செய்திகள் :

``விஜய் இத்தனை லட்சம் பேரைத் திரட்டி வெறும் சவடால்களை மட்டுமே அடித்திருக்கிறார்'' - திருமாவளவன்

post image

த.வெ.க மாநாடு, தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வருகை, அதிமுகவின் மீதான திமுகவின் விமர்சனம் குறித்து நேற்று விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.

த.வெ.க மாநாடு

"தமிழக வெற்றிக் கழகம் நடத்தியிருக்கும் இரண்டாவது மாநாடு, வெற்று கூச்சலுக்கும், ஆரவாரங்களுக்கும் அடையாளம்.

உருப்படியாக, எந்தக் கொள்கை கோட்பாடு முழக்கமும் இல்லை. ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை.

திமுக வெறுப்பு... திமுக வெறுப்பு... திமுக வெறுப்பு - இது தான் அந்த மேடையில் உமிழ்ந்த அரசியல்.

விஜய்
விஜய்

ஆட்சிக்கு வருவோம் என்று ஆர்பரித்த பகல் கனவைக் கூச்சல்கள் முழங்கிய முழக்கங்கள் தான் அங்கே காணப்பட்டன.

கட்சி தொடங்கி இவ்வளவு ஆண்டுகள் ஆகியும், இரண்டு மாநாடுகள் நடத்தியும், அந்தக் கட்சியின் கோட்பாடுகளும், செயல்திட்டங்களும் அவர்களுக்கே தெரியவில்லை என்பது அவர்களது வெற்று ஆரவாரத்தில் நமக்கு உறுதியாகிறது.

இத்தனை லட்சம் பேரைத் திரட்டி வெறும் சவடால்களை மட்டுமே அடித்திருக்கிறார். வெறும் திமுக வெறுப்பை மட்டுமே உமிழ்ந்திருக்கிறார் விஜய்.

அவருடைய பேச்சில் ஆக்கப்பூர்வமான எந்தக் கருத்தும் இல்லை, கருத்தியலும் இல்லை.

அமித்ஷா வருகை

அமித்ஷா தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருகை தருகிறார். அவ்வப்போது தாமரை மலரும் என்று குறி சொல்கிறார்.

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை வீழ்த்துவதே எங்களது முதல் வேலை என்று சவடால் பேசுகிறார்.

புதிதாக தோன்றுகிற கட்சியாக இருந்தாலும், பாஜக போன்ற பழைய கட்சிகளாக இருந்தாலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டு மண்ணில் அவர்களின் சதி முயற்சி வெற்றி பெறாது என்பதை மக்கள் உணர்த்துவார்கள்.

அமித்ஷா
அமித்ஷா

அதிமுக மீதான விமர்சனம்

அதிமுக குறித்த விஜய் விமர்சித்துள்ளார். இதற்கு அதிமுக தான் பதில் சொல்ல வேண்டும். நான் எம்.ஜி.ஆரைப் பற்றி சொன்ன உடனேயே எகிறி குதித்தார்கள். ஆனால், இப்போது வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர், அண்ணா, பெரியாரைப் பற்றி மிகவும் கொச்சையாக பேசுகிற பாஜகவை இவர்கள் ஒரு வார்த்தைக்கூட கண்டிக்கவில்லை.

'தற்குறி பழனிசாமி' என்று பேசியவர் அண்ணாமலை. அப்போதெல்லாம் வாயை மூடிக்கொண்டு மௌனித்து கிடந்தார்கள்.

'சமூகத்தில் இப்படி இருக்கிறது' என்று யாரோ சொன்னதை நான் மேற்கோள் காட்டி, இப்படி விமர்சனங்கள் இருந்தாலும் என்று பேசினேன். உடனே, பாய்ந்து, பிராண்டினார்கள்.

இப்போது விஜய் பேசியதற்கு என்ன சொல்வார்கள் என்பதைக் கேட்டு சொல்லுங்கள்" என்றார்.

``வாக்குத் திருட்டைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை'' - பிரதமர் மோடியை சாடிய ராகுல் காந்தி

"வாக்காளர் பட்டியலில் மோசடி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குகள் திருடப்பட்டன" ஆகிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பீகாரில் 16 நாள்கள் நடைபயணம் மேற்கொண்டுள... மேலும் பார்க்க

Doctor Vikatan: நெஞ்சு கரித்தல், எதுக்களித்தல் பிரச்னை; செரிமான மருந்துதான் ஒரே தீர்வா?

Doctor Vikatan: எனக்குப் பல வருடங்களாக சாப்பிட்டதும் நெஞ்சு கரித்தல் பிரச்னையும், உணவு எதுக்களித்தல் பிரச்னையும்இருக்கிறது. பல காலமாக இதற்கு ஆண்டாசிட் சிரப் அல்லது மாத்திரை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன... மேலும் பார்க்க

``தலைவர்கள் இப்படி இருந்தால், ஊழலை எதிர்த்து எப்படி போராட முடியும்?'' - பிரதமர் மோடி

பதவி நீக்க மசோதாபிரதமர், மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர் ஆகியோர் கடுமையான குற்றங்களில் ஈடுப்பட்டதாக கைது செய்யப்பட்டு, 30 சிறையில் இருந்தால் அவர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கான மசோதாவை கடந்த 20-ம் தேதி... மேலும் பார்க்க

Health: `பந்திக்கு முந்து' என்று சொன்னதில் இப்படியொரு ரகசியம் இருக்கா?

உணவு சூடாக இருக்கையில் சாப்பிடுவதே ஆரோக்கியத்துக்கு நல்லது என்கிற சித்த மருத்துவர் செல்வ சண்முகம், தினமும் இருவேளை சூடாக சாப்பிடுவதற்கான வழிமுறைகளையும், 'பந்திக்கு முந்து' என்கிற பழமொழியின் பின்னணியில... மேலும் பார்க்க

USA - India: 2024 தேர்தல்; ``மோடியை தோற்கடிக்க வெளிநாட்டு சதி நடந்ததா?'' -அமெரிக்கா சொல்லும் செய்தி!

அமெரிக்கா நிதியுதவிஅமெரிக்கா, உலகளாவிய ஜனநாயக வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்தில் பல நாடுகளுக்கு நிதியுதவி வழங்குகிறது. இந்தியாவிலும், வாக்குப்பதிவு விகிதத்தை அதிகரிக்க மற்றும் தேர்தல் செயல்முறைகளை வ... மேலும் பார்க்க

மாநாடு சீக்கிரம் முடிந்ததன் பின்னணி என்ன? | Highlights of TVK Vijay Madurai Maanadu | Vikatan

மதுரையில் தவெகவின் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறார் விஜய். மாநாட்டுக்காக தவெக சார்பில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால், வெறும் ஒன்றரை மணி நேரம் மட்டுமே மாநாடு நடந்த... மேலும் பார்க்க