Car: '35 ஆண்டுகள், 100 ஆடம்பர கார்கள்' - ரூ.8500 கோடி மதிப்புள்ள வீட்டை கார் மிய...
பிகாரில் மக்கானா விவசாயிகளைச் சந்தித்து பேசிய ராகுல் காந்தி!
பிகாரின் கத்திஹாரில் உள்ள மக்கானா (தாமரை விதை) விவசாயிகளை மக்களை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று சந்தித்துப் பேசினார்.
பிகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டியுள்ள எதிர்க்கட்சிகள், அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பிகாரில் மாபெரும் பேரணியை ஆக. 17 முதல் ராகுல்காந்தி தொடங்கியுள்ளார்.
அதன் ஒருபகுதியாக, இன்று கத்திஹாரில் உள்ள மக்கானா விவசாயிகளுடன் கலந்துரையாடினார். விவசாயிகளுடன் தாமரை குளத்தில் இறங்கியும் அங்கு மக்கானா பயிர் நடவு செய்வதையும் அவர் பார்வையிட்டார்.
பிகாரில் மக்கானா உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கொண்டுள்ளது மற்றும் இந்தியாவின் மொத்த மக்கானாவில் சுமார் 80 சதவீதத்தை உற்பத்தி செய்கிறது.
முன்னதாக, வெள்ளிக்கிழமை பகல்பூரில் நடந்த வாக்காளர் யாத்திரையில் ராகுலுடன் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைவர் தேஜஸ்வி யாதவ் கலந்துகொண்டார். வரவிருக்கும் தேர்தல் பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கடைசி தேர்தல் என்று கூறினார், நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக வரமாட்டார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi meets Makhana farmers in their farms in Katihar on Saturday during his on-going 'Voter Adhikar Yatra'.