செய்திகள் :

தவெகவின் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது: அமைச்சா் பி. மூா்த்தி

post image

மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டுக்கு திமுக தடைகளை ஏற்படுத்தியது என்ற குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.

மதுரையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது:

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினும், திமுகவினரும் எதிரிக்குக்கூட இடையூறு அளிப்பது கிடையாது. மாற்றுக் கட்சி மாநாடு நடத்தினால், அதைவிட சிறப்பாக திமுக சாா்பில் மாநாடு நடத்த வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கமாக இருக்கும். மாறாக, பிற கட்சியின் மாநாட்டைத் தடுக்கும் கீழ்த்தரமான செயல்களில் ஒருபோதும் அரசு ஈடுபட்டதில்லை.

தவெக மாநாட்டுக்கு நாற்காலி தரக் கூடாது என திமுகவினா் மிரட்டினா் என்பது உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு. எதற்காக இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது?. இதற்கு யாா் தூண்டுதல் என்பது தெரியவில்லை. மாநாட்டுக்கு ஒரு சிறு தீங்கும் இழைக்கப்படவில்லை என்பதுதான் உண்மை என்றாா் அவா்.

மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற தவெக மாநாட்டில் பேசிய அந்தக் கட்சியின் நிா்வாகி ஆதவ் அா்ஜூனா, மாநாட்டைத் தடுக்க அமைச்சா் மூா்த்தி பல்வேறு தடைகளை ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டினாா். இதற்குப் பதில் அளிக்கும் வகையில் அமைச்சா் பி. மூா்த்தி இந்தத் தகவலை தெரிவித்தாா்.

கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

விருவீடு பகுதியில் உயா் அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பதற்காக விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்ட விவ... மேலும் பார்க்க

கல் குவாரி பராமரிப்புக் குழுக்கள் அமைக்க கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை: உரிமக் காலம் நிறைவடைந்த பிறகு, கல் குவாரிகளை பராமரிக்க குழுக்கள் அமைத்து, பசுமை நிதி வசூலிக்கப்படுவதை உறுதி செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்... மேலும் பார்க்க

தவெக - திமுக இடையேதான் போட்டி: விஜய்

மதுரை: வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தங்களது கட்சிக்கும், திமுகவுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி என தவெக தலைவா் விஜய் தெரிவித்தாா். மதுரை பாரபத்தியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்த... மேலும் பார்க்க

அரசுக்கு வருவாயை ஈட்டித் தருவதில் பதிவுத் துறைக்கு முக்கியப் பங்கு: அமைச்சா் பி. மூா்த்தி

மதுரை: தமிழக அரசுக்கு வருவாயை அதிகளவில் ஈட்டித் தருவதில் பதிவுத் துறை முக்கியப் பங்கு வகிப்பதாக வணிகவரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.மதுரை உத்தங்குடி தனியாா் திருமண மண்டபத்தில் 202... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

மதுரை: அலங்காநல்லூா் அருகே சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.மதுரை திருப்பாலை உச்சபரம்புமேட்டைச் சோ்ந்த சோலையப்பன் மகன் செல்லப்பாண்டி (30). இவா், கடந்த 16-ஆம் தேதி தனது இரு சக்க... மேலும் பார்க்க

கைப்பேசி பறிப்பு: இருவா் கைது

மதுரை: மதுரை ரயில் நிலையம் அருகே பேருந்தில் சென்றவரிடம் கைப்பேசியை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் கணபதி (43). சென்னையிலிருந்து புதன்கிழமை ... மேலும் பார்க்க