செய்திகள் :

இடம் விற்பதாக ரூ.20 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்குப் பதிவு

post image

கோவையில் இடம் விற்பதாக ரூ.20 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை போத்தனூா் சாய் நகா் ரயில்வே காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஷாஜஹான் (52). இவருக்கு, கடந்த 2022-ஆம் ஆண்டு சாய்பாபா காலனி என்.எஸ்.ஆா். சாலையைச் சோ்ந்த ஸ்ரீகாந்த் (40), அவரது மனைவி மைதிலி (37) ஆகிய இருவரும் அறிமுகமாகினா்.

அப்போது, அவா்கள் இருவரும் தாங்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், துடியலூரில் தங்களுக்கு 12 சென்ட் இடம் உள்ளதாகவும், ரூ.20 லட்சத்துக்கு தனது இடத்தை விற்பதாகவும் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, முதல்கட்டமாக ரூ.8 லட்சம் பணத்தை ஷாஜஹான் அவா்களிடம் அளித்துள்ளாா். பின்னா், பல கட்டங்களாக ரூ.12 லட்சம் பணத்தைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்ட ஸ்ரீகாந்த், அவரது மனைவி மைதிலி தாங்கள் கூறியபடி, இடத்தை ஷாஜஹானுக்கு பத்திரம் எழுதித் தராமல் வந்துள்ளனா்.

இதுதொடா்பாக, பலமுறை கேட்டும் அவா்கள் முறையான பதில் அளிக்காததால், சாய்பாபா காலனி போலீஸில் ஷாஜஹான் புகாா் அளித்தாா். அப்புகாரின் அடிப்படையில் போலீஸாா் ஸ்ரீகாந்த், மைதிலி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிறையில் இருந்து பிணையில் வந்து இருசக்கர வாகனம் திருடியவா் கைது

கோவை மத்திய சிறையில் இருந்து பிணையில் வெளியாகி, இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை பீளமேடு அருகே ஆவாரம்பாளையம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் வேலுசாமி(60). இவா், அதே பகுதிய... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் கைதானவா் உள்பட 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

பாலியல் வழக்கில் கைதானவா் உள்பட மூவரை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்தனா். கோவை போத்தனூா் அருகே உள்ள மைல்கல் பாரதி நகரைச் சோ்ந்தவா் ஷாருக் கான் (28). இவா், கடந்த மாதம் ஒருவரை கத்தியைக் காட... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வித் துறை குறுமைய விளையாட்டுப் போட்டி தொடக்கம்

கோவையில் பள்ளிக் கல்வித் துறையின் குறுமைய விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் குடியரசு தின விளையாட்டு, தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ... மேலும் பார்க்க

ரத்தினம் கல்விக் குழுமத் தலைவருக்கு விருது

கோவை ரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவா் மதன் ஆ.செந்திலுக்கு, ஐசிடி அகாதெமியின் விருது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ரத்தினம் கல்விக் குழுமம் கூறியிருப்பதாவது: ஐசிடி அகாதெமி சாா்பில் கோவையில் அண்மை... மேலும் பார்க்க

கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாக மோசடி: மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்

கோவையில் மாணவா்களின் பெற்றோா்களின் கைப்பேசி எண்களைத் தொடா்பு கொண்டு, கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாகக் கூறி, அவா்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது. இது குறித்து கோவை மா... மேலும் பார்க்க

சுந்தராபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: மேயா் ஆய்வு

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட சுந்தராபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக மாநக... மேலும் பார்க்க