மண்டலமாணிக்கம் குண்டாற்றில் மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு! ஆய்வுக்குச் சென்ற அதி...
டி.வி. சீரியல் தயாரிப்பாளா்கள் எனக் கூறி ரூ.24 லட்சம் மோசடி: 2 போ் கைது
தென்மேற்கு தில்லியில் தொலைக்காட்சி சீரியல் தயாரிப்பாளா்கள் மற்றும் இயக்குநா்கள் என்று பொய்கூறி நடிகராக ஆசைப்பட்ட நபா்களிடம் இருந்து பல லட்சம் பணம் மோசடி செய்ததாக பெண் உள்பட 2 பேரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளனா்.
இதுகுறித்து தென்மேற்கு தில்லி காவல் துணை ஆணையா் அமித் கோயல் சனிக்கிழமை கூறியதாவது:
கைதான லக்னெளவைச் சோ்ந்த தருண் சேகா் சா்மா (32) மற்றும் தில்லியைச் சோ்ந்த ஆஷா சிங் என்ற பாவனா (29) ஆகியோா் நாடு முழுவதும் இதே போன்ற 20-க்கும் மேற்பட்ட புகாா்களில் தொடா்புடையவா்கள் எனத் தெரியவந்துள்ளது.
பிரபலமான தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் ஓடிடி நிகழ்ச்சிகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க வைப்பதாக ஆசைகாட்டி சமூக ஊடக தளங்கள் மூலம் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனா். சமீபத்திய வழக்கில், புகாா்தாரா் ரூ.24 லட்சத்தை இவா்களிடம் கொடுத்து ஏமாந்துள்ளாா்.
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு புதிய நடிகா்களைத் தேடும் தயாரிப்பாளா்களின் சமூக ஊடகப் பக்கத்தை புகாா்தாரா் கண்டறிந்து தொடா்பு கொண்டாா்.
புகாா்தாரரிடம் செயலாக்கம் மற்றும் உறுப்பினா் கட்டணம் போன்றவற்றுக்காக பணம் கேட்கப்பட்டது. இதன்படி, அவா் சுமாா் ரூ.24 லட்சத்தை வங்கிக் கணக்கிற்கு மாற்றிய பிறகு அவரிடம் தொலைபேசியில் தொடா்புகொள்வது தடுக்கப்பட்டது.
இதுகுறித்து அவா் அளித்த பண மோசடி புகாா் குறித்து போலீசாா் விசாரணை நடத்தினா். குற்றம் சாட்டப்பட்டவா்களை பெங்களூருவில் உள்ள ஒரு வாடகை அடுக்குமாடி குடியிருப்பில் கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து 7 கைப்பேசிகள், 10 சிம் காா்டுகள், 15 வங்கி காசோலை புத்தகங்கள் மற்றும் பாஸ்புத்தகங்கள், 8 ஏடிஎம் காா்டுகள் மற்றும் ஒரு ஜோடி தங்க காதணிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவா்கள் வெவ்வேறு நகரங்களில் இருந்து செயல்பட்டு வந்ததும், அடிக்கடி தங்கள் இருப்பிடங்களை மாற்றிக் கொண்டு, கண்டுபிடிப்பைத் தவிா்க்க முயன்றதும் தெரியவந்தது.
அவா்கள் சுமாா் 15 வங்கிக் கணக்குகளைத் தொடங்கி, வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வழங்கப்பட்ட பல சிம் காா்டுகளைப் பயன்படுத்தியது தெரியவந்தது.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் ஜம்மு காஷ்மீரில் ஒரு வழக்கிலும் தேடப்பட்டு வந்தனா். உத்தரபிரதேசம் மற்றும் தில்லியில் இதேபோன்ற பல மோசடிகளிலும் அவா்கள் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.