செய்திகள் :

உத்தரகண்ட் மேகவெடிப்பு: 2 பேர் மாயம்! மீட்புப் பணியில் ராணுவம்!

post image

உத்தரகண்டில் சமோலி மாவட்டத்தின் தாராலியில், மேகவெடிப்பால் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க இந்திய ராணுவப் படைகள் களமிறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமோலி மாவட்டத்தின் தாராலியில், நேற்று (ஆக.22) நள்ளிரவு ஏற்பட்ட மேகவெடிப்பால் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. இதனால், அங்குள்ள வீடுகள் மற்றும் கட்டமைப்புகளினுள் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வாகனங்கள் மற்றும் இடிபாடுகள் முழுவதும் நிரப்பியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, தாராலியை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையில் இடிபாடுகள் சூழ்ந்துள்ளதால், அங்கு மீட்புப் படைகள் செல்வதற்கு தாமதமாவதாகக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, தற்போது அங்கு மாநில, தேசிய மீட்புப் படைகள் முடக்கங்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளம் மற்றும் மண்சரிவினால் 20 வயதுடைய பெண் ஒருவர் மற்றும் ஒரு முதியவர் மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் மோப்ப நாய்களின் உதவியுடன் இந்திய ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்திய வானிலை ஆய்வு மையம், உத்தரகண்டின் டெஹ்ராடூன், தெஹ்ரி, பௌரி கார்வால், உத்தரகாசி, சமோலி, ருத்ராபிரயாக், நைனிடல், அல்மோரா மற்றும் உத்தம் சிங் நகர், ரிஷிகேஷ் உள்ளிட்ட ஏராளமான பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: வங்கி மோசடி: அனில் அம்பானி மீது வழக்குப் பதிவு! சிபிஐ சோதனை

Army forces have reportedly been deployed to rescue people affected by floods caused by heavy rains triggered by cloudbursts in Dharali, Chamoli district of Uttarakhand.

சட்டவிரோத பந்தய வழக்கு: கர்நாடக எம்எல்ஏ வீரேந்திரா கைது!

சட்டவிரோத ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பந்தய மோசடி தொடர்பாக சித்ரதுர்காவைச் சேர்ந்த கர்நாடக எம்எல்ஏ கே.சி. வீரேந்திராவை அமலாக்கத்துறை சனிக்கிழமை அதிரடியாகக் கைது செய்தது. பந்தய மோசடி தொடர்பாக அமலாக்கத்துற... மேலும் பார்க்க

ஹிமாசலில் தீவிரமடையும் கனமழை! 339 சாலைகள் மூடல்!

ஹிமாசலப் பிரதேசத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால், அம்மாநிலத்தில் 339 சாலைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹிமாசலப் பிரதேசத்தின், பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. ப... மேலும் பார்க்க

வாரம் ஒன்று.. ஆண்டுக்கு 50 ராக்கெட் ஏவ வேண்டும்: இலக்கு நிர்ணயித்த மோடி!

நாட்டின் நிர்வாகத்தையும் அன்றாட வாழ்க்கையையும் மாற்றுவதில் விண்வெளி தொழில்நுட்பத்தின் பங்கை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். புது தில்லியில் நடந்த தேசிய விண்வெளி தின கொண்டாட்டத்தில் கானொளி வாயிலாக பிரதமர... மேலும் பார்க்க

அயோத்தியா, பிரயாக்ராஜ் தொடர்ந்து பெயர் மாறப்போகும் நகரம் இதுவா?

உத்தரப்பிரதேசத்தில் அயோத்தியா, பிரயாக்ராஜ் நகரங்களைத் தொடர்ந்து அலிகார் நகரின் பெயரை மாற்ற வேண்டும் என்று மாநில துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மௌரியா வேண்டுகோள் வைத்துள்ளார்.ஹிந்து கௌரவ் நாள் கொண்டாட்டத்... மேலும் பார்க்க

வங்கி மோசடி: அனில் அம்பானி மீது வழக்குப் பதிவு! சிபிஐ சோதனை

வங்கி மோசடி வழக்கில், தொழிலதிபர் அனில் அம்பானி மீது சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்திருக்கிறது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மற்றும் அனில் அம்பானிக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது... மேலும் பார்க்க

பிகாரில் மக்கானா விவசாயிகளைச் சந்தித்து பேசிய ராகுல் காந்தி!

பிகாரின் கத்திஹாரில் உள்ள மக்கானா (தாமரை விதை) விவசாயிகளை மக்களை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று சந்தித்துப் பேசினார். பிகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக முறைகேடுகள் நடைபெற்றதாகக் ... மேலும் பார்க்க