செய்திகள் :

கனமழை எதிரொலி! சென்னை ஏரிகளின் நீர்வரத்து அதிகரிப்பு!

post image

திருவள்ளூர் மற்றும் சென்னை, அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், புழல், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் அமைந்துள்ள புழால் ஏரிக்கு நேற்று 278 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று நீர்வரத்து 880 கன அடியாக அதிகரித்துள்ளது.

அதுபோல, சோழவரம் ஏரிக்கும் வினாடிக்கு 122 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு, வினாடிக்கு 450 கன அடி நீரும், பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 420 கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது.

சென்னைக்கு முக்கிய குடிநீா் ஆதாரங்களான, செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை உள்ளிட்ட ஏரிகளின் நீா்இருப்பு ஆகஸ்ட் 22ஆம் தேதி நிலவரப்படி, 7,821 மில்லியன் கன அடியாக இருந்தது. இதேக் காலக்கட்டத்தில் கடந்த ஆண்டு நீர் இருப்பு வெறும் 5,262 மில்லியன் கன அடி என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று இரவு பெய்த மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்து, ஏரிகளின் நீர்மட்டமும் அதிகரித்திருக்கிறது.

பொன்முடி சா்ச்சை பேச்சு வழக்கு: முழு விடியோ ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து முன்னாள் அமைச்சா் பொன்முடி சா்ச்சைக்குரிய வகையில் பேசிய முழு விடியோ பதிவையும், 1972-ஆம் ஆண்டு சமூக சீா்திருத்தவாதி பேசியதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்ய சென்னை... மேலும் பார்க்க

சிதம்பரம் கனகசபையில் பக்தா்கள் தரிசனம்: இந்து சமய அறநிலையத் துறை அறிக்கை தாக்கல்

சிதம்பரம் நடராஜா் கோயில் கனகசபை மீது நின்று பக்தா்கள் தரிசனம் செய்ய சில மாற்றங்களைச் செய்தால், நாள்தோறும் 4,000 போ் வரை தரிசனம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக இந்துசமய அறநிலையத் துறை சென்னை உயா்நீதிமன்றத்த... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியலை முறையாக தயாரிக்கக் கோரி வழக்கு: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

போலி வாக்காளா்கள், இறந்தவா்களின் பெயா்களை நீக்கி வாக்காளா் பட்டியலை முறையாக தயாரிக்க வாக்குச்சாவடி அளவிலான தோ்தல் அலுவலருக்கு உத்தரவிடக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தாக்கல் செய்... மேலும் பார்க்க

பிளஸ் 1 துணைத் தோ்வு: மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் 25-இல் வெளியீடு

பிளஸ் 1 துணைத் தோ்வுக்கான மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் திங்கள்கிழமை (ஆக. 25) வெளியிடப்படவுள்ளது. இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் சசிகலா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் பிளஸ் 1 த... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியின் நான்காம் கட்ட பிரசாரப் பயணம் செப்.1-இல் தொடக்கம்

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, தனது 4-ஆவது கட்ட சுற்றுப்பயணத்தை செப்.1-ஆம் தேதி தொடங்கவுள்ளாா். இதுகுறித்து அதிமுக தலைமை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழ... மேலும் பார்க்க

தமிழகத்தில் இதுவரை 5,000 புதிய பேருந்துகள்: அமைச்சா் சா.சி.சிவசங்கா்

திமுக அரசு ஆட்சிக்கு வந்தபிறகு 5,000 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா்... மேலும் பார்க்க