செய்திகள் :

``நாங்கள் வெற்றி பெற ஜம்மு & காஷ்மீரில் இருந்து கூட மக்களை அழைத்து வருவோம்'' - கேரளா பாஜக தலைவர்

post image

ஏற்கெனவே பாஜக அரசின் மீதும், தேர்தல் ஆணையத்தின் மீதும் வாக்காளர்களை நீக்குகிறார்கள், அவர்களுக்கு தேவையான வாக்காளர்களைச் சேர்க்கிறார்கள் என்று ஏகப்பட்ட புகார்கள் எழுந்துகொண்டிருக்கிறது.

இதை எதிர்த்து பீகாரில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

சர்ச்சையைக் கிளப்பிய பேச்சு

இந்த நிலையில், கேரளா பாஜகவின் துணைத் தலைவர் B.கோபாலகிருஷ்ணன் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

2024-ம் ஆண்டு திருச்சூர் மக்களவைத் தேர்தலில் சட்டத்திற்குப் புறம்பாக வாக்காளர் சேர்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து கோபலகிருஷ்ணனிடம் கேட்கப்பட்டது.

திருச்சூரில் நடந்தது என்ன?

அதற்கு அவர், "சந்தேகமே இல்லை. நாங்கள் வெற்றி பெறுவதற்காக வாக்காளர்களைச் சேர்ப்போம்.

எங்களுக்கு சாதகமாக இருக்க, தொகுதிகளில் வெற்றி பெற, எங்களது கட்சி ஜம்மு & காஷ்மீரில் இருந்து கூட மக்களைக் அழைத்து வருவோம்.

வாக்கு
வாக்கு

நாளைக்கே அவர்களைக் கூட்டி வந்து, ஓராண்டிற்கு அவர்களை இங்கே தங்க வைத்து வாக்காளர் பட்டியலில் இடம்பெற செய்வோம்.

திருச்சூரில் நாங்கள் போலி முகவரியைக் கொடுத்து வாக்காளர்களை இணைக்கவில்லை. முகவரியின் உரிமையாளருக்கு தெரியாமல், அந்த முகவரியில் வெளியாள்கள் சேர்க்கப்பட்ட ஒன்றிரண்டு வழக்குகள் வேண்டுமானால் இருக்கலாம்" என்று பேசியுள்ளார்.

``அரசியலுக்கு வரும் புது முகங்கள் எல்லோரும் MGR வாரிசு என்கிறார்கள்'' - செல்லூர் ராஜூ

"தமிழக அரசியலில் எத்தனை பேர்தான் தன்னை எம்ஜிஆர் என சொல்வார்கள் எனத்தெரியவில்லை" என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.செல்லூர் ராஜூகடந்த 21 ஆம் தேதி மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் பாஜக, ... மேலும் பார்க்க

``வாக்குத் திருட்டைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை'' - பிரதமர் மோடியை சாடிய ராகுல் காந்தி

"வாக்காளர் பட்டியலில் மோசடி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குகள் திருடப்பட்டன" ஆகிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பீகாரில் 16 நாள்கள் நடைபயணம் மேற்கொண்டுள... மேலும் பார்க்க

``விஜய் இத்தனை லட்சம் பேரைத் திரட்டி வெறும் சவடால்களை மட்டுமே அடித்திருக்கிறார்'' - திருமாவளவன்

த.வெ.க மாநாடு, தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வருகை, அதிமுகவின் மீதான திமுகவின் விமர்சனம் குறித்து நேற்று விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.த.வெ.க மாநாடு"தமிழக வெற்ற... மேலும் பார்க்க

Doctor Vikatan: நெஞ்சு கரித்தல், எதுக்களித்தல் பிரச்னை; செரிமான மருந்துதான் ஒரே தீர்வா?

Doctor Vikatan: எனக்குப் பல வருடங்களாக சாப்பிட்டதும் நெஞ்சு கரித்தல் பிரச்னையும், உணவு எதுக்களித்தல் பிரச்னையும்இருக்கிறது. பல காலமாக இதற்கு ஆண்டாசிட் சிரப் அல்லது மாத்திரை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன... மேலும் பார்க்க

``தலைவர்கள் இப்படி இருந்தால், ஊழலை எதிர்த்து எப்படி போராட முடியும்?'' - பிரதமர் மோடி

பதவி நீக்க மசோதாபிரதமர், மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர் ஆகியோர் கடுமையான குற்றங்களில் ஈடுப்பட்டதாக கைது செய்யப்பட்டு, 30 சிறையில் இருந்தால் அவர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கான மசோதாவை கடந்த 20-ம் தேதி... மேலும் பார்க்க

Health: `பந்திக்கு முந்து' என்று சொன்னதில் இப்படியொரு ரகசியம் இருக்கா?

உணவு சூடாக இருக்கையில் சாப்பிடுவதே ஆரோக்கியத்துக்கு நல்லது என்கிற சித்த மருத்துவர் செல்வ சண்முகம், தினமும் இருவேளை சூடாக சாப்பிடுவதற்கான வழிமுறைகளையும், 'பந்திக்கு முந்து' என்கிற பழமொழியின் பின்னணியில... மேலும் பார்க்க