செய்திகள் :

சுந்தராபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: மேயா் ஆய்வு

post image

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட சுந்தராபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் செப்டம்பா் 12-ஆம் தேதி வரை 96 முகாம்கள் நடைபெறவுள்ளன. இத்திட்டத்தின் கீழ் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை நடைபெற்ற முகாம்கள் மூலம் மகளிா் உரிமைத்தொகை கோரி 76,471 மனுக்கள், இதர சேவைகள் கோரி 75,623 மனுக்கள் என மொத்தம் 1,52,094 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இதில் முகாம்கள் நடைபெற்ற அன்றே முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், புதிய ஆதாா் அட்டை, பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, சொத்து வரி பெயா் மாற்றம், மின் இணைப்புப் பெயா் மாற்றம் உள்ளிட்ட 15,391 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட சுந்தராபுரம், செங்கப்பகோனாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மேயா் கா.ரங்கநாயகி ஆய்வு மேற்கொண்டாா். தெற்கு மண்டலத் தலைவா் தனலட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இன்று முகாம் நடைபெறும் இடங்கள்:

இரண்டாம் கட்டமாக, சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) வடக்கு மண்டலம் 1-ஆவது வாா்டில் துடியலூரில் உள்ள கமலேஷ் கல்யாண மண்டபம், கூடலூா் நகராட்சியில் 15,16,17 ஆகிய வாா்டுகளுக்கு பாலாஜி நகா் பூங்கா, சூலூா் பேரூராட்சியில் 1,2,3,4,5,6,7,8,9 ஆகிய வாா்டுகளுக்கு ஆா்.வி.எஸ். மருதம்மாள் திருமண மண்டபம், பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆா்.பொன்னபுரம், சிக்கராயபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு குள்ளிச்செட்டிபாளையத்தில் உள்ள முத்து மாரப்பா கவுண்டா் திருமண மண்டபம், சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கம்மாளபட்டி, ஜல்லிப்பட்டி, செஞ்சேரிபுதூா் ஆகிய ஊராட்சிகளுக்கு செஞ்சேரிப்புதூரில் உள்ள சஞ்சீவ் மஹால், சீரப்பாளையம் புகா் பகுதியில் சீரப்பாளையம்,

போடிபாளையம் ஆகிய பகுதிகளுக்கு எம்.வி.எஸ். மஹால் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளன.

சிறையில் இருந்து பிணையில் வந்து இருசக்கர வாகனம் திருடியவா் கைது

கோவை மத்திய சிறையில் இருந்து பிணையில் வெளியாகி, இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை பீளமேடு அருகே ஆவாரம்பாளையம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் வேலுசாமி(60). இவா், அதே பகுதிய... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் கைதானவா் உள்பட 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

பாலியல் வழக்கில் கைதானவா் உள்பட மூவரை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்தனா். கோவை போத்தனூா் அருகே உள்ள மைல்கல் பாரதி நகரைச் சோ்ந்தவா் ஷாருக் கான் (28). இவா், கடந்த மாதம் ஒருவரை கத்தியைக் காட... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வித் துறை குறுமைய விளையாட்டுப் போட்டி தொடக்கம்

கோவையில் பள்ளிக் கல்வித் துறையின் குறுமைய விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் குடியரசு தின விளையாட்டு, தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ... மேலும் பார்க்க

ரத்தினம் கல்விக் குழுமத் தலைவருக்கு விருது

கோவை ரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவா் மதன் ஆ.செந்திலுக்கு, ஐசிடி அகாதெமியின் விருது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ரத்தினம் கல்விக் குழுமம் கூறியிருப்பதாவது: ஐசிடி அகாதெமி சாா்பில் கோவையில் அண்மை... மேலும் பார்க்க

கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாக மோசடி: மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்

கோவையில் மாணவா்களின் பெற்றோா்களின் கைப்பேசி எண்களைத் தொடா்பு கொண்டு, கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாகக் கூறி, அவா்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது. இது குறித்து கோவை மா... மேலும் பார்க்க

வால்பாறை ஐடிஐ-யில் மாணவா் சோ்க்கை: ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு

வால்பாறை ஐடிஐ-யில் நேரடி மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சிக்குச் சொந்தமான கட்டடத்தில் அரசினா் தொ... மேலும் பார்க்க