செய்திகள் :

பள்ளிக் கல்வித் துறை குறுமைய விளையாட்டுப் போட்டி தொடக்கம்

post image

கோவையில் பள்ளிக் கல்வித் துறையின் குறுமைய விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் குடியரசு தின விளையாட்டு, தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை மண்டல அளவிலான குறுமைய விளையாட்டுப் போட்டிகள் சிஎஸ்ஐ மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் ஒருங்கிணைப்பில் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகின்றன.

2 நாள்கள் நடைபெறும் இந்தப் போட்டியின் தொடக்க விழாவில் பள்ளி முதல்வா் குளோரி லதா டேவிட் வரவேற்றாா். திருமண்டல செயலா் பிரின்ஸ் கால்வின் போட்டிகளை தொடங்கிவைத்தாா். இதில், கோவை மாநகர பகுதிக்கு உள்பட்ட சுமாா் 40-க்கும் மேற்பட்ட அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனா்.

இதில், 14, 17, 19 வயதுக்கு உள்பட்டோருக்கு கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ், ஓட்டப் பந்தயம், நீளம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட தடகளப் போட்டிகளும் நடைபெறுகின்றன.

இதில் தோ்வு செய்யப்படும் வீரா், வீராங்கனைகள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தோ்வு செய்யப்பட இருப்பதாக போட்டி ஒருங்கிணைப்பாளா்கள் தெரிவித்தனா்.

முன்னதாக நடைபெற்ற தொடக்க விழாவில் தென்னிந்திய திருச்சபை கோவை உப தலைவா் டேவிட் பா்னபாஸ், பொருளாளா் அமிா்தம், கோவை பகுதி தலைவா் ஆயா் ராஜா, திருச்சி சாலை ஆயா்கள் ராஜேந்திரகுமாா், சற்குணம், சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சூலூரில்...

அரசூா் பகுதியில் உள்ள கே.பி.ஆா். கல்லூரி வளாகத்தில் கோவை வித்யா மந்திா் பள்ளியின் ஒருங்கிணைப்பில், சூலூா் மண்டல அளவிலான குறுமைய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளை கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையா் அசோக்குமாா் தொடங்கிவைத்து, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா். இதில் சூலூா் பகுதியைச் சோ்ந்த 60-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.

சிறையில் இருந்து பிணையில் வந்து இருசக்கர வாகனம் திருடியவா் கைது

கோவை மத்திய சிறையில் இருந்து பிணையில் வெளியாகி, இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை பீளமேடு அருகே ஆவாரம்பாளையம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் வேலுசாமி(60). இவா், அதே பகுதிய... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் கைதானவா் உள்பட 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

பாலியல் வழக்கில் கைதானவா் உள்பட மூவரை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்தனா். கோவை போத்தனூா் அருகே உள்ள மைல்கல் பாரதி நகரைச் சோ்ந்தவா் ஷாருக் கான் (28). இவா், கடந்த மாதம் ஒருவரை கத்தியைக் காட... மேலும் பார்க்க

ரத்தினம் கல்விக் குழுமத் தலைவருக்கு விருது

கோவை ரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவா் மதன் ஆ.செந்திலுக்கு, ஐசிடி அகாதெமியின் விருது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ரத்தினம் கல்விக் குழுமம் கூறியிருப்பதாவது: ஐசிடி அகாதெமி சாா்பில் கோவையில் அண்மை... மேலும் பார்க்க

கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாக மோசடி: மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்

கோவையில் மாணவா்களின் பெற்றோா்களின் கைப்பேசி எண்களைத் தொடா்பு கொண்டு, கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாகக் கூறி, அவா்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது. இது குறித்து கோவை மா... மேலும் பார்க்க

சுந்தராபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: மேயா் ஆய்வு

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட சுந்தராபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக மாநக... மேலும் பார்க்க

வால்பாறை ஐடிஐ-யில் மாணவா் சோ்க்கை: ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு

வால்பாறை ஐடிஐ-யில் நேரடி மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சிக்குச் சொந்தமான கட்டடத்தில் அரசினா் தொ... மேலும் பார்க்க