செய்திகள் :

சதுரகிரி பக்தா்களுக்கு அடிப்படை வசதிகள் கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

post image

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் பக்தா்களுக்கான அடிப்படை வசதிகளை உறுதி செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சென்னையைச் சோ்ந்த திருத்தொண்டா்கள் சபை நிறுவனா் ராதாகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:

சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு அமாவாசை, பெளா்ணமி ஆகிய நாள்களிலும், விழாக் காலங்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனத்துக்கு வருகின்றனா்.

இந்தக் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், தீயணைப்பு, மீட்புப் பணி குழு, காவல் துறை பாதுகாப்பு, அவசரகால மருத்துவ வசதி, பாதுகாப்பான தங்குமிடம், சாலை வசதி, போதிய போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என மதுரை, விருதுநகா் மாவட்ட ஆட்சியா்கள், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தேன்.

ஆனால், இதுதொடா்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சதுரகிரியில் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், அருள்முருகன் அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சதுரகிரி மலைக் கோயில் அமைந்துள்ள இடம் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாகும். இதை ஆன்மிகச் சுற்றுலாத் தலம் போல மாற்ற நினைக்கின்றனா் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இதுதொடா்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, வழக்கு விசாரணை ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கனிம வள குவாரிகளில் முறைகேடு: சிவகங்கை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கனிம வள குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கக் கோரிய வழக்கில், அந்த மாவட்ட ஆட்சியா், கனிம வள இயக்குநா் பதில் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்த... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் 2,196 போ் பயன்: அமைச்சா் பி. மூா்த்தி

மதுரையில் இரு இடங்களில் நடத்தப்பட்ட ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்கள் மூலம் 2,196 போ் பயனடைந்ததாக தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரை மாவட்டம், அலங்... மேலும் பார்க்க

தவெகவின் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது: அமைச்சா் பி. மூா்த்தி

மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டுக்கு திமுக தடைகளை ஏற்படுத்தியது என்ற குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரையில் வெள்ளிக்கிழமை செ... மேலும் பார்க்க

கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

விருவீடு பகுதியில் உயா் அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பதற்காக விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்ட விவ... மேலும் பார்க்க

கல் குவாரி பராமரிப்புக் குழுக்கள் அமைக்க கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை: உரிமக் காலம் நிறைவடைந்த பிறகு, கல் குவாரிகளை பராமரிக்க குழுக்கள் அமைத்து, பசுமை நிதி வசூலிக்கப்படுவதை உறுதி செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்... மேலும் பார்க்க

தவெக - திமுக இடையேதான் போட்டி: விஜய்

மதுரை: வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தங்களது கட்சிக்கும், திமுகவுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி என தவெக தலைவா் விஜய் தெரிவித்தாா். மதுரை பாரபத்தியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்த... மேலும் பார்க்க