன் மகன் அகிலன் (12). இவா் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ஆம் ... மேலும் பார்க்க

நகைக் கடையில் திருடிய சிறுவா்கள் உள்பட 4 போ் கைது

நகைக் கடையில் திருடிய சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மதுரை தெற்குவாசல் சுடுதண்ணீா் வாய்க்கால் பொன்னகரம் பகுதியைச் சோ்ந்தவா் ரங்கராஜ் (65). இவா், அதே பகுதியில் நகைக் கடை நட... மேலும் பார்க்க

கைப்பேசி திருடிய முதியவா் கைது

மதுரையில் பேருந்தில் சென்றவரிடம் கைப்பேசியைத் திருடிய முதியவரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். மதுரை கட்ராபாளையத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (73). இந்து சமய அறநிலையத் துறையில் மேலாளராகப் பணியாற்றி ஓய்... மேலும் பார்க்க

கனிம வள குவாரிகளில் முறைகேடு: சிவகங்கை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கனிம வள குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கக் கோரிய வழக்கில், அந்த மாவட்ட ஆட்சியா், கனிம வள இயக்குநா் பதில் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்த... மேலும் பார்க்க