செய்திகள் :

கேரளத்துக்கு வரும் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா! அதிகாரபூர்வ அறிவிப்பு!

post image

மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீன கால்பந்து அணி நட்பு ரீதியான ஆட்டத்துக்கு கேரளத்திற்கு வருவது அதிகாரபூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பினை ஆர்ஜென்டீன கால்பந்து அமைப்பு தனது எக்ஸ் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம். குறிப்பாக கேரளத்தில் மிக அதிகம்.

ஆர்ஜென்டீன அணி நட்பு ரீதியான போட்டிகளை வரும் நவ.10, 18ஆம் தேதிகளுக்கு இடையில் கொச்சியில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ஜென்டீன அணிக்கு லியோனல் ஸ்கலோனி பயிற்சியாளராக இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள அமைச்சர் தனது சமூக வலைதள பக்கத்தில் நவம்பரில் மெஸ்ஸியின் அணி கேரளத்தில் விளையாடுமெனக் கூறியுள்ளார்.

இதற்கு முன்பாக ஆர்ஜென்டீன அணி 2011-இல் கொல்கத்தாவில் நட்பு ரீதியான போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

2022 உலகக் கோப்பையை வென்ற ஆர்ஜென்டீன அணி அடுத்தாண்டு நடைபெறும் உலகக் கோப்பையையும் வெல்லும் முனைப்பில் இருக்கிறது.

மெஸ்ஸியும் இன்டர் மியாமியில் சிறப்பாக விளையாடிவருவது நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.

இது குறித்து ஆர்ஜென்டீன கால்பந்து அமைப்பு கூறியதாவது:

ஆர்ஜென்டீன தேசிய அணி ஸ்கலோனி தலைமையில் இந்தாண்டு இரண்டு நட்பு ரீதியான ஃபிஃபா போட்டிகளில் விளையாடும்.

முதலாவது போட்டி அக்டோபரில் 6-14ஆம் தேதிகளில் அமெரிக்காவில் நடைபெறவிருக்கிறது.

இரண்டாவது போட்டி நவம்பரில் 10-18ஆம் தேதிகளில் அங்கோலாவின் லுவாண்டாவிலும் இந்தியாவின் கேரளத்திலும் விளையாடுவோம் எனக் குறிப்பிட்டுள்ளது.

எதிரணிகள் யார் என்பது இன்னும் முடிவு செய்யவில்லை என அதில் கூறப்பட்டுள்ளது.

Putting speculations to rest, reigning world champions Argentina have announced that they will play a FIFA friendly against an unnamed opponent in Kerala in November this year.

விஷ்ணு விஷாலின் ஆர்யன் ரிலீஸ் அப்டேட்!

நடிகர் விஷ்ணு விஷாலின் ஆர்யன் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ராட்சசன் படத்திற்குப் பிறகு மீண்டும் காவல்துறை அதிகாரியாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். தமிழின் முன்னணி... மேலும் பார்க்க

ஹாரி கேன் ஹாட்ரிக்: அபார வெற்றியுடன் (6-0) சீசனை தொடங்கிய பயர்ன் மியூனிக்!

ஜெர்மனியில் நடைபெறும் புன்டெஸ்லீகா கோப்பையின் முதல் போட்டியில் பயர்ன் மியூனிக் அணி 6-0 என வென்றது. நடப்பு சாம்பியனான பயர்ன் மியூனிக் அணி இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. ஜெர்மனி ஜெயண்ட்ஸ் எனப்பட... மேலும் பார்க்க

தமிழ் தலைவாஸ் முதல்முறையாக கோப்பையை வெல்லும்..! துணை கேப்டன் பேட்டி!

புரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ் அணி முதல் முறையாக கோப்பையை வெல்லும் என அதன் துணை கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் கூறியுள்ளார். புதிய தலைமைப் பயிற்சியாளா் மற்றும் பலப்படுத்தப்பட்ட அணியுடன், புரோ கபடி லீக் 12... மேலும் பார்க்க

நீலம் தயாரிப்பின் பெயரில் போலி ஆடிஷன்கள்!

பிரபல திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின், நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் போலியான ஆடிஷன் அழைப்புகள் விடுக்கப்படுவதாகவும், இதனால் நடிகர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.... மேலும் பார்க்க

விஷால் 35 படத்தில் இணைந்த அஞ்சலி!

நடிகர் விஷாலின் 35-ஆவது படத்தில் நடிகை அஞ்சலி இணைந்துள்ளார். மத கஜ ராஜா படத்திற்குப் பிறகு அஞ்சலி விஷால் உடன் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது. ஈட்டி பட இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் நடிகர் விஷால் ... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் இன்று காலை கோலாகலமாகத் தொடங்கியது.திருச்செந்தூர் கோயில், ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தில், முத... மேலும் பார்க்க