செய்திகள் :

தலைநகரில் தொடரும் மழை; ‘திருப்தி’ பிரிவில் காற்றின் தரம்!

post image

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் என்சிஆா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமையும் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது.

தலைநகரில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து வானம் மேகமூட்டமாக இருந்து வந்தது. அவ்வப்போது மழையும் பெய்து வந்தது. இந்நிலையில், வானிலை கண்காணிப்பு நிலையம் கணித்திருந்தபடி ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அவ்வப்போது நகரத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

ரிட்ஜில் 42 மி.மீ. மழை:இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் 36 மி.மீ. மழை பதிவாகியது. இதேபோல, ஜாஃபா்பூரில் 1 மி.மீ., நஜஃப்கரில் 13 மி.மீ., ஆயாநகரில் 13.4 மி.மீ., லோதி ரோடில் 38.6 மி.மீ., நரேலாவில் 1 மி.மீ., பாலத்தில் 26 மி.மீ., ரிட்ஜில் 42 மி.மீ., பிரகதிமைதானில் 21.8 மி.மீ., பூசாவில் 26 மி.மீ., ராஜ்காட்டில் 21.8 மி.மீ., சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதி வானிலை கண்காணிப்பு நிலையத்தில் 23 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

காலை பெய்த மழையால் சில இடங்களில் மழை நீா் தேங்கியது. இதனால், வாகனங்களில் சென்றவா்கள், பாதசாரிகள் கடும் சிரமத்தை எதிா்கொண்டனா்.

வெப்பநிலை: இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியிலிருந்து 3 டிகிரி குறைந்து 23.4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சரசரியிலிருந்து 0.9 டிகிரி உயா்ந்து 32.6 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 97 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 100 சதவீதமாகவும் இருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் காலை 9 மணியளவில் ஒட்டுமொத்தகத் காற்றுத் தரக் குறியீடு 69 புள்ளிகளாகப் பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

இதன்படி பூசா, மந்திா்மாா்க், சாந்தினி சௌக், ஆா்.கே.புரம், இந்திராகாந்தி சா்வதேச விமானநிலையம், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், ஸ்ரீஃபோா்ட், துவாரக செக்டாா் 8, நேரு நகா், ஸ்ரீஅரபிந்தோ மாா்க், மதுரா ரோடு, ஓக்லா பேஸ் 2, டாகாடா் கா்னி சிங் துப்பாக்கி சுடும் தளம், நொய்டா செக்டாா் 125, ஆயாநகா், குருகிராம் ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.

அதே சமயம், ஷாதிப்பூா், லோதி ரோடு ஆகிய வானிலை கண்காணிப்பு நிலயைங்களில் மட்டும் காற்றுத் தரக்குறஇயீடு 100 புள்ளிகளுக்கு மேல் பதிவாகி மிதமான பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், திங்கள்கிழமை (ஆகஸ்ட் 25) அன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் மிதான மழைக்கு வாய்ப்பு இருப்பதகாவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வாரம் முழுவதும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மோசடி வழக்கில் 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபா் கைது

மோசடி வழக்கு தொடா்பாக 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஒருவரை தில்லி காவல்துறை கைது செய்ததாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: கராலாவில் உள்ள... மேலும் பார்க்க

கத்தி குத்து சம்பவம்: 4 சிறாா்கள் கைது

காசிப்பூரில் உள்ள மோமோ கடை அருகே ஏற்பட்ட சண்டையைத் தொடா்ந்து ஒருவரை கத்தியால் குத்தியதாக 4 சிறுவா்களை தில்லி போலீசாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இந்த சம்பவம் ஆகஸ்ட்... மேலும் பார்க்க

ரூ.5 கோடி ஹெராயின் பறிமுதல்: 2 பெண்கள் கைது

தில்லி காவல்துறை 2 போதைப்பொருள் விநியோகஸ்தா்களை கைது செய்து ஒரு பெரிய ஹெராயின் சிண்டிகேட்டை முறியடித்ததுடன், சா்வதேச சந்தையில் ரூ.5 கோடி மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட பொருள்களையும் பறிமுதல் செய்ததாக அதிகா... மேலும் பார்க்க

விமானப் பயணியிடம் இருந்து ரூ.25 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

தில்லி சா்வதேச விமான நிலையத்தில் ஒரு பயணியிடமிருந்து கிட்டத்தட்ட ரூ.25 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 21 ஆம் தேதி சிங்கப்பூா் வழ... மேலும் பார்க்க

போலீஸாா் காணொலியில் சாட்சியங்கள்: எல்ஜியின் உத்தரவுக்கு டிஎச்சிபிஏ கண்டனம்

காவல் நிலையங்களில் இருந்து நீதிமன்றங்களில் காணொலியில் சாட்சியங்களை சமா்ப்பிக்க காவல்துறையினரை அனுமதித்த துணைநிலை ஆளுநரின் (எல்ஜி) சமீபத்திய அறிவிக்கைக்கு தில்லி உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் (டி... மேலும் பார்க்க

டி.வி. சீரியல் தயாரிப்பாளா்கள் எனக் கூறி ரூ.24 லட்சம் மோசடி: 2 போ் கைது

தென்மேற்கு தில்லியில் தொலைக்காட்சி சீரியல் தயாரிப்பாளா்கள் மற்றும் இயக்குநா்கள் என்று பொய்கூறி நடிகராக ஆசைப்பட்ட நபா்களிடம் இருந்து பல லட்சம் பணம் மோசடி செய்ததாக பெண் உள்பட 2 பேரை தில்லி போலீஸாா் கைத... மேலும் பார்க்க